ஜேர்மனியில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள்!


தியாக தீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபனின் நினைவு தினம் ஜேர்மனியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
செப்ரெம்பர் 15 ஆம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேசவல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள்
நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர் தொடுத்த பார்த்தீபன், மெழுகுதிரியாக தன்னை உருக்கி, தமிழினத்தின் ஒளி விளக்காக மாறிய நாள்.
பன்னிரு நாட்கள் தன்னையே ஆகுதியாக்கி, கடைசியில் மக்களுக்காகவே பசித்த வயிற்றோடு உயிரைத் துறந்த திலீபனை தமிழினம் அவ்வளவு எளிதில் மறந்து போகாது. தங்கள் கண்களுக்கு முன்னே தங்களுக்காக ஒருவன் தன்னுயிரை அணு அணுவாக மாய்த்ததை எவராலும் மறக்க முடியுமா ? இல்லையே !







0 கருத்துகள்:

கருத்துரையிடுக