ஈழத்துப்பித்தன்எழுதிய "7ம் நாள்"

உதடுகள் வெடித்து
பிளந்து கிடந்தன
உறுதி தளராது
கிடந்தான் திலீபன்
இந்திய ஊடகங்கள்
ஈ மொய்ப்பது போல்
மொய்த்து
ஈகி திலீபனின்
கொள்கையை
உரசிப் பார்க்க முயன்று
தோற்றுத் திரும்பினர்
நேற்றைய பேச்சு
காற்றோடு போனதால்
தமிழினம் கலங்கிக்கிடந்தது
இடைக்கிடை
கண் திறந்து
ஈர விழிகளினாலும்
நடுங்கும் குரலாலும்
ஐந்தம்சக் கோரிக்கையை
ஏற்றதாய் எழுத்து மூல
உறுதி வேண்டாது
என்னை வற்புறுத்த
முனையாதீர்
எனச் சொல்லி
ஆழ்ந்த மயக்கத்தில்
அடிக்கடி துயின்று போனான்...


 ஆக்கம் ‎ஈழத்துப்பித்தன்‬

0 கருத்துகள்:

கருத்துரையிடுக