ஈழத்துப்பித்தன்‬ எழுதிய திலீபன் 10ம் நாள் நினைவுடன்


தன் வயிற்றில் போர் 
தொடுத்த தனையன் 
நினைவிழந்து
நீள் துயில் கொள்ள
நீட்டிக் கிடக்கிறான்
நீறுபூத்த நெருப்பான
நெஞ்சோடு மக்கள்
வழியேதும் தெரியாமல்
வாசல் பார்த்துக் 
காத்துக்கிடக்கிறார்கள்
நல்லையின் பெருமணி
நாதமின்றி ஒலித்துக் கிடக்குது
வீரப் பிள்ளையின்
முடிவு இனி எது என்று
அறுதியிட்டாறிற்று
ஈழதேசம் எங்கும்
வீதிவழி மக்கள் குவிந்து
தம் இயலாமையின் வெளிப்பாட்டை 
வெளிப்படுத்த 
யாழ் நகரும் 
முல்லை மண்ணும்
முற்றாக முடங்கிப்போக
கொந்தளித்த மக்கள் மீதினில்
கோர முகம் காட்ட எத்தணித்து
தோற்றுப் போயினர் 
அமைதி காக்க வந்த 
கொடும் படையினர்
எந்த நேரமும் 
எதுவும் நடக்கலாம்
எம் பிள்ளை திலீபன்
எமை விட்டு பிரியலாம்
அமைதியின்றி கழிந்தது
அந்த இரவு...திலீபம்


ஆக்கம்  ஈழத்துப்பித்தன்‬ 



0 கருத்துகள்:

கருத்துரையிடுக