மீண்டும் எம் இனம் போராடும் என்பதை வலியுறுத்தியுள்ளனர்

ஒரு அடிபட்ட இனம் அதுவும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளால் ஒடுக்கப்பட்ட இனம் மீண்டு எழுவது என்பது ஒரு சாதாரண விடயம் அல்ல. அதுவும் வெறும் ஏழு ஆண்டுகளில் மக்கள் சக்தி நிரூபிக்கப்பட்டது என்பது எம் வரலாற்று சாதனையே. அடிபட்டு மண்ணில் விழ்ந்தாலும் மீண்டும் எம் தமிழன் போராடுவான் என்பதை எமது சமூகம் இன்று எடுத்துயம்பி இருப்பது சிங்கள அரசு மட்டுமல்ல சர்வதேசமும் அதிர்ச்சி கண்டிருப்பதை காணலாம்.
தமிழ் மக்களின் தலைவர்களாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பலர் சிங்கள அரசின் விசுவாசிகளாக இருக்கும் இத் தருணத்தில் அவர்கள் இந்த பேரணியை தவிர்த்திருந்த நிலையில் மக்களாக முன் வந்து ஒரு மாபெரும் பேரணியை நடாத்தி இருப்பது என்பது வரலாற்று பதிவே.
இந்த போராட்டத்தின் போது முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படப்போவதில்லை. ஆனாலும் மீண்டும் எம் இனம் போராடும் என்பதை வலியுறுத்தி இருப்பது மகிழ்ச்சி

 பவித்ரா நந்தகுமார்,








0 கருத்துகள்:

கருத்துரையிடுக