நெடுந்தீவு தனு எழுதிய திலீபன் ஒரு தீ


திலீபா
நீ ஒரு தீபம்
திலீபா
நீ ஒரு வீரன்

அகிம்சையால்
உலகை திருப்பிய
திலீபன் நீ

எமக்காக
உன்னை உருக்கிய
மெழுகு நீ

எத்தனை
கனவுகள் கண்டாய்
அண்ணா..!

சுதந்திர
உரிமை கண்டாய்
நித்திலம் எமது
என்றாய்...

கயவரே
அடங்கு என்றாய்
மாணவரே
எழுக என்றாய்...

மக்களே
ஒன்று படுங்கள்
என்றாய்...

அண்ணண்
வழித்தடம்
நிலைக்கும் என்றாய்...

பசிக்குது
அண்ணா இப்போ
மீண்டும் மீண்டும்
மிகையாக பசிக்குதண்ணா...

தியாக நரம்புகள்
முறுக்கேறி
கிள்ளுது அண்ணா...

வீரன் நீ
தியாகி நீ
மாவீரன் நீ
அடிமை விலங்கொடிக்க
கிளர்ந்த புலி நீ...

வணங்குகின்றோம்
வாழ்த்துகின்றோம்
வானுயர எம் குரல்களை
உயர்த்துகின்றோம்...

எமது தாகம்
புலிகளின் தாகம்
தமிழரின் தாகம்
"தமிழீழ தாயகம்"
 
  ஆக்கம் நெடுந்தீவு தனு
 
 
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக