“எழுக தமிழ்” மீண்டும் தமிழ் மக்களின் எழிர்ச்சியின் பாரிய வெற்றிக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வாழ்த்து!


“எழுக தமிழ்” மக்கள் பேரணியானது தமிழீழ விடுதலைப்போராட்டம் ஒடுக்கபட்ட பின்னர் தமிழ் மக்கள் தாமாக கட்சிகளைக் கடந்து மிகப்பிரமாண்டமாக ஒன்றிணைந்த தமது எழிர்ச்சியை சிங்கள அரசாங்கத்திற்கும் வெளி உலகத்திற்கும் மிகப் பிரமாண்மாக எடுத்து காட்டியுள்ளனர்.
முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் அவர்கள் தலைமையிலும் தமிழ் மக்கள் பேரவையின் தலைமையிலும் ஒன்று கூடிய மக்கள் அனைவரும் ஒற்றுயைமாக தமது கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக இலங்கையின் எதிர்க்கட்சி தலைவரினதும் அவரது தமிழரசுக்கட்சினரின் எதிர்பையும் மீறி, தாமாக மக்கள் தமது ஒன்றிணைவைச் செய்து காட்டியுள்ளனர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள பொது அமைப்புகள், பலகலைக் கழகம் ஆகியனவை தமது பூரண ஒத்துளைப்பினை வளங்கியதோடு, இன்று யாழ் நகரமே கடைகள் அனைத்தையும் அடைத்து பேரணிக்கான தமது அதரவினைத் தெரிவித்துள்ளனர்.
எமது இனத்தின் விடுதலை வேண்டிய பயணத்தின் ஒரு முக்கிய மைல் கல்லாக இது நிச்சயம் இருக்கும், சிங்கள பேரினவாத அரசாங்கத்திற்கும், இணக்க அரசியல் செய்யும் தமிழ்த் தலைமைகளுக்கும் இப்பேரணியின் பாரிய வெற்றியானது நிச்சயம் பேரிடியாகவே அமைந்திருக்கும். அத்துடன் வெளிநாடுகளும் தமிழ் மக்களின் எண்ண ஓட்டத்திரைன புரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பத்தினையும் இது ஏற்படுத்தி கொண்டுள்ளது.
புலம் பெயந்த மக்களின் பேராதரவும் இப்பேரணியின் வெற்றிக்கு நிச்சயமாக காரணமாக இருந்துள்ளது.
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பும் இப்பேரணிக்கு தமது ஆதரவினை நல்கியிருந்தது. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் உதவியுடன் பேரணியில் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்காக தண்ணீர்ப் போத்தல்களையும் களத்தில் கொடுத்தும் உதவி உள்ளது
அத்தோடு இப்பேரணிக்கு தமது ஆதரவினையும், பங்களிப்பினை நல்கிய அனைத்து அமைப்புக்கள் மற்றும் தமிழ் மக்களுக்கும் எமது தமது மனமான்ற நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக