* “நித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே
தலைவா! எத்தனை துயர்வந்தும் உனைத் தேடுதே! தமிழ் ஈழத்தின் தலைமகனே! தமிழ்
இனத்தின் தலைமகனே! நித்தமும் என் மனம் உந்தன் முகம் தேடுதே தலைவா…எத்தனை துயர்வந்தும் உனைத் தேடுதே தலைவா”…!!!
* “தமிழ் ஈழப் போர் என்பது வேலுப்பிள்ளை!
பார்வதியின்! வீரமகன் பிரபாகரன் மூட்டிய நெருப்பு…இந்தப் போராட்டம்
தமிழீழம் மீட்கும் வரை தொடரும்”…!
* “நாம் ஆடிய ஆட்டம் என்றும் அடங்காது – வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிக் கூட்டம் என்றுமே உறங்காது”…!
* “நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை! நாம் தனித் தமிழ் ஈழம் வென்று நந்திக்கடலில் மீண்டும் நீந்துவோம்”…!
* “நாம் தயங்க மாட்டோம்…எமது தமிழ் ஈழ மண்ணை எம் தானைத் தலைவனின் தலைமையில் மீட்கும் வரை நாங்கள் அடங்க மாட்டோம்”…!
எம் தானைத் தலைவனின் தலைமையில்
எத்தனை…எத்தனை தமிழீழ விடுதலைப் புலி வீரர்கள்! வீராங்கனைகள்!
வீழ்ந்திட்டபோதிலும் அச்சமென்பதே அற்பமுமின்றி உங்கள் உயிர்களை துச்சமென
நினைத்து நீங்கள் இச்சைகொண்ட எமது தமிழ் ஈழத் தாய் நாட்டிற்காய் மண்ணில்
சரிந்தீர்கள் எம் மாவீரர்களே! எம் மாவீராங்கனைகளே!
* “நீறுபூத்த நெருப்பாய் உள்ள எமது வலிகள்! உணர்வுகள்! வெகுவிரைவில் பீறிட்டு எரிமலையாக வெடிக்கும்”…!!!
தமிழ் ஈழத் திருநாட்டின் விடுதலைப்
போராட்டத்தில் ஏற்படும் வெற்றிகளுக்கும்! வீரசாதனைகளுக்கும்! பின்னல் ஒரு
இரத்த காவியம் நிலவிக் கொண்டே இருக்கின்றது. இளமையான இனிமையான வாழ்க்கைப்
பருவத்தையுடைய எம் தோழர்கள்! எம் தோழிகள்! ஒவ்வொருவரினதும் வீர தீரங்களும்,
வீரத் தற்கொடைகளுமே தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் உறுதியான
படிக்கற்களாகும் இன்றுள்ள போராட்டத்தின் அதியுன்னத வளர்ச்சிப்பாதையில்
நின்று நாம் ஏறிவந்த கடினமான, கரடு முரடான பாதையை திரும்பிப் பார்க்கும்
போது எம்முடன் ஒன்றாகவந்த பல உயிர்களைக் காணவில்லை.
எம் உயிரிலும் இனிய மக்கள், எமக்கு உயிரான
எம் தோழர்கள்…தோழிகள் என்று நிறைய உயிர்களை இழந்து விட்டோம். இவர்களை நாம்
தேடும் போது தமிழ் ஈழ மக்கள் ஒவ்வொருவரினதும் உயிரின் ஒளியாகிய தமிழ் ஈழ
இலட்சியத் தீபத்தில் அவர்களைப் பார்க்கின்றோம். எம் உயிர்
தோழர்காளையும்…தோழிகளையும் நாம் நிச்சியமாக சென்றடைவோம் என்பதில் எவ்வித
ஐயமும் இல்லை. அப்போது நாம் மானசீகமாக, ஆத்ம ரீதியாக ஒன்றை
உணர்ந்திருப்போம்.
* “காலம் எமக்கென்றொரு பணியைத்
தந்திருக்கிறது…இது வீரவரலாறாகிப் போன எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப்
புலிகளின் மாவீரச் செல்வங்கள் தம் இறுதிக் கணத்தில் உச்சரித்த வீர
வார்த்தைகள் இவை”…!
* “எம் தானைத் தலைவனின் தமிழீழ விடுதலைப்
புலிகளின் வரிப்புலிக் கோடுகள் எப்போதும் வறுமைக் கோடாய் ஆகாது – நம்
கண்களில் எறும்புகள் மொய்த்தாலும் எம் தமிழ் ஈழக் கனவுகள் செத்துப்
போகாது”…!
* “எமது தமிழீழ வீர மண்ணே!
முள்ளிவாய்க்கால் வீர மண்ணே! உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்? தமிழீழ
எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்…பெரும் துரோகத்தனங்களையும்
மன்னிக்குமா எம் நெஞ்சம்? என்றும் மறக்குமா எமது நெஞ்சம்?.?.?
* “எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்களே…மாவீராங்கனைகளே உங்களை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்”…!
* “எம் அண்ணனின் அணியில் தமிழீழ விடுதலைப் புலியாய் அலையெனத்திரண்டீர்கள் எம் புலி மாவீரர்களே…மாவீராங்கனைகளே”…!
* “எமது தமிழீழத் தாய் மண்ணுக்காக மடிந்தவர்கள் எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்கள்…மாவீராங்கனைகள்”…!
இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின்
விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத்
தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்…மாவீராங்கனைகளையும், எமது
மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை
தெரிவித்துக் கொள்கின்றேன்.
– பா.பாலா
மாவீரர் துயிலுமில்லம் வேண்டும் என நல்லிணக்க பொறிமுறை செயலணிக்குழுவினரிடம் மக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
30-07-2016 இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இரண்டாம் நாள் அமா்வின் போதே இக்கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
அவா்கள் மேலும் கோரியுள்ளதாவது,
நாம் இறந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் எமது மனதில் உள்ள
சோகங்களை வெளிக்காட்டவும் எமக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் வேண்டும்
எனவும் அதுவும் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதாக வெற்றிவிழா
கொண்டாடப்படுகின்ற மேமாதம் பதினெட்டாம் திகதியே நாம் அவர்களுக்குஅஞ்சலி
செலுத்தும் நாளாகவே பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுகையில்,
இறுதி யுத்தத்தில் நடைபெற்ற குற்றச்செயல்களை செய்தவர்கள் இனங்காணப்பட்டு
அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் இவ் விசாரணைகளை
மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பான
பிரதிநிதிகளும் இணைந்து நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதுடன் இவ்
விசாரணைகளுக்காக அமைக்கப்படுகின்ற அலுவலகங்கள்எமது கிளிநொச்சி மண்ணிலேயே
அமைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
மட்டு கரடியனாறு அரசியல்துறை செயலகம்(தேனகம்) மீது கடந்த யூலை.29.2006
நடத்தப்பட்ட சிறிலாங்க கீபீர் விமானத் தாக்குதலில் விரச்சாவடைந்த
லெப்.கேணல் தமிழ்ச்செல்வன், மேஜர் கவி, மேஜர் அரிகரன், கப்டன்
அனலி/செஞ்சுடர், கப்டன் ஊரவன், 2ம் லெப்.மதிசுதன், 2ம் லெப்.சுஜீவன்,
கிராமியப்படை வீரர் லோகிதன் ஆகிய எட்டுப் போராளிகளின் 16ம் ஆண்டு நினைவு
நாள்இன்று.
ஒவ்வொரு முறையும் களமுணைகளில் போராளிகள் வீரச்சாவு அடையும்போது அவர்கள் உதடுகள் உச்சரிக்கும் கடைசி வார்த்தைகள் என்ன தெறியுமா?
உலக வல்லாதிக்க நாடுகள் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆளுகின்ற நோக்கில்
தமிழ் மக்களுக்காக போராடுகின்ற தமீழீழவிடுதலைப் புலிகளை முற்று முழுதாக
அழித்தொழிக்கின்ற நோக்கில் செயல்படும் சிங்கள இனவாத அரசுடன் கூட்டுசேர்ந்து
கொண்டு புலிகளுக்கு தடைமேல் தடை போட்டார்கள் ஒவ்வொரு முறையும் அந்த தடையை
புதுப்பித்து அதை நீட்டிப்பதிலும் அவர்கள் பின் நிற்கவில்லை
அது மட்டுமா? ??
புலிகளை அழித்தொழிக்க
இராணுவ வீரர்களை அனுப்பி வைத்தார்கள்,
ஆயுதங்களை வாரி வாரி வழங்கினார்கள்,
போர் விமானங்களை கொடுத்தார்கள்,
கப்பல்களை கொடுத்தார்கள்,
ரேடார் கருவிகளை கொடுத்தார்கள்,
விமான ஓடுபாதையை சரிசெய்து கொடுத்தார்கள்,
கோடி கோடியயாய் நிதிஉதவி செய்தார்கள்
இன்னும் பல……..
இதில் இந்தியா முதலிடம்
வேற நாடுகள் பெரிய கனரக ஆயுதங்களை கொடுத்துவிடக்கூடாது என்று நாங்கள் சிறியரக ஆயுதங்களை கொடுக்கிறோம் என்று விளக்கம் வேறு
அண்ணண் பிரபாகரனுக்கு யார் என்ன கொடுத்தார்கள்? ??
ஆயிரமாயிரம் போராளிகள் அவருக்காக அவர்கொண்ட இலட்சியத்திற்காக உயிரை
கொடுத்தார்கள் உலகநாடுகள் கொடுத்த அனைத்தும் அவர்கள் மாறி மாறி போட்ட
தடைகளும் விடுதலைப் புலிகளின் மனோபலத்திற்க்கு முன்னால் தோற்றுப்போனது.
ஒவ்வொரு முறையும் களமுணைகளில் போராளிகள் வீரச்சாவு அடையும்போது அவர்கள் உதடுகள் உச்சரிக்கும் கடைசி வார்த்தைகள் என்ன தெறியுமா?
அண்ணை பத்திரம்,அண்ணை பத்திரம்,அவர் கரத்தை வலுப்படுத்துங்கள் என்பதுதான் அது
பிரபாகரன் போன்று தமிழை நேசித்த தலைவனும் கிடையாது
பிரபாகரன் போன்று தமிழர்களை நேசித்த தலைவனும் கிடையாது
பிரபாகரனை போன்று தமிழர்கள் நேசித்த தலைவனும் கிடையாது
பிரபாகரனை போன்ற ஒரு வீரனை இனி எழுதப்படபோகும் வரலாறுகளும் தரிசிக்க போவதில்லை……
-பிரபாசெழியன்.
முதல் முறையாக சுதுமலையில் பிரபாகரன் மக்கள்
தோன்றினார்!! : பல்லாயிரக் கணக்கான மக்கள் சுதுமலையில் கூடினர்!
(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை – 95)
பிரபாகரனின்
முடிந்த முடிவு தமிழீழம் தான். ஒப்பந்தத்தை பிரபாகரன் மனப்பூர்வமாக
ஏற்கவில்லை. நிர்ப்பந்தம் காரணமாகவே ஏற்றுக்கொண்டார் என்ற செய்தி
கருணாநிதிக்குக் கிடைத்தது.
• ஆயுத ஒப்படைப்பு விடயத்திலும் ஒரு தந்திரம் செய்தார்கள் புலிகள் இயக்கத்தினர்.
•சுதுமலையில் பிரபா
பிரபாகரன் சுதுமலையிலிருந்து தான் ஹெலிகொப்டர் மூலமாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதே சுதுமலையில் ஆகஸ்ட் 2ம் திகதி பிரபாகரனை கொண்டுவந்து இறக்கியது இந்திய ஹெலிகொப்டர்.
சுதுமலையில் பிரபாகரன் இறங்கியபோது யாழ் குடாநாடெங்கும் புலிகள் இயக்கத்தினரால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சந்திகள் தோறும் ஆயுதம் தாங்கிய புலிகள் இயக்க உறுப்பினர்கள்
பாதுகாப்புபுக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஊடங்கு உத்தரவை அமுல்படுத்தும்
பொறுப்பு சங்கரிடம் ஒப்படைக்கப்பட்டிந்தது.
சுதுமலையில் இறங்கிய பிரபாகனை இந்தியப் படையினர் தமது கவசவாகனமொன்றில்
ஏற்றிச் சென்றனர். பிரபாகரனோடு அப்போது தமிழ்நாட்டிலிருந்து கிட்டுவும்
வந்திருந்தார்.
புலிகள் இயக்க அலுவலகத்தில் பிரபாகரனை மாத்தையா வரவேற்றார்.
ஆயுதங்களை ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு புலிகள் இயக்கத்திற்குள் அதிருப்திகள் ஏற்பட்டிருந்தன.
திருமலை மாவட்டத் தளபதி புலேந்திரன் ஆயுத ஒப்படைப்புத் தொடர்பாக மனச் சோர்வடைந்தவராகக் காணப்பட்டார்.
திருமலையில் உள்ள நெருக்கடிகள் தீரவில்லை. இந்நிலையில் ஆயுதங்களை ஒப்படைப்பது சரியாக இருக்காது என்றார் புலேந்திரன்.
ஆயுத ஒப்படைப்பு விடயத்தில் பிரபாகரனுக்கு விருப்பம் இருக்கவில்லை. ஆயினும் இந்தியாவோடு பேச்சில் உடன்பாடு தெரிவித்தாயிற்றே.
எனவே முதல் கட்டமாக ஒரு தொகுதி ஆயுதங்களை ஒப்படைக்கலாம். அதன்பின்னர்
சூழ்நிலையைப் பார்த்து முடிவு செய்யலாம் என்று தீர்மானித்தார் பிரபாகரன்.
ஆயுத ஒப்படைப்பு
ஆயுத ஒப்படைப்பு விடயத்திலும் ஒரு தந்திரம் செய்தார்கள் புலிகள் இயக்கத்தினர்.
ஏனைய இயக்கங்களை தடைசெய்த போது கைப்பற்றிய ஆயுதங்களில் பாவனைக்கு உதவாதவை பல இருந்தன. ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
இயக்கத்திடம் கைப்பற்றிய மோட்டார் ஷெல்கள் பார்வைக்குப் பொலிவாக
பெருமளவில் இருந்தன. அவை உத்தரவாதம் இல்லாதவை என்பதால் பாவிக்கப்படாமல்
கிடந்தன. புலிகள் இயக்கத்தினரிடமும் பாவனைக்கு உதவாக ஆயுதங்கள் இருந்தன.
அவற்றையெல்லாம் ஒன்றுதிரட்டி அவற்றோடு சில நல்ல ஆயுதங்களையும் கலந்து ஒப்படைக்கத் திட்டமிட்டனர் புலிகள்.
ஆகஸ்ட் 6ம் திகதி பலாலி இராணுவத் தளத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கச் சென்றார் யோகி.
புலிகள் இயக்க முக்கிய தளபதிகள் எவரும் செல்லவில்லை. யோகியைத்தான் அனுப்பி வைத்தனர்.
ஆயுத ஒப்படைப்பின் அடையாளமாக தனது பிஸ்டலை ஜெனரல் சேபால ஆட்டிக்கலவிடம் ஒப்படைத்தார் யோகி.
அதனைத் தொடர்ந்து கொண்டு சென்ற ஏனைய ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.
தொலைக்காட்சிக்காரர்களும், புகைப்படப்பிடிப்பாளர்களும் ஆயுத ஒப்படைப்பைப் படமாக்கினார்கள்.
பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் ஆயுத ஒப்படைப்புப் பற்றிய செய்திகளை பத்திரமாகக் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.
‘கிட்டத்தட்ட பெரும்பாலான ஆயுதங்களையும்
ஒப்படைத்துவிட்டார்கள் போலத் தான் இருக்கிறது’ என்றெல்லாம்
ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆயுதங்களைப் பொறுப்பெடுத்தவர்களுக்கும், ஒப்படைத்த புலிகள் இயக்கத்தினருக்கும் தான் அந்த ஆயுதங்களின் தரம் பற்றிய இரகசியம் தெரியும்.
இலங்கை அரசாங்கத்துக்கு புலிகள்
முதற்கட்டமாக ஒப்படைத்த ஆயுதங்களின் தரம் தெரிந்தாலும் அது பற்றி வெளியே
சொல்லமுடியாத தர்மசங்கட நிலமை.
வெளியே சொன்னால் ஒப்பந்த எதிர்ப்பாளர்களுக்கு மெல்ல அவல் கொடுத்த மாதிரியாகிவிடுமே.
படமெடுக்க பொலிவாகத் தெரிகிறதே இப்போதைக்கு அது போதும் என்ற நிலையில் தான் இருந்தது அரசாங்கம்.
புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்ததைத் தொடர்ந்து ஏனைய இயக்கங்களும் ஆயுதங்களை ஒப்படைக்க தமது பிரதிநிதிகளை அனுப்பினார்கள்.
ஆயுத ஒப்படைப்போடு வடக்கு-கிழக்கில் காலூன்றிவிடவேண்டும் என்பதுதான் ஏனைய இயக்கங்களின் நோக்கம்.
அந்த நோக்கத்தை எப்படியாவது முறியடித்துவிடவேண்டும் என்பதில் புலிகள் இயக்கத்தினரும் கவனமாக இருந்தனர்.
இந்தியப் படையினரின் வருகையோடு படையினர் ‘ஒப்பரேசன் லிபரேச’னில் நிலை கொண்ட பகுதிகளில் இருந்து வெளியேறி முன்னைய முகாம்களுக்குத் திரும்பினர்.
சுத்தப்படுத்தல்
யாழ் கோட்டை இராணுவ முகாம் முன்பாக இருந்த மிதிவெடிகளை அகற்றும் பணியில் இந்தியப்படையினர் ஈடுபட்டனர்.
அந்தப் பணியில் இந்தியப் படைவீரர்கள் சிலர் மிதிவெடியில் சிக்கிப் பலியானார்கள்.
அந்தச் செய்தி இந்தியப் படை மீது மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியது.
மிதிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுக் காயமடைந்த இந்தியப் படை
வீரர்கள் யாழ் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச்
சேர்க்கப்பிக்கப்பட்டனர்.
விபரம் அறிந்து பொதுமக்கள் பலர் மருத்துவமனைக்கு முன்னர் திரண்டு விட்டனர்.
காயமடைந்த படைவீரர்களுக்கு இரத்தம் வழங்குவதற்காகவே மக்கள் தாமாக முன்வந்து சென்றிருந்தனர்.
இத்தனைக்கும் இரத்தம் தேவையென்று வேண்டுகோள் எதுவும் விடுக்கப்படவில்லை. மக்களின் கரிசனை இந்தியப் படையினரை நெகிழவைத்தது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு இலங்கையில் தென் பகுதியில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
ஒப்பந்தம் தமிழ் மக்களுக்குச் சாதகமானது என்ற எண்ணம்தான் எதிர்ப்புக்கான முக்கிய காரணமாக இருந்தது.
இதே சமயம் தமிழ் நாட்டிலும் ஒப்பந்தத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற ஆரம்பித்தன.
ஒப்பந்த்துக்கு எம்.ஜீ.ஆரும் ஆதரவு என்பதால், ஒப்பந்தம் அநீதியானது
என்று பிரசாரம் செய்வது தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு – அவரது சொந்த
அரசியல் நலனுக்கு ஏற்றதாக இருந்தது. பிரபாகரனின் முடிந்த முடிவு தமிழீழம்
தான். ஒப்பந்தத்தை பிரபாகரன் மனப்பூர்வமாக ஏற்கவில்லை. நிர்ப்பந்தம்
காரணமாகவே ஏற்றுக்கொண்டார் என்ற செய்தி கருணாநிதிக்குக் கிடைத்தது. தீக்கிரையான பிரதிகள்
தமிழ் நாட்டில் ஒப்பந்தத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதை புலிகளும் விருமிபினார்கள்.
கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்துக்கும் பிரபாகரனின்
தெரியப்படுத்தப்பட்டது. திராவிடர் கழகத்தோடு நெருக்கமான தொடர்பு
வைத்திருந்தவர் பேபி சுப்பிரமணியம். அவர்தான் புலிகள் இயக்க அரசியல்
செயலாளராகவும் இருந்தவர்.
இந்திய-இலங்கை ஒப்பந்தப் பிரதிகளை தீக்கிரையாக்கும் போராட்டம் ஒன்றை
நடத்தியது திராவிடர் கழகம். மதுரையில் நெடுமாறனும் ஒப்பந்தப் பிரதிகளை
தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க. எடுத்த நிலைப்பாடு கொஞ்சம் சுவாரசியமானது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்து பண்டிருட்டி ராமச்சந்திரனும், நெடுஞ்செழியனும் கருத்து வெளியிட்டனர்.
அ.தி.மு.க. அமைச்சரவையில் இருந்த காளிமுத்து ஒப்பந்தத்தை எதிர்த்து
கூட்டங்களில் பேசினார். இரண்டு கருத்துக்களையும் எம்.ஜி.ஆர். அனுமதித்தார்.
மத்திய அரசை திருப்திப்படுத்த பண்டிருட்டி ராமச்சந்திரன், நெடுஞ்செழியன்
ஆகியோரின் கருத்து பயன்பட்டது. தி.மு.க.வுக்கு ஈடுகொடுக்க காளிமுத்துவின்
பேச்சுக்கள் பயன்பட்டன.
இதனைக் கிண்டல் செய்து ‘துக்ளக்’ சஞ்சிகை ஒரு கார்டூணை வெளியிட்டிருந்தது.
எம்.ஜி.ஆருக்கு ஆறு முகங்கள். அந்த ஆறு முகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணியைச் செய்வது போல கிண்டலடித்திருந்தார் சோ.
ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர் எதிர்க்கவில்லை. ஆனாலும் பிரபாகரனுடன் இருந்த தனது நல்லுறவை எம்.ஜி.ஆர். துண்டிக்கவுமில்லை.
சென்னைக் கடற்கரையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ராஜீவ் காந்தியும்-எம்.ஜி.ஆரும் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் ராஜீவ் எம்.ஜி.ஆரைப் பற்றி போற்றிப் பேசினார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக எம்.ஜி.ஆர்தான் காரணம் என்று பாராட்டினார் ராஜீவ்.
தமிழகத்தில் ஒப்பந்தத்துக்கு எதிரான எதிர்ப்புக்களைப்
பலவீனப்படுத்தவும், நெருங்கிவந்த தேர்தலுக்கு ஒப்பந்தப்பலனை வைத்து தமிழக
மக்களின் ஆதரவைத் திரட்டவுமே அக்கூட்டம் நடத்தப்பட்டது.
எம்.ஜி.ஆரின் கரத்தோடு தனது கரத்தைக் கோர்த்து, கூட்டத்தின் முன்னர் கரங்களை உயர்த்துக்காண்பித்தார் ராஜீவ் காந்தி.
முல்லைத்தீவு இராணுவத் தளம் மீதான தாக்குதல் 18.07.96 அன்று அதிகாலையில் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
‘ஓயாத அலைகள்’ என பிரபாகரனால் பெயர் சூட்டப்பட்ட தாக்குதல் நடவடிக்கை
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் மிகப்பாரிய வெற்றியாக அமைந்தது.
1991 இல் ஆனையிறவு இராணுவமுகாம் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். ‘ஆகாய கடல் வெளிச் சமர்’ என்று அழைக்கப்பட்டது.
கடல்வழியாக தரையிறங்கி அரச படைகள் புலிகளின் முகாம் முற்றுகையை முறியடித்தன.
கடற்புலிகள் அமைப்பு பலமாக இன்மையினால் கடல் வழியாக படையினர் தரையிறங்கியதை புலிகளால் தடைசெய்ய முடியவில்லை.
முல்லைத்தீவு ‘ஓயாத அலைகள்’ தாக்குதலில் புலிகளின் ‘கடற்புலிகள்’ முக்கிய பங்கை வகித்தனர்.
கடற்பரப்பில் கடற்புலிகளின் வெடிகுண்டுப்படகுகள் அலைந்து திரிந்தன.
கடற்பரப்பில் கடற்புலிகள் ஏற்படுத்திய தடைகள் காரணமாக வான் வழியாக படைகள்
தரையிறக்கப்பட்டன.
கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும், கடற்படையினருக்கும் இடையே கடும் சமர் இடம்பெற்றது.
தரைச்சமரைவிட ஆபத்தானது கடற்சமர். பரந்த கடலில் பதுங்கிக்கொள்ளவோ, போரை
ஆரம்பித்துவிட்ட பின்னர் சுலபமாக பின்வாங்கிச் செல்லவோ வாய்ப்பிருக்காது.
முல்லைத்தாக்குதலில் 19ம் திகதி மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற கடற்சமரின் சில காட்சிகள் இங்கே விரிகின்றன.
முல்லைத்தீவு முகாமில் புலிகளின் முற்றுகைக்கு உள்ளான படையினருக்கு உதவ விரைந்து செல்கிறது ‘ரணவிரு’ பீரங்கிக் கடலூர்தி.
கடற்புலிகள் தாக்கலாம்.
கடற்கரும்புலிகள் மோதவரலாம்
அதனை எதிர்பார்த்து பீரங்கிகள் வாய்திறந்து காத்திருக்கின்றன.
‘ரணவிரு’ கடலில் செல்ல, அதற்கு மேலாகப் பறந்து ஹெலிகொப்டர் வான்வழிப்பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தது.
‘ரணவிரு’ கடற்கரையை நெருங்கத்தொடங்கியது. இன்னமும் கடற்கரையிலிருந்து இரண்டு கடல்மைல் தூரம்தான்.
ஆனால் கடற்படையினர் எதிர்பார்த்தது போலவே கடற்புலிகளது படகுககள் ரணவிருவை குறிவைத்து விரைந்து வருகின்றன.
‘ரணவிரு’வின் பீரங்கிகள் முழங்கத் தொடங்குகிறது. ரணவிருவை கடற்குலிகள்
நெருங்கமுடியாதவாறு வேட்டுக்களால் கப்பலைச் சுற்றி தடுப்புச் சுவர்
எழுப்பப்படுகிறது.
கடற்புலிகளின் படகுகளில் இருந்து ரணவிருவை நோக்கி தாக்குதல் நடத்தப்படுகிறது.
ஹெலிகொப்டரை நோக்கியும் கடற்புலிகளது படகில் இருந்து சுடப்படுகிறது.
ஹெலிகொப்டர் மேலே உயர்ந்து பறக்கத்தொடங்குகிறது. கடற்புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணை இருக்கலாம். இருந்தால் ஹெலி சுடப்படலாம்.
ஹெலிகொப்டரை காப்பாற்றுவதற்காக அதனை உயர்த்தி கடற்புலிகளின் இலக்கில் இருந்து விலக்கிக் கொள்கிறார்கள்.
கடற்புலிகளின் படகுகள் ரணவிருவை நான்கு பக்கங்களிலும் சுற்றிவளைக்கின்றன. கடும் சமர் நடந்து கொண்;டிருக்கிறது.
கடற்புலிகளின் மத்தியில் இருந்து ஒரு படகு உச்ச வேகத்தில் புறப்பட்டு ரணவிருவை நோக்கிப் பாய்கிறது.
அது கடற்கரும்புலிப்படகு.
கண்ணபிரான், பார்த்திபன் என்னும் இரண்டு கடற்கரும்புலிகள் படகில் இருக்கிறார்கள்.
கடற்கரும்புலிப்படகு தம்மை நோக்கி வருவதைக் கண்டுவிட்டனர் கடற்படையினர்.
படகைக்குறிவைத்து சரமாரியாகச் சுடுகின்றனர். ரணவிருவை நெருங்க இன்னமும் ஐந்து மீற்றர்தான். தாண்டிவிட்டால் மோதிவிடும்.
கடற்படைத் தாக்குதலில் சிக்கிக்கொண்ட கடற்கரும்புலிப்படகு கடலில் வெடித்துச் சிதறுகிறது.
அதேநேரம் மற்றொரு திசையில் இருந்து ரணவிருவை நோக்கிப் பாய்ந்து சென்றது மற்றொரு கடற் கரும்புலிப்படகு.
மிதுபாலன், இன்னிசை (பெண் கடற் கரும்புலி) என்னும் இரண்டு கடற்கரும்புலிகள் அப்படகில் இருக்கின்றனர்.
குறி தப்பவில்லை.
ரணவிருவில் மோதுகிறது கடற்கரும்புலிப்படகு. ஆனால்!
குண்டு வெடிக்கவில்லை.
மோதிய படகு முன்பக்கத்தால் உடைந்து போனது. நீர் படகுக்குள் புகுந்தது.
படகை ஓட்டிச் சென்ற மிதுபாலன் படகை மீண்டும் பின்னே இழுத்துச்
பின்வாங்குவது போல காவனை காட்டிவிட்டு மீண்டும் முன்னோக்கி உச்சவேகத்தில்
ரணவிருவை நோக்கி படகைச் செலுத்தி மோதுகிறார்.
பலமாக மோதியது.
ஆனால் இம்முறையும் குண்டு வெடிக்கவில்லை.
குண்டுத்தயாரிப்பில் ஏற்பட்ட கோளாறு ஏமாற்றிவிட்டது.
கடற்படைத்தாக்குதலில் படகில் இருந்த இன்னிசையும் காயமடைந்தார்.
படகை மீண்டும் பின்னோக்கி இழுக்கிறார் மிதுபாலன். பாதுகாப்பாக பின்வாங்க ஆரம்பிக்கிறது கடற்கரும்புலிப்படகு.
அப்படகை தாக்கி அழித்துவிட கடற் படையினர் கவனம் செலுத்திக்கொண்டிருக்க,
இன்னொருபுறமிருந்து வந்து மோதியது மற்றொரு கடற்கரும்புலிப்படகு.
இம்முறை குறி தப்பவில்லை.
ரணவிருவின் இயந்திரப் பகுதி நொருங்கியதால், கடலில் தடுமாறத்தொடங்கியது ரணவிரு.
அதே நேரம் ரணவிருவின் நேர் எதிர்;ப்பக்கமாக மற்றொரு கடற்கரும்புலிப்படகு உச்சவேகத்தில் வந்து இடித்தது. வெடித்தது.
செல்லப்பிள்ளை, சுடரொலி (பெண்), பதுமன் ஆகிய மூன்று கடற்கரும்புலிகள் பலியானார்கள்.
‘ரணவிரு’ மூழ்கத்தொடங்க கடற்புலிகளின் படகுகள் வந்து சூழ்ந்து
கொள்கின்றன. கப்பலில் இருந்த படையினரை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள்
தீர்க்கப்படுகின்றன.
ரணவிருவை மோதி வெடிக்காத படகுடன் மிதுபாலன், இன்னிசை ஆகியோர் தப்பிக் கொண்டனர்.
ஐந்து கடற்புலிகள் பலியானார்கள். கப்பலில் 40க்கு மேற்பட்ட படையினர் பலியானார்கள். மூழ்கிய கப்பலின் பெறுமதி 10 கோடி ரூபாய்.
24.07.96 அன்று மற்றொரு கடற்சமர்! தரையிறக்கும் கப்பல் ஒன்றை குறிவைத்து விரைந்தது கடற்கரும்புலிப்படகு.
‘ரணவிரு’ தாக்குதலில் பங்குகொண்ட கடற்கரும்புலி மிதுபாலன் படகை ஓட்டிச்
செல்ல சயந்தன் என்னும் மற்றொரு கடற்கரும்புலியும் படகில் இருந்தார்.
கடற்கரும்புலியை தூரத்தில் இருந்தே கவனித்துத் தாக்கத்தொடங்கினார்கள் கடற்படையினர்.
தரையிறக்கக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட குண்டுபட்டு வெடித்துச் சிதறியது படகு.
கப்பலில் இருந்து 40 மீற்றர் தூரத்தில் வெடித்துச் சிதறிய படகில் இருந்த மிதுபாலன், சயந்தன் ஆகிய கடற்கரும்புலிகள் பலியானார்கள்.
அந்தக் கால சண்டைகளும் காவலரண் வாழ்வும்!!! போராட்ட காலத்தில் நினைவில் இருந்து அழியாத நினைவுகள் அரியாலை புலிகள் முகாம்..1986!
அப்போது அந்த முகாமில்10-15 போராளிகள்தான் இருந்தோம்..2-3 கிலோ மீட்டர்
தூரத்திலுள்ள நாவற்குழி.இராணுவ முகாமை காவல் காத்து இராணுவத்தை
யாழ்ப்பாணத்துக்குள் வர விடாமல் பார்க்க வேண்டியதே எமது முக்கிய
பணி.அதற்காக அரியாலைப் பக்கம் இரு இடங்களில் எங்கள் காவல் அரண்கள்
போடப்பட்டிருந்தன.ஒவ்வொரு காவல் அரணிலும் 2-3 போராளிகள்
இருந்தனர்.அவ்வளவுதான்!..4-5 தானியங்கிகள்..ஓர் ஜி.பி.எம்.,இவற்றைத் தவிர,
எம் மன உறுதியும் எமது ஆயுதங்களில் ஒன்றாக அப்போது இருந்தது.. நாம்
யாழ்ப்பாண பக்கம் உள்ள காவல் அரணில் தற்செயலாக கண்
உறங்கிவிட்டால்,அரியாலைப் பக்கம் இராணுவம் நுழைந்து ஆயிரக் கணக்கான எமது
மக்களைக் கொன்று சித்திரவதை செய்து இரவு வேளைகளில் அழித்து விடுவார்கள்.அதே
வேளை தென்மராட்சிப் பக்கம் 'கேடியின்'படைப் பிரிவினர் காவல் காத்து
வந்தனர். குறிப்பாகச் சொல்வதென்றால் அரியாலை மக்களின் உயிர் எங்கள்
கையில்தான் அப்போது இருந்தது.அடிக்கடி நடை பயணமாக இரவு வேளைகளில்
புறப்பட்டு அரியாலைப் பக்கம்,இராணுவம் நுழைய முயன்ற சமரில் அவ்வப்போது, பல
போராளிகள் வீரச் சாவடைந்திருக்கின்றனர். நான் திருகோண மலையில் இருந்து
மாற்றலாகி வந்து முதன் முதலாக அரியாலையில்தான் நின்றேன்..காவல் அரணுக்கு
வெளியிலும் எங்கள் முகாம் ஒன்று இருந்தது.சிலவேளை யாராவது துரோகிகள்
துப்புக் கொடுத்து எமது முகாமை இரவு வேளைகளில் இராணுவம் தாக்க முற்
படும்போது,முழுப் பலத்துடன் எதிர்த் தாக்குதல் நடாத்த எம்மால்
முடியாது.காரணம் அப்போது போதிய ஆயுதங்கள் அங்கே இல்லை..ஆனால் நாவற்குழி
முகாமில் இருந்து வெளியேறும் இராணுவம்,அரியாலைப் பக்கம் நடையாகவோ,அல்லது
வாகனங்களிலோ வந்தால்,அதற்கு ஏற்றவாறு வாகன நிலக் கண்ணிவெடிகளையும்,கால்
நிலக் கண்ணி வெடிகளையும் புதைத்து வைத்திருந்தோம்..அதில் இராணுவம்
மாட்டுபட்டால் சட்னிதான்'! எனினும் ஒவ்வொரு அங்குலம்,அங்குலமாகப்
புதைக்க முடியுமா என்ன?அதனால்தான் காவல் அரணுக்கு வெளியே மக்களின்
குடியிருப்புகளோடு சேர்ந்தவாறு ஒரு முகாம் எப்போதும் இருந்தது. .அதில் இரவு
நேர காவலை வலுப்படுத்தியிருந்தோம்.ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும்
இருவர் வீதம் தொடர்ச்சியாக ஆயுதத்துடன் அங்கே காவலில் ஈடுபடிருந்தோம்..
அது எல்லோருக்கும் தெரிந்த முகாம் என்பதால்,இரவு 11.30 கு பின்னர்
எல்லோரும் எங்கள் மூட்டை முடிச்சுகளையும்,ஆயுதங்களையும் சுமந்துகொண்டு வீதி
வீதியாக ஊர்வலம்போய், ஒரு பொது மகனின் வீட்டில் அன்று இரவு
தங்கிவிடுவோம்.அது எப்போதும் எமது நெருங்கிய ஆதரவாளரின் வீடாகவே இருக்கும்.
அங்கும் தொடர்ச்சியாக காவல் காப்போம்.ஒருநாள் எமது முகாம் மீது யாரோ ஓர்
துரோகி கொடுத்த துப்பின் மூலம்,இலங்கை வான் படையின் விமானங்கள்,பகல்
வேளையில், சுற்றி வளைத்து தாக்க,உலங்கு வானூர்திகளில் ஓர் ஒதுக்குப் புறமான
இடத்தில் இராணுவம் அதிரடியாக தரை இறங்கி எமது முகாமை நோக்கி நகரத்
தொடங்கியது. நாமோ இங்கே குண்டுவீச்சு விமானகளின் தாக்குதலுக்கும்,பல
உலங்கு வானூர்திகளின் தாக்குதலுக்கும் முகம் கொடுத்துப் போராடிக்
கொண்டிருந்தோம். எமது கவனத்தை வான்பரப்பில் திருப்பி விட்டுத்தான்
இராணுவம் மறைமுகமான எமது காவல் அரணுக்கு வெகு தூரத்தில் தரை இறங்கி எம்மைச்
சுற்றி வளைத்து பிடிக்க முயன்றது .அப்போது நாம் இரு முனைத் தாக்குதலுக்கு
ஈடு கொடுக்கவேண்டியிருந்தது..தரை மூலமும் வான் மூலமும் ஓர் சிறிய
முகாமுக்கு அருகே பயங்கரச் சண்டை நடை பெற்றது.அந்த வேளையில் 2-3 கிலோ
மீட்டர் தூரத்தில்,யாழ் மாவட்டச் செயலகத்தில் இருந்த தளபதி கிட்டு
அண்ணாவும் ,அவரது போராளிகளும்,எமது உதவிக்கு விரைந்து வந்தனர்.சில
நிமிடங்களே நீடித்த அந்தச் சண்டையில் எமது படைப்பிரிவுகள் ஒன்று சேர்ந்து
விட்டதை உணர்ந்த இராணுவம், வந்த வழியில் பின் நோக்கிச் சென்று
விட்டது.ஆயினும் ஓர் திறமை மிகு போராளியை நாம் அந்தச் சண்டையில்
பறிகொடுத்துவிட்டோம் என்பதே மிகுந்த வேதனை அளித்த
விடயமாகும்.லெப்.கார்த்திக்தான் அது.என்னுடன் மலையில் பயிற்சி பெற்ற ஓர்
போராளி!..எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சிதரும் ஓர் சிறந்த வீரன் அவன்.
அன்றுமட்டும் நாம் இராணுவத்தின் அதிரடியை தடுக்காமல்
விட்டிருந்தால்,எம்மையும் அழித்து நூற்றுக் கணக்கான மக்களையும்
அழித்திருப்பார்கள் சிங்கள இராணுவத்தினர். புலிகள் மக்களைக்
காப்பவர்கள்..என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர்கள்..கார்த்திக்கின்
உடலை மக்கள் பார்வைக்காக வைத்தபோது அப்பகுதி மக்கள் கதறிக் கதறி
அழுதனர்.எங்களைக் காக்க உன்னை கொடுத்து விட்டாயே ஐயா" என்று அவர்கள்
சொல்லிச் சொல்லி அழுதார்கள்..இதுதான் அன்றைய காலம்..புலிகளுக்கு ஒவ்வொரு
நாளும் அரியாலை மக்கள் உணவு வகைகளை அனுப்பிக் கொண்டேயிருப்பார்கள்.சிலவேளை
அளவுக்கு அதிகமாக அவை இருக்கும்.சாப்பாடு என்றால் மிக தரமாகவும்
சுவையாகவும் இருக்கும்.. நினைவில் இருந்து அழியாத நாட்களில் ஒன்று இது!:::::பாரிஷ் வல்லவன்
கண் மூடி நீ உறங்கு தோழா உன் இலட்சியம் தொடர நான் இருக்கேன் தோழா தலைவன் பாதை நடப்பேன் தோழா உன் வீரம் எனக்கு தா தோழா
கருவறையும் கல்லறையும் ஒன்றே தோழா நம் ஈழம் மலரும் வரை மரணத்திலும் இன்னொரு வீரன் பிறப்பதனால் படையுண்டு என கலங்காதே அவை போலியான மாயைகள் என அமைதி கொள் தோழா நம் சேனையின் பலம் எங்குண்டு பாரினில் நம் தலைவன் போல் யாருண்டு அணைத்திட
தமிழன்னை உனையணைத்தாள் நிரந்தர தூக்கம் காண நீ கொடுத்து போனாய் உன் ஆயுதம் மட்டுமல்ல ஈழம் எனும் மிகப்பெரிய பொக்கிசத்தையும் தான்
உன் போல் வீரனாக இறக்க விரும்புகிறேன் கோழையாக அல்ல உன் வீர மரண சேதி சொல்ல தயங்குகிறேன் ஏன் எனில் உன் அம்மா கையால் நானும் ஒரு வேளை உண்டதால் அழுது புலம்புவாளோ உனை எண்ணி பெருமை கொள்வாளோ என நான் அறியேன்
உன் அரும்பு மீசை எனக்கு இல்லை அதை பார்க்க நாளை நீயும் இல்லை என் இருப்பும் நிச்சயம் இல்லை ஆனாலும் துடிக்கிறேன் என் கண் முன் உன் கனவு தேசம் மலர வேண்டும் என்று
நெருப்பாக இருந்தாய் தோழா இப்போது ஒளியற்று கிடக்கிறாய் தோழா
ஆக்கம் பவித்ரா நந்தகுமார்
குமரிக்கண்டத்தில் இருந்த தென் இந்தியாவின் பழங்குடிகள் பழந்தமிழர்கள் என்பது கருதுகோள். சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக்கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.
ஈழவம்ச மனுவின் மகள் ஈழம் என்னும் தமிழ் அரச குமாரி தமிழ்மக்கள்வரலாறு,
தமிழர் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடு, நாகதீவு( தமிழீழம்) ஆகியவற்றில் வசித்த தமிழனின் பிறந்தகம். ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீவுகளில் ஒன்றே,கடலில் மூழ்கிய குமரி நிலத்தின் எச்சமே இன்றைய தமிழனின் பிறந்தகம்.மேற்கூறிய சான்றுகளின்படி தற்போதைய இலங்கை தமிழகத்தின் ஒரு பகுதியே என்பதும் அங்கு வசித்தவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதும் தெளிவாகக் புலப்படுகிறது.
தமிழ் ஈழம் தமிழினத்தின் பிறப்புரிமை ! 50 ஆயிரம் ஆண்டுக்கால இலக்கிய வரலாறு கொண்ட தமிழே உலகின் முதன் மொழி! குமரிக் கண்டமே தமிழனின் பிறந்தகம். கடலில் மூழ்கிய குமரி நிலத்தின் எச்சமே இன்றைய தமிழீழம், தமிழ்ஈழம் என்னும் நாகதீவை ஆண்ட மனுவின் மகள் ஈழம் என்னும் தமிழ் அரச குமாரி ஆட்சி புரிந்த பகுதி குமரிக் கண்டம் எனப்பட்டதுசிங்களவர்கள் இலங்கைத் தீவின் வந்தேறிகள்.என்பதும் கடலில் மூழ்கிய குமரி நிலத்தின் ஒரு பகுதியே இன்றைய தமிழீழம், என்பதும் தெளிவாகக் புலப்படுகிறது.
மனுசக்கரவர்த்திக்கு ,சமன்,என்னும் புத்திரனும்,ஈழம், என்னும புத்திரியும்பிறந்தார்கள். மனுசக்கரவர்த்திக்கு பின் தமிழகம் இந்த இருவராலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. தென்னகத்தை மகனாகிய சமனும், அவனது சந்ததியினரும், வடபாகத்தை மகளாகிய ஈழமும் அவளது சந்ததியினரும் ஆண்டு வந்தனர். மனுவின் மகளாகியஈழம் என்பவளுக்கு குமரி என்று வேறு பெயரும் உண்டு.குமரி என்று அழைக்கப்பட்ட இந்தமனுசக்கரவர்த்தியின் மகள் ஆட்சி புரிந்த பகுதி குமரிக் கண்டம் எனப்பட்டது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே தமிழ்நாடு ,ஈழநாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன.
ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இந்த நான்கு மண்டலங்களும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாகவே இருந்தன. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட ஈழ மண்டலத்தை ஏனைய மூன்று மண்டலங்களிருந்து பிரித்து விட்டன.
எனினும் ஈழமண்டலமாகிய ஈழத்தில் தமிழரே வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில்தான் தமிழலரல்லாதோர் இங்கு வந்து குடியேறினர் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. வரலாற்றுக்காலத்துக்கு முன்பிருந்தே தமிழர்கள் ஈழத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் நாகரீக வளர்ச்சி பெற்றவர்களுமான ஓர் இனமாக வாழ்ந்து வந்தனர்.
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. பிற்காலத்தில் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதி கடல் கொள்ளப்பட்டது.
இக்கடல் கோல்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் பல தமிழ் சங்க மண்டபங்கள், அவைகளில் இருந்த இலக்கண இலக்கிய நூல்கள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது, சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது.மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் பல தேசங்களாக பிரிந்தது.
கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று சோழப் பேரரசு சோழ நாடு கி.மு. 300கள்–கி.பி.1279 சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. தமிழர் அடையாளம் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை.
தமிழ் மொழியை அறிந்திராவிட்டாலும் தமிழர் பண்பாடு, பின்புலத்தில் இருந்து வந்து தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்துவோரும் தமிழர் ஆவர். தமிழர் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடு, தமிழீழம் ஆகியவற்றில் வசித்து, தமிழ் மொழி பேசி தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்தினால் அவர்களும் தமிழர் ஆவர்.
இந்தியா, இலங்கை சுதந்திரமடைந்து, 1950-களின் பின்னரே தமிழர்கள் தொழில் துறை வல்லுனர்களாகப் பிரித்தானியா முதற்கொண்டு பிற ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரங்களுக்குப் பின்னர் பெருந்தொகையினரான ஈழத்தமிழர்கள் அகதிகளாக ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்தனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்வோரும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஐரோப்பியத் தமிழர் எனப்படுகிறார்கள். இன்று இவர்களில் கணிசமானோர் குடியுரிமை பெற்று, அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்று, பொருளாதார வளர்ச்சியடைந்து வாழ்கின்றனர்.
பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி, சுவிற்சர்லாந்து, நோர்டிக் நாடுகள், ஆகிய நாடுகளில் பரந்து வாழ்கின்றார்கள். மொத்தமாக ஏறக்குறைய 400,000 – 500,000 அளவுக்கு ஐரோப்பாவில் தமிழர்கள் வசிக்கின்றனர்.
தமிழ் இல்லாத நாடு இல்லை தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லை என்பதே உண்மை…
தமிழர்களின் தலைவராக அனைத்து விடயங்களை தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்த
தலைவர் ஓரு விடயத்தில் தவறிவிட்டதாக முன்னாள் போராளி ஒருவர் கவலை
வெளியிட்டார்.
இலங்கை தொலைகாட்சி ஒன்றில் பங்குபற்றி தமது வாழ்வாதாரம் தொடர்பான
பிரச்சனைகளை விளக்கியபோதே இதனை முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்தார்.
பட்டினியால் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டதை அறிந்து பொருண்மிய மேம்பாட்டு
நிறுவனத்தை தொடக்கிவைத்தவர். கரும்புலியாகிச் சென்ற காந்தரூபனின்
வேண்டுகோளை ஏற்று காந்தரூபன் அறிவுச்சோலையை தொடக்கிவைத்தவர்.
நவம் என்ற மாவீரனின் வேண்டுகோளை ஏற்று அங்கவீனமடைந்த போராளிகளின்
வளர்ச்சிக்காக நவம் அறிவுக்கூடத்தை நிறுவியவர். ஆனால் தமிழர்களின் அடுத்த
கட்ட போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய தலைமையை தெரிவுசெய்வதில் தவறிவிட்டார்
என மனவருத்தத்துடன் தெரிவித்தார்.
ஏழு வருடங்களாக தடுப்பில் உள்ளவர்களை விடுவிப்பதில் கூட
அக்கறையெடுக்காமல் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக
சம்பந்தனை சந்திப்பதற்காக தடுப்பிலிருந்து விடுதலையானவர்கள் சென்று
சந்தித்தபோதும் அவர்களது கவலைகளை கேட்காமல் பத்திரிகை வாசித்துக்கொண்டு
அலட்சியம் செய்யப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
“அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.
அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல்
கலைகளில் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும்
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை. தமிழ் மன்னர்கள்
ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர சோழனுக்கு நிகரான படைநடத்தும்
திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு,
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் என்பார்கள் தமிழ் அறிஞர்களும், அவரை நேரில்
பார்த்துப் பழகியவர்களும்.
ஆனாலும் இங்குள்ள சில மூடர்கள், பிரபாகரன் என்றதும், தங்களுக்கு அவரைப்
பற்றி என்னவெல்லாம் பொய்யாக எடுத்து உரைக்கப்பட்டதோ, கற்பிக்கப்பட்டதோ
அத்தனையையும் எழுதிக் கிழி்த்தார்கள். இப்போது அவர்களே வெட்கித் தலை
குனியும் பல உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
குறிப்பாக, தமிழ் ஈழம் என்ற நாட்டின் கட்டமைப்பு வசதிகளை, ஒரு நாட்டின்
தேசியத் தலைவர் என்ற பிரதான இடத்தில் அமர்ந்து அவர் செய்துள்ள சாதனைகள்
தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்கச் செய்கின்றன.
தமிழில் இராணுவக் கல்வி!
தாய்த் தமிழில் மருத்துவக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி கற்பது
இன்னும்கூட தமிழகத்தில் சாத்தியமில்லாத நிலை. ஆனால் பிரபாகரனோ, புலிகளுக்கு
சுத்தத் தமிழில் ராணுவக் கல்வியையே போதித்துள்ளார். ராணுவக் கல்வி
என்றால், வெறும் வாய்மொழிக் கட்டளைகள்தானே என நினைக்க வேண்டாம். முழுமையான
பாடத் திட்டங்களுடன் கூடிய பாரம்பரிய கல்வி அமைப்பையே தமிழ் ஈழத்தில்
நடைமுறையில் வைத்துள்ளார் பிரபாகரன். இதனை இப்போது வெளிப்படுத்தியிருக்கும்
சிங்கள ராணுவத்தினர், பிரபாகரனின் போர் வியூகங்கள், அதை புலிகளுக்கு
கற்றுத் தர வகுத்துக் கொடுத்த முறைகள், பாசறைகள் போன்றவற்றைப் பார்த்து
அதிர்ந்து நிற்கிறார்கள்.
இலங்கையில் முறையான, கட்டுக்கோப்பான ராணுவமாக 30 ஆண்டுகாலம் புலிகள்
அமைப்பு எப்படி இயங்கியது என்ற ரகசியங்கள் இப்போதுதான் அவர்களுக்கு
முழுமையாகத் தெரிய வந்துள்ளது. ஒரு ராணுவத்திற்கு என்னென்ன தகுதிகள்,
கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் இருக்க வேண்டுமோ அத்தனையையும் தனது படைக்குக்
கற்றுக் கொடுத்துள்ளார் பிரபாகரன். வெறும் வாய் வழி உத்தரவுகளாக இல்லாமல்,
ஒவ்வொன்றையும் திட்டமிட்டு, முறைப்படி அனைத்தையும் செய்து தனது போராளிப்
படையை ஒரு ராணுவமாக இயங்கச் செய்துள்ளார் பிரபாகரன் என்பது விடுதலைப்
புலிகள் புதைத்து வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
பிரபாகரன் என்ற ஒரு தனி ஆட்சியாளரின் கீழ் இயங்கி வந்த விடுதலைப்
புலிகளுக்கு எதிரான போரை முடிக்க, 20-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் கையேந்தி
ராணுவப் பிச்சையெடுத்தது இலங்கை. இப்போது புலிகள் பகுதிகளில் தீவிர தேடுதலை
நடத்தி அவர்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி
பயன்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால் புலிகளோ சுயமாக, யாருடைய உதவியும்
இல்லாமல் தங்கள் சொந்த பலம், ஆயுதங்களை மட்டுமே நம்பி கடைசி வரை களத்தில்
நின்றார்கள்.
இந்த தேடுதலின் போது, புலிகளின் ராணுவ ஆவணக் காப்பகம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் உத்திகள்,
ராணுவத் திட்டங்கள், தாக்குதல் இலக்குகள் குறித்த தகவல்கள் அடங்கிய மிக
முக்கிய ஆவணங்கள் இங்குதான் இருந்ததாக சிங்கள ராணுவத்தினர்
தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 272 பைல்களில் இந்த ஆவணங்கள் உள்ளன.
இவற்றை ராணுவத்தினர் கொழும்பு கொண்டு வந்து உயர் அதிகாரிகளிடம்
கொடுத்துள்ளனர். இவற்றைப் பார்த்த ராணுவ உயர் அதிகாரிகள் அதிர்ந்து போய்
விட்டனராம். காரணம், உலகில் எந்த ஒரு ராணுவத்திடமும் இவ்வளவு முழுமையான
திட்டமிடல் இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிக மிக அழகாக
திட்டமிட்டு ஒவ்வொன்றையும் புலிகள் செய்து வந்துள்ளனர் என்பதை இந்த
ஆவணங்கள் காட்டுகிறதாம்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் புதையல்களிலேயே மிக மிக முக்கியமானவை இந்த ஆவணங்கள்தான் என்கிறார்கள்.
இந்த ஆவணங்கள் இருந்த இடம் குறித்த தகவலை, பிரபாகரனிடம் மிக நெருக்கமாக
இருந்த ஒருவரிடமிருந்துதான் பெற்றுள்ளதாம் இலங்கை ராணுவம். அந்த முக்கிய
நபர் யார் என்பதை இலங்கை ராணுவம் தெரிவிக்கவில்லை. அவரிடம் கிடைத்த தகவலின்
அடிப்படையில்தான் இந்த ஆவணப் புதையலைத் தோண்டி எடுத்துள்ளது ராணுவம்.
விடுதலைப் புலிகளின் சில முக்கியத் தலைவர்கள் இன்னும் ராணுவத்தின் பிடியில் விசாரணையில் இருப்பது நினைவிருக்கலாம்.
விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள், தற்கொலைப் படைத் தாக்குதல்,
ஆயுதக் கொள்முதல் விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனை குறித்த தகவல்கள்,
புலிகள் இயக்கத்தை மறு சீரமைக்க போடப்பட்டிருந்த திட்டங்கள் உள்ளிட்ட பல
முக்கிய தகவல்கள் இந்த ஆவணங்களில் உள்ளது என்று போலீஸ் எஸ்.பி. வாஸ்
குணவர்த்தனே தெரிவித்துள்ளார்.
இதைத் தவிர இலங்கையின் மொத்த ராணுவ அமைப்பை அப்படியே படம்பிடித்து வைத்தது போன்ற துல்லியமான விவரங்கள் அந்த ஆவணங்களில் உள்ளனவாம்.
இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள்,
அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள்,
வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய
நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய
ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு,
பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான
வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய
வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத்
தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று
எல்லாவற்றையும் தமிழில் எளிமையாகப் புரியும்படி அச்சிட்டு தந்திருக்கிறார்
பிரபாகரன். இதைப் பார்த்து ஆடிப் போய்விட்டார்களாம் சிங்களத்து உயர்
அதிகாரிகள்.
வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, பாட்டரிகளைப்
பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, பாட்டரிகளையே தயாரிக்கும் முறை,
வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை,
போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு
வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடி குண்டுகளையும்,
வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு டிபன்பாக்ஸ், டிரான்சிஸ்டர்
போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில்
விடுதலைப் புலிகள் நிபுணத்துவம் பெற்றிருந்தது அந்தக் கோப்புகளில் தெரிய
வந்துள்ளது.
இலங்கை ராணுவத்தின் நடமாட்டங்கள், அவர்களின் உத்திகள், அவர்களுடைய படை
பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு அமைப்புகள்
போன்றவற்றை விடுதலைப் புலிகள் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களைத் தொகுத்து
அவற்றை பிரபாகரன் அவர்களுக்கு அனுப்பிக் கொண்டே இருந்துள்ளனர்.
பிரபாகரன் அவர்கள் அவற்றைக் கொண்டுதான் எதிர் உத்திகளை வகுத்து தனது
படைப்பிரிவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரபாகரன் அவர்களுடன் இயக்க வீரர்கள்
எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ஏராளமாய் உள்ளன. அனுராதபுரம் விமான
நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச்
சேர்ந்தவர்கள் பிரபாகரன் அவர்களுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம்
எடுத்துக் கொண்டதும் இவற்றில் உள்ளன.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரபாகரன் அவர்களுடன் இயக்க வீரர்கள்
எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ஏராளமாய் உள்ளன. அனுராதபுரம் விமான
நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச்
சேர்ந்தவர்கள் பிரபாகரன் அவர்களுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம்
எடுத்துக் கொண்டதும் இவற்றில் உள்ளன.
வெளிநாடுகளில் வாங்கிய ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் அவை வாங்கப்பட்ட
நாடுகளின் பட்டியலும், அவை ஈழத்திற்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட
வழிகளும், நேரமும், அதற்குண்டான வாகனங்கள் பற்றிய தகவல்களும்கூட கோர்வையாக
எழுதப்பட்டிருந்தன.
இலங்கை விமானப்படையிடம் இருந்த விமானங்களின் ரகம், அவற்றின் பயன்பாடு,
அவற்றின் திறம், அவற்றின் நடமாட்டம் போன்ற பலவற்றைத் தொடர்ந்து கண்காணித்து
அதைத் தனி ஆவணங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.
விமானங்களைச் சுட்டு வீழ்த்தக் கூடிய பீரங்கிக்கான உதிரி பாகங்கள், 120
மி.மீ., 130 மி.மீ., 152 மி.மீ. குறுக்களவு கொண்ட பீரங்கிகளின் உதிரி
பாகங்களையும் விடுதலைப் புலிகள் வாங்கி வைத்திருந்தனர்.
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சீருடை, தற்கொலைப்படை வீரராகச்
செயல்பட்ட புலிகளின் சொந்தப் பொருள்கள், கரும் புலிகள் என்று அழைக்கப்படும்
விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதல்கள் பற்றிய
விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன.
ஆயுதங்கள் தயாரிப்பு:
தமிழீழத்தின் அனைத்து ஆயுதத் தேவைகளுக்கும் வெளிநாடுகளை மட்டுமே நம்பி
இருக்காமல், சொந்தமாக ஆயுதங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்திஇருந்தனர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.
இதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் பல ஆயுத தயாரிப்புக் கூடங்களை
நிறுவியுள்ளனர். இன்னொரு பக்கம் கடற் புலிகள் கலக்கியுள்ளனர். மோட்டார்
படகுகள், நீர்மூழ்கிகள் போன்றவற்றை அவர்களே கட்டியுள்ளனர். சிறு விசைப்படகு
மோட்டார்களையும் கடற் புலிகளே தயாரித்துள்ளனர். இந்த திறன் இலங்கை
ராணுவத்துக்குக் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் விமானங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது எப்படி என்று ஏற்கனவே பல
தகவல்கள் வெளிவந்துவிட்டன. விமானங்களின் உதிரி பாகங்களை மட்டும் வாங்கிக்
கொண்டு, மற்ற அனைத்தும் தங்கள் சொந்த முயற்சியிலேயே தமிழீழ விடுதலைப்
புலிகள் செய்து முடித்துள்ளனர்.
நிர்வாகத்துறையில் புலிகளின் திறமைக்கும் நேர்மைக்கும் இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி டி சில்வா கொடுத்த சான்று ஒன்றே போதும்.
அத்தனை நேர்த்தி… நேர்மை… உறுதியான நிலைப்பாடு மிக்க ஒரு அரசை நிறுவி
நடத்தி வந்திருக்கிறார் பிரபாகரன். அவரது அந்த திறமையும் உறுதியும்தான்
இந்த உலகையே அசைத்துப் பார்த்துவிட்டது… அவருக்கு எதிராக அணி திரளச்
செய்திருக்கிறது.
- See more at: http://www.asrilanka.com/2015/09/10/29830#sthash.X1KOQ7gi.rbpikhUL.dpuf
“அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.
அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல்
கலைகளில் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும்
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை. தமிழ் மன்னர்கள்
ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர சோழனுக்கு நிகரான படைநடத்தும்
திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு,
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் என்பார்கள் தமிழ் அறிஞர்களும், அவரை நேரில்
பார்த்துப் பழகியவர்களும்.
ஆனாலும் இங்குள்ள சில மூடர்கள், பிரபாகரன் என்றதும், தங்களுக்கு அவரைப்
பற்றி என்னவெல்லாம் பொய்யாக எடுத்து உரைக்கப்பட்டதோ, கற்பிக்கப்பட்டதோ
அத்தனையையும் எழுதிக் கிழி்த்தார்கள். இப்போது அவர்களே வெட்கித் தலை
குனியும் பல உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
குறிப்பாக, தமிழ் ஈழம் என்ற நாட்டின் கட்டமைப்பு வசதிகளை, ஒரு நாட்டின்
தேசியத் தலைவர் என்ற பிரதான இடத்தில் அமர்ந்து அவர் செய்துள்ள சாதனைகள்
தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்கச் செய்கின்றன.
தமிழில் இராணுவக் கல்வி!
தாய்த் தமிழில் மருத்துவக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி கற்பது
இன்னும்கூட தமிழகத்தில் சாத்தியமில்லாத நிலை. ஆனால் பிரபாகரனோ, புலிகளுக்கு
சுத்தத் தமிழில் ராணுவக் கல்வியையே போதித்துள்ளார். ராணுவக் கல்வி
என்றால், வெறும் வாய்மொழிக் கட்டளைகள்தானே என நினைக்க வேண்டாம். முழுமையான
பாடத் திட்டங்களுடன் கூடிய பாரம்பரிய கல்வி அமைப்பையே தமிழ் ஈழத்தில்
நடைமுறையில் வைத்துள்ளார் பிரபாகரன். இதனை இப்போது வெளிப்படுத்தியிருக்கும்
சிங்கள ராணுவத்தினர், பிரபாகரனின் போர் வியூகங்கள், அதை புலிகளுக்கு
கற்றுத் தர வகுத்துக் கொடுத்த முறைகள், பாசறைகள் போன்றவற்றைப் பார்த்து
அதிர்ந்து நிற்கிறார்கள்.
இலங்கையில் முறையான, கட்டுக்கோப்பான ராணுவமாக 30 ஆண்டுகாலம் புலிகள்
அமைப்பு எப்படி இயங்கியது என்ற ரகசியங்கள் இப்போதுதான் அவர்களுக்கு
முழுமையாகத் தெரிய வந்துள்ளது. ஒரு ராணுவத்திற்கு என்னென்ன தகுதிகள்,
கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் இருக்க வேண்டுமோ அத்தனையையும் தனது படைக்குக்
கற்றுக் கொடுத்துள்ளார் பிரபாகரன். வெறும் வாய் வழி உத்தரவுகளாக இல்லாமல்,
ஒவ்வொன்றையும் திட்டமிட்டு, முறைப்படி அனைத்தையும் செய்து தனது போராளிப்
படையை ஒரு ராணுவமாக இயங்கச் செய்துள்ளார் பிரபாகரன் என்பது விடுதலைப்
புலிகள் புதைத்து வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
பிரபாகரன் என்ற ஒரு தனி ஆட்சியாளரின் கீழ் இயங்கி வந்த விடுதலைப்
புலிகளுக்கு எதிரான போரை முடிக்க, 20-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் கையேந்தி
ராணுவப் பிச்சையெடுத்தது இலங்கை. இப்போது புலிகள் பகுதிகளில் தீவிர தேடுதலை
நடத்தி அவர்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி
பயன்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால் புலிகளோ சுயமாக, யாருடைய உதவியும்
இல்லாமல் தங்கள் சொந்த பலம், ஆயுதங்களை மட்டுமே நம்பி கடைசி வரை களத்தில்
நின்றார்கள்.
இந்த தேடுதலின் போது, புலிகளின் ராணுவ ஆவணக் காப்பகம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் உத்திகள்,
ராணுவத் திட்டங்கள், தாக்குதல் இலக்குகள் குறித்த தகவல்கள் அடங்கிய மிக
முக்கிய ஆவணங்கள் இங்குதான் இருந்ததாக சிங்கள ராணுவத்தினர்
தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 272 பைல்களில் இந்த ஆவணங்கள் உள்ளன.
இவற்றை ராணுவத்தினர் கொழும்பு கொண்டு வந்து உயர் அதிகாரிகளிடம்
கொடுத்துள்ளனர். இவற்றைப் பார்த்த ராணுவ உயர் அதிகாரிகள் அதிர்ந்து போய்
விட்டனராம். காரணம், உலகில் எந்த ஒரு ராணுவத்திடமும் இவ்வளவு முழுமையான
திட்டமிடல் இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிக மிக அழகாக
திட்டமிட்டு ஒவ்வொன்றையும் புலிகள் செய்து வந்துள்ளனர் என்பதை இந்த
ஆவணங்கள் காட்டுகிறதாம்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் புதையல்களிலேயே மிக மிக முக்கியமானவை இந்த ஆவணங்கள்தான் என்கிறார்கள்.
இந்த ஆவணங்கள் இருந்த இடம் குறித்த தகவலை, பிரபாகரனிடம் மிக நெருக்கமாக
இருந்த ஒருவரிடமிருந்துதான் பெற்றுள்ளதாம் இலங்கை ராணுவம். அந்த முக்கிய
நபர் யார் என்பதை இலங்கை ராணுவம் தெரிவிக்கவில்லை. அவரிடம் கிடைத்த தகவலின்
அடிப்படையில்தான் இந்த ஆவணப் புதையலைத் தோண்டி எடுத்துள்ளது ராணுவம்.
விடுதலைப் புலிகளின் சில முக்கியத் தலைவர்கள் இன்னும் ராணுவத்தின் பிடியில் விசாரணையில் இருப்பது நினைவிருக்கலாம்.
விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள், தற்கொலைப் படைத் தாக்குதல்,
ஆயுதக் கொள்முதல் விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனை குறித்த தகவல்கள்,
புலிகள் இயக்கத்தை மறு சீரமைக்க போடப்பட்டிருந்த திட்டங்கள் உள்ளிட்ட பல
முக்கிய தகவல்கள் இந்த ஆவணங்களில் உள்ளது என்று போலீஸ் எஸ்.பி. வாஸ்
குணவர்த்தனே தெரிவித்துள்ளார்.
இதைத் தவிர இலங்கையின் மொத்த ராணுவ அமைப்பை அப்படியே படம்பிடித்து வைத்தது போன்ற துல்லியமான விவரங்கள் அந்த ஆவணங்களில் உள்ளனவாம்.
இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள்,
அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள்,
வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய
நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய
ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு,
பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான
வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய
வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத்
தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று
எல்லாவற்றையும் தமிழில் எளிமையாகப் புரியும்படி அச்சிட்டு தந்திருக்கிறார்
பிரபாகரன். இதைப் பார்த்து ஆடிப் போய்விட்டார்களாம் சிங்களத்து உயர்
அதிகாரிகள்.
வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, பாட்டரிகளைப்
பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, பாட்டரிகளையே தயாரிக்கும் முறை,
வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை,
போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு
வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடி குண்டுகளையும்,
வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு டிபன்பாக்ஸ், டிரான்சிஸ்டர்
போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில்
விடுதலைப் புலிகள் நிபுணத்துவம் பெற்றிருந்தது அந்தக் கோப்புகளில் தெரிய
வந்துள்ளது.
இலங்கை ராணுவத்தின் நடமாட்டங்கள், அவர்களின் உத்திகள், அவர்களுடைய படை
பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு அமைப்புகள்
போன்றவற்றை விடுதலைப் புலிகள் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களைத் தொகுத்து
அவற்றை பிரபாகரன் அவர்களுக்கு அனுப்பிக் கொண்டே இருந்துள்ளனர்.
பிரபாகரன் அவர்கள் அவற்றைக் கொண்டுதான் எதிர் உத்திகளை வகுத்து தனது
படைப்பிரிவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரபாகரன் அவர்களுடன் இயக்க வீரர்கள்
எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ஏராளமாய் உள்ளன. அனுராதபுரம் விமான
நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச்
சேர்ந்தவர்கள் பிரபாகரன் அவர்களுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம்
எடுத்துக் கொண்டதும் இவற்றில் உள்ளன.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரபாகரன் அவர்களுடன் இயக்க வீரர்கள்
எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ஏராளமாய் உள்ளன. அனுராதபுரம் விமான
நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச்
சேர்ந்தவர்கள் பிரபாகரன் அவர்களுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம்
எடுத்துக் கொண்டதும் இவற்றில் உள்ளன.
வெளிநாடுகளில் வாங்கிய ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் அவை வாங்கப்பட்ட
நாடுகளின் பட்டியலும், அவை ஈழத்திற்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட
வழிகளும், நேரமும், அதற்குண்டான வாகனங்கள் பற்றிய தகவல்களும்கூட கோர்வையாக
எழுதப்பட்டிருந்தன.
இலங்கை விமானப்படையிடம் இருந்த விமானங்களின் ரகம், அவற்றின் பயன்பாடு,
அவற்றின் திறம், அவற்றின் நடமாட்டம் போன்ற பலவற்றைத் தொடர்ந்து கண்காணித்து
அதைத் தனி ஆவணங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.
விமானங்களைச் சுட்டு வீழ்த்தக் கூடிய பீரங்கிக்கான உதிரி பாகங்கள், 120
மி.மீ., 130 மி.மீ., 152 மி.மீ. குறுக்களவு கொண்ட பீரங்கிகளின் உதிரி
பாகங்களையும் விடுதலைப் புலிகள் வாங்கி வைத்திருந்தனர்.
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சீருடை, தற்கொலைப்படை வீரராகச்
செயல்பட்ட புலிகளின் சொந்தப் பொருள்கள், கரும் புலிகள் என்று அழைக்கப்படும்
விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதல்கள் பற்றிய
விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன.
ஆயுதங்கள் தயாரிப்பு:
தமிழீழத்தின் அனைத்து ஆயுதத் தேவைகளுக்கும் வெளிநாடுகளை மட்டுமே நம்பி
இருக்காமல், சொந்தமாக ஆயுதங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்திஇருந்தனர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.
இதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் பல ஆயுத தயாரிப்புக் கூடங்களை
நிறுவியுள்ளனர். இன்னொரு பக்கம் கடற் புலிகள் கலக்கியுள்ளனர். மோட்டார்
படகுகள், நீர்மூழ்கிகள் போன்றவற்றை அவர்களே கட்டியுள்ளனர். சிறு விசைப்படகு
மோட்டார்களையும் கடற் புலிகளே தயாரித்துள்ளனர். இந்த திறன் இலங்கை
ராணுவத்துக்குக் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் விமானங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது எப்படி என்று ஏற்கனவே பல
தகவல்கள் வெளிவந்துவிட்டன. விமானங்களின் உதிரி பாகங்களை மட்டும் வாங்கிக்
கொண்டு, மற்ற அனைத்தும் தங்கள் சொந்த முயற்சியிலேயே தமிழீழ விடுதலைப்
புலிகள் செய்து முடித்துள்ளனர்.
நிர்வாகத்துறையில் புலிகளின் திறமைக்கும் நேர்மைக்கும் இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி டி சில்வா கொடுத்த சான்று ஒன்றே போதும்.
அத்தனை நேர்த்தி… நேர்மை… உறுதியான நிலைப்பாடு மிக்க ஒரு அரசை நிறுவி
நடத்தி வந்திருக்கிறார் பிரபாகரன். அவரது அந்த திறமையும் உறுதியும்தான்
இந்த உலகையே அசைத்துப் பார்த்துவிட்டது… அவருக்கு எதிராக அணி திரளச்
செய்திருக்கிறது.
- See more at: http://www.asrilanka.com/2015/09/10/29830#sthash.X1KOQ7gi.rbpikhUL.dpuf
என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, வேலுப்பிள்ளை பிரபாகரன்
அவர்களைத்தான் அவனோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு
தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ
மண்ணுக்குள்ள பெருமை”, என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.
சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன் குறித்து வந்த
தகவல்களைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட பிரகாஷ்ராஜ், ‘நான் ஈழத்தில்
பிறந்திருந்தால் நிச்சயம் பிரபாகரனைத்தான் ஹீரோவாகக் கொண்டு
வளர்ந்திருப்பேன். அவர் பின்னால்தான் விசுவாசமாக நின்றிருப்பேன்’ என்று
கூறியுள்ளார்.
பிரபாகரன் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது…
“பிரபாகரனைப் போய் சிலர் சர்வாதிகாரின்னு சொல்றாங்க. அவர் என்ன சொந்த
மக்களையே கொன்று குவித்த ஹிட்லரா… தன் மக்களுக்காக களத்தில் நின்று 30
ஆண்டுகளுக்கும் மேல் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சுத்த வீரன்
பிரபாகரன். தாக்குறது அல்ல அவர் நோக்கம்… தற்காப்புதான்.
அவர் என்ன
வல்லரசு ஆசையில் உலகம் பூரா வலிந்து தாக்குதல் செய்து நாட்டைப் பிடிக்கவா
முயற்சி பண்ணார்… கால காலமா தாங்கள் வாழ்ந்த மண்ணை அடிமைத்தனத்திலிருந்து
மீட்டெடுக்க போர்க்களம் புகுந்தவர். அவர் கண்முன் நிகழ்ந்த இனவெறிக்
கொடுமைகள்தான் அவரை, தன் மக்களின் விடுதலைக்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்க
வைத்திருக்கிறது.
அவர் வாழ்க்கையை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது.
அவரைப் போன்ற நேர்மையான, எளிமையான, மன உறுதியும் வீரமும் கொண்ட தலைவர்களை
நாம் பார்த்ததில்லை. இது வெறும் ஹீரோ வொர்ஷிப் இல்லை. இப்படிப்பட்ட
மாவீரர்களை, தலைவர்களைப் போற்றாவிட்டால், நாம் மாபெரும் சரித்திர தவறு
செய்தவர்களாவோம்.
கொண்ட கொள்கை, லட்சியம் வெல்ல தன் உயிரைப் பணயம்
வைத்து எப்போதும் கழுத்தில் சயனைடு குப்பியுடன் காட்சி தந்த பிரபாகரன்தான்
இப்போதும் எப்போதும் இளைஞர்களின் ரோல்மாடல். நாமெல்லாம் நேதாஜி, பகத் சிங்
வீரத்தைப் பத்தி படிச்சிதான் தெரி்ஞ்சிக்கிட்டோம். ஆனா ஒரு மாவீரன் எப்படி
இருப்பார்னு பிரபாகரனைப் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டோம். அவரைப்
பாத்துதான் நாம வளர்ந்தோம்.
என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், ‘இதோ பார்… இந்த மாவீரன்தான்டா உன் ரோல்மாடல்’ என்று காட்டி வளர்த்திருப்பேன்…
பிரபாகரனைப் போல் அர்ப்பணிப்பு குணம் உள்ள ஒரு பெரும் தலைவனைப் பெற்றெடுத்ததே ஈழத் தமிழ் மண்ணுக்குள்ள பெருமையா நான் பார்க்கிறேன்.
‘வன்னி குண்டு வெடிப்புகளில் 5 புலிகள் இறக்கிறார்கள்… 50 புலிகள்
பிறக்கிறார்கள்’ என்ற கவிதை நூறு சதவிகிதம் உண்மையானது”, என்று
கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.
உறவுகளுக்கு இனிய காலை வணக்கங்கள்
ஈழத்து கலைஞர்களால் மறக்கமுடியாத ஒரு பெண் இசைப்பிரியா. சோபனா தர்மராஜா என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய போராளி. நான்காம் ஈழப்போரின் முடிவில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த இசைப்பிரியா 2010 ஆம் ஆண்டில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தின. ஈழவர் எழுர்சி வேள்வியாய் இதய பரப்பில் குருதி இறுகி நின்று இவளை நினைக்கிறது ஈழமண்ணில் உடகப்பரப்பில் உன்னதப்பணி செய்தவள் ஊர் கலைவடிங்களில் உயிராய் நடித்து மனங்களை உயிடோட்டத்துடன் கலைத்தேவியாய் உலாவந்தவள் கொடுமை என்ற அரக்க இனம் கொத்துமலரை ஈழத்தால்மண்ணில் செய்த சேதிதெரிந்தவரே உடலில் குருதி உள்ளவரை அதன் நாணங்கள் கொதித்து நிற்கும் இவளுக்கு நடந்த சேதிகேட்டு இவளின் இறுதிப்பதிவான பாடல் இதயங்களை உருக்கும் பாடல் இவள் முகம்பார்க்க வாருங்கள்
ஈழத்து கலைஞர்களால்
மறக்கமுடியாத ஒரு பெண் இசைப்பிரியா. சோபனா தர்மராஜா என்னும் இயற்பெயர்
கொண்ட இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய போராளி.
நான்காம் ஈழப்போரின் முடிவில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த
இசைப்பிரியா 2010 ஆம் ஆண்டில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில்
வெளியாகி அனைவரையும்
துன்பத்தில் ஆழ்த்தின.
ஈழவர் எழுர்சி வேள்வியாய் இதய பரப்பில் குருதி இறுகி நின்று இவளை
நினைக்கிறது ஈழமண்ணில் உடகப்பரப்பில் உன்னதப்பணி செய்தவள் ஊர்
கலைவடிங்களில் உயிராய் நடித்து மனங்களை உயிடோட்டத்துடன் கலைத்தேவியாய்
உலாவந்தவள் கொடுமை என்ற அரக்க இனம் கொத்துமலரை
ஈழத்தால்மண்ணில் செய்த சேதிதெரிந்தவரே உடலில் குருதி உள்ளவரை அதன் நாணங்கள்
கொதித்து நிற்கும் இவளுக்கு நடந்த சேதிகேட்டு இவளின் இறுதிப்பதிவான பாடல்
இதயங்களை உருக்கும் பாடல் இவள் முகம்பார்க்க வாருங்கள்
ஈழத்து கலைஞர்களால்
மறக்கமுடியாத ஒரு பெண் இசைப்பிரியா. சோபனா தர்மராஜா என்னும் இயற்பெயர்
கொண்ட இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய போராளி.
நான்காம் ஈழப்போரின் முடிவில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த
இசைப்பிரியா 2010 ஆம் ஆண்டில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில்
வெளியாகி அனைவரையும்
துன்பத்தில் ஆழ்த்தின.
ஈழவர் எழுர்சி வேள்வியாய் இதய பரப்பில் குருதி இறுகி நின்று இவளை
நினைக்கிறது ஈழமண்ணில் உடகப்பரப்பில் உன்னதப்பணி செய்தவள் ஊர்
கலைவடிங்களில் உயிராய் நடித்து மனங்களை உயிடோட்டத்துடன் கலைத்தேவியாய்
உலாவந்தவள் கொடுமை என்ற அரக்க இனம் கொத்துமலரை
ஈழத்தால்மண்ணில் செய்த சேதிதெரிந்தவரே உடலில் குருதி உள்ளவரை அதன் நாணங்கள்
கொதித்து நிற்கும் இவளுக்கு நடந்த சேதிகேட்டு இவளின் இறுதிப்பதிவான பாடல்
இதயங்களை உருக்கும் பாடல் இவள் முகம்பார்க்க வாருங்கள்
தியாக தீபம் நினைவு நாளில் பிரான்சிலிருந்து ஜெனிவா நோக்கி தொடருந்து ஏற்பாடு!
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான
26.09.2016 திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.முன்றிலில் நடைபெறவுள்ள மாபெரும்
எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பிரான்சு தமிழர்
ஒருங்கிணைப்புக்குழுவினால் இம்முறை மீண்டும் தொடருந்துகள்
ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
Gare de Lyonனில் இருந்து காலை 9.00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.15
மணிக்கு ஜெனிவாவைச் சென்றடையும் தொடருந்துகள், மீண்டும் இரவு 19.42 மணிக்கு
ஜெனிவாவில் இருந்து புறப்பட்டு இரவு 10.49 மணிக்கு Gare de Lyonஐ
வந்தடையவுள்ளது.
இதற்கான பயணச் சீட்டுக்கள் தற்போது விற்பனையாகிக்
கொண்டிருக்கின்றன. உங்கள் பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பிரான்சு தமிழர்
ஒருங்கிணைப்புக்குழுவிடமோ அதன் பிரதேச செயற்பாட்டாளர்களுடனோ
தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. பயணச் சீட்டுக்களை விரைந்து
பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
– தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு.
எதிர்பாராத விதமாய் மழை தூறத் தொடங்கியது. தூக்கக் கூடியவற்றைத்
தூக்கிக்கொண்டு ஏனையவற்றை பொலித்தீன் பைகளால் மூடிவிட்டு அருகிலிருந்த
தட்டியொன்றின் கீழ் எல்லோரும் ஓடி ஒதுங்கினோம். மழை பலப்பதற்கான அறிகுறிகள்
இல்லை. வானம் நன்கு வெளித்திருந்தது.
‘சே! பயிற்சியை முடிச்சிட்டு வேளைக்குப் போய்ப் படுப்பமெண்டா கோதாரிவிழுந்த மழை குழப்புது’ – நித்தி சலித்தான்.
‘மாஸ்டர்! மழை பெலக்காது. தூறலுக்கயே செய்து முடிப்பம். அதுவும்
பயிற்சிதானே. சண்ட நேரத்தில மழை தூறினா ஓடிப்போய் தாழ்வாரத்துக்க
ஒதுங்கிறதே?’ – மலர்விழி சொன்னாள்.
இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன்
முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது
நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது
எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது.
ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.
எதிர்பாராத விதமாய் மழை தூறத் தொடங்கியது. தூக்கக் கூடியவற்றைத்
தூக்கிக்கொண்டு ஏனையவற்றை பொலித்தீன் பைகளால் மூடிவிட்டு அருகிலிருந்த
தட்டியொன்றின் கீழ் எல்லோரும் ஓடி ஒதுங்கினோம். மழை பலப்பதற்கான அறிகுறிகள்
இல்லை. வானம் நன்கு வெளித்திருந்தது.
‘சே! பயிற்சியை முடிச்சிட்டு வேளைக்குப் போய்ப் படுப்பமெண்டா கோதாரிவிழுந்த மழை குழப்புது’ – நித்தி சலித்தான்.
‘மாஸ்டர்! மழை பெலக்காது. தூறலுக்கயே செய்து முடிப்பம். அதுவும்
பயிற்சிதானே. சண்ட நேரத்தில மழை தூறினா ஓடிப்போய் தாழ்வாரத்துக்க
ஒதுங்கிறதே?’ – மலர்விழி சொன்னாள்.
‘இதுக்கயும் உனக்கு நக்கல். எனக்குப் பிரச்சினையில்லை, தூறலுக்க நிண்டு
நாளைக்கு நீங்களொராள் தும்மினாலே கடாபியண்ணை என்னைக் கும்மிப் போடுவார்’. –
இது சசிக்குமார் மாஸ்டர்.
இறுதியில் மழைத்தொப்பிப் போட்டபடி பயிற்சியைத் தொடர்வதென முடிவாகியது.
அணிகள் தமது நகர்வுக்கான தொடக்கப் புள்ளிகளுக்குப் போய் நகரத்
தொடங்குகின்றன. வெட்டைக்குள்ளால், பற்றைகளுள்ளால், வடலிக் கூட்டங்களுள்ளால்
என்று வெவ்வேறு தரைத் தோற்றங்களுள்ளால் அந்த நள்ளிரவில் அணிகள்
இலக்குநோக்கி நகர, இராணுவத்தினராக நியமிக்கப்பட்டவர்கள் நகர்வுகளைக்
கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவொரு மாதிரிப் பயிற்சி. ஆட்லறித்தளம் ஒன்றைத் தாக்கயழிப்பதற்காக
கரும்புலிகள் அணி பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறது. லெப்.கேணல்
சசிக்குமார் மாஸ்டர் (இவர் இம்ரான் – பாண்டியன் படையணியைச் சேர்ந்த
சசிக்குமார்; 2009 இல் வன்னியில் நிகழ்ந்த கடும் போர்க்காலத்தில்
வீரச்சாவடைந்தார். வேவுப்பிரிவு, வரைபடப் பிரிவு போன்றவற்றுக்கு வெவ்வேறு
காலப்பகுதிகளில் பொறுப்பாயிருந்த மற்ற சசிக்குமார் மாஸ்டரோடு இவரைக்
குழப்பிக் கொள்ள வேண்டாம்.) தலைமையில் இந்தப் பயிற்சித் திட்டம்
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அப்போது போரினால் சிதைந்துபோய் பயன்படுத்தாமலிருந்த முல்லைத்தீவு மாவட்ட
வைத்தியசாலைக் கட்டடத்தை மையமாக வைத்து இந்த இராணுவ முகாமின் மாதிரிவடிவம்
அமைக்கப்பட்டுப் பயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சுற்றாடலில்
குறிப்பிட்ட தூரத்துக்கு மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. இரவு, பகல் என்று
மாறிமாறி இறுதிக்கட்டப் பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில்
கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதியைச் சேர்ந்தவர்கள் முழுமையாகவும்
மூன்றாம் தொகுதியைச் சேர்ந்தவர்களில் நாலைந்து பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு
இணைக்கப்பட்டுள்ளார்கள். தாக்குதல் நடத்தும் அணிகள் இன்னும் முழுமையாக
இல்லை. ஏனென்றால் இப்போதும் வேவுக்காக சிலர் உள்ளே சென்றுள்ளார்கள்.
முன்னர் வேவுப்போராளிகள் தகவல்கள் திரட்ட, கரும்புலிகள் தனியே நடவடிக்கை
மட்டும் செய்யும் நிலை மாறி, கரும்புலிகளே வேவுப்பணியையும் செய்து
நடவடிக்கையையும் செய்யும் நிலை நடைமுறைக்கு வந்திருந்தது. இதில்
கரும்புலிகள் தனித்தோ வேவு அணியினருடன் இணைந்தோ இந்த வேவுப்பணியைச்
செய்துகொண்டிருந்தார்கள். வேவு நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளும்
உள்ளனர்.
இப்போது நடந்து கொண்டிருக்கும் மாதிரித் தாக்குதல் பயிற்சியில்
ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களும் மாறிமாறி குறிப்பிட்ட இலக்குக்கு
வேவுக்காகாகச் சென்று வந்துகொண்டிருந்தனர். இந்த வேவு நடவடிக்கைக்கு லெப்.
கேணல் இளம்புலி (முன்னர் மணலாற்று மாவட்டப் படையணியில் இருந்தவர்.
மிகச்சிறந்த வேவுக்காரன். தனியொருவராக இவர் சாதித்தவை ஈழப்போராட்டத்தில்
பொறிக்கப்பட வேண்டியவை. பின்னர் மணலாற்றில் வீரச்சாவடைந்தார்.) பொறுப்பாக
இருந்தார். ஒவ்வொரு முறையும் வேவுக்காகச் செல்பவர்களைக் கூட்டிச்
சென்றுவருவார். சென்றுவரும் அனைவரும் மிகத் திருப்தியாகவே இருந்தார்கள்.
தாக்குதல் எந்தவிதச் சிக்கலுமின்றி நூறுவீதமும் வெற்றியாக அமையுமென்பதில்
யாருக்கும் சந்தேகமிருக்கவில்லை. ஆட்லறித் தளத்துள் வெற்றிகரமாகப்
புகுந்தது மட்டுமன்றி ஆட்லறிகளை மிக நெருக்கமாகவும் சென்று பார்த்து
வந்திருந்தார்கள். குறைந்தது மூன்று முறையாவது அடுத்தடுத்து தொடர்ச்சியாக
இப்படிப் போய்வந்தது மிக அதிகளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
தாக்குதல் இலக்கானது மணலாற்றுக்காட்டுள் அமைந்திருக்கும் ‘பராக்கிரமபுர’
என்ற இராணுவ முகாம். எமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மிக நீண்ட
தூரத்தில் இருந்தது அந்த முகாம். மேலும் அப்பகுதிகளில் – ஏன் அதையண்டிய
பகுதிகளிற்கூட எமது ஊடுருவற் செயற்பாடுகளோ தாக்குதல்களோ நடந்ததில்லை. எனவே
எதிரி மிகமிக அலட்சியமாக இருந்தான். அந்த முகாமின் அரைவட்டப்பகுதி பெண்
இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. சிறிலங்கா இராணுவத்தைப்
பொறுத்தவரை போர்ப்பகுதிகளிலோ, ஆபத்து ஏற்படுமெனக் கருதும் பகுதிகளிலோ பெண்
இராணுவத்தினரைப் பயன்படுத்துவதில்லை. அங்கே நிலைப்படுத்தப்பட்டிருக்கும்
ஆட்லறிகளைக் கூட எதிரி பயன்படுத்துவதில்லை. அவை பயன்படுத்தக்கூடிய
தூரவீச்சுக்குள்ளும் இருக்கவில்லை. மணலாற்றின் முக்கிய இராணுவத் தளங்களான
மண்கிண்டிமலை, கொக்குத்தொடுவாய் போன்ற தளங்கள் தாக்கப்படும்போது
அவற்றுக்கான பாதுகாப்புச் சூடுகளை வழங்குவதற்காகவே இந்த ஆட்லறித்தளத்தை
இராணுவம் அமைத்திருந்தது.
பாதுகாப்பு விடயத்தில் எதிரி மிக அலட்சியமாக இருந்த, ஆனால் கரும்புலிகள்
தமது தாக்குதல் வெற்றியில் நூறு வீதமும் உறுதியாகவிருந்த இந்த முகாம்
மீதான தாக்குதல் திட்டம், ஏனோ தெரியவில்லை சிலதடவைகள் இடைநிறுத்தப்பட்டது.
பயிற்சிகள் இறுதிக்கட்டத்தையடைந்து எல்லாம் தயாராகும் நேரம்
தலைவரிடமிருந்து இடைநிறுத்தச் சொல்லி அறிவித்தல் பிறப்பிக்கப்படும்.
சிலநாட்களில் மீண்டும் கட்டளை கிடைக்க, ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா
எனப்பார்ப்பதற்காக வேவு அணியை அனுப்பிவிட்டு இங்கே பயிற்சி தொடங்கிவிடும்.
பிறகு மீளவும் திட்டம் பிற்போடப்படும். இப்படி இரண்டு மூன்று தடவை நடந்தது.
இவற்றுக்கான காரணம் பின்னர் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.
இந்த வேவுகள், மாதிரிப் பயிற்சிகள் எல்லாம் நடந்துகொண்டிருந்த காலம்
1999 ஆம் ஆண்டு புரட்டாசி, ஐப்பசி மாதங்களில். அன்றைய நேரத்தில்
வன்னியிலிருந்த இராணுவச் சமநிலைபற்றிச் சொல்லியாக வேண்டும். ஜெயசிக்குறு
நடவடிக்கையானது கண்டிவீதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றிய நிலையில்
நின்றுகொண்டிருந்தது. மேற்கிலே ரணகோச தொடரிலக்கத்தில் நடந்து பள்ளமடுவில்
நின்றுகொண்டிருந்தது. வன்னியின் கிழக்கிலே ஒட்டுசுட்டான் சந்தியையும்
தாண்டி எதிரி முன்னேறி நின்றிருந்தான்.
நாயாற்றுக் கடற்கரையிலிருந்து வளைந்து வளைந்து செல்லும் இராணுவத்தின்
முன்னணிக் காப்பரண் வரிசை, நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் வீதியைப்
பாதுகாத்து, ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியைப் பாதுகாத்து நீண்டுசென்று
மேற்குக் கடற்கரை வரை நூற்றுக்கும் அதிகமான கிலோமீற்றர்கள் நீண்டிருந்தது.
அதே காப்பரண் வரிசையை மறித்துப் புலிகளும் தமது காப்பரண் வரிசையை அமைத்துச்
சண்டையிட்டு வந்தார்கள்.
இந்தக் காலப்பகுதியில் நெடுங்கேணி தொடக்கம் நாயாற்றுக் கடற்கரை வரையான
பகுதிகளில் இருதரப்புக்குமிடையே சண்டைகள் நடப்பதில்லை. இப்பகுதிகளில்
படையினரின் செறிவும் குறைவாகவே இருந்தது. அப்போது மிகப்பெரிய ஆளணிக்
குறைபாட்டை சிறிலங்காப் படைத்தரப்புக் கொண்டிருந்தது. முன்னணிக்
காப்பரண்களை விட பின்னணி முகாம்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலேயே அதிக
கவனத்தை சிறிலங்காப் படைகள் செலுத்தியிருந்தன. இந்தப் பகுதிகளூடாக
புலிகளின் வேவு அணிகள் மிகச் சுலபமாகப் போய்வந்துகொண்டிருந்தன.
‘பராக்கிரமபுர’த்துக்கான வேவும் இவ்வழியேதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
பராக்கிரமபுர மீதான தாக்குதல் நடந்தால் மணலாற்றின் முன்னணிக் காப்பரண்
வரிசையில் மாற்றங்கள் நடக்கும். இராணுவக் கட்டுப்பாட்டுக் காடுகளுக்குள்
புதிதாக தற்காலிக சிறுமுகாம்கள் அமைக்கப்படலாம்; புதிய சுற்றுக்காவல்
அணிகள் வருவிக்கப்பட்டு காடுகளில் கண்காணிப்புக்கள் அதிகரிக்கலாம். புதிய
சூழலைப் படித்து முடிக்க இயக்கத்துக்கு இன்னும் சிலகாலம் தேவைப்படலாம்.
இம்முகாம் மீதான தாக்குதல் மட்டுமே இப்போதைக்குப் போதுமென்றால் இவற்றைப்
புறக்கணித்து அந்தத் தாக்குதலைச் செய்யலாம். சமீபகாலமாக யுத்தகளம்
மந்தமடைந்திருந்தது. இராணுவச் சமநிலையில் தமிழர் தரப்பின் கையை ஒருபடி
உயர்த்த இத்தாக்குதல் பெரிதும் தேவைப்பட்டது. இத்திட்டத்தோடு தொடர்புடைய
போராளிகள் நூறுவீதமும் வெற்றி உறுதியான இந்த நடவடிக்கையைப் பெரிதும்
எதிர்பார்த்தார்கள். இது பிற்போடப்பட்டுக் கொண்டிருந்த காரணத்தை அவர்களால்
விளங்கிக் கொள்ள முடியவில்லை.
ஆனால் தலைவருக்கோ இத்திட்டம் மட்டுமே மூளையில் இருக்கவில்லை.
மணலாற்றுக்காட்டில் எதிரியின் அந்த இலகுத்தன்மை அவருக்குத் தேவையாக
இருந்தது. அதில் கல்லெறிந்து குழப்ப அவர் விரும்பவில்லை. ஆனாலும்
பராக்கிரமபுர மீதான தாக்குதல் திட்டத்தையும் முழுமையாகக் கைவிடவில்லை.
தொடரும்…
கடந்து போக முடியவில்லை கறுப்பு யூலை நினைவுகளை நிமிர்ந்து நிமிர்ந்து நாம் நிலத்தில் எழுந்த போதும் அழிந்து போன தடத்தின் சுவடு ஆழப்பதிந்த கிடங்காய் நெஞ்சில் சிரித்து சிரித்து மகிழ்ந்து வாழ சிந்தை தெளிந்தவர் இவர் என மற்றவர் எம்மை மதிப்பிட்டாலும் அழிக்க முடியா வடு ஆழப்பதிந்து அரக்குப் போல மெல்ல மனதை அரித்து அரித்து தின்ன அகத்துள் அழுது அழுது தவிக்கிறோம்...
ஆக்கம் ஈழத்துப்பித்தன்
லெப்.செல்லக்கிளி அம்மான் சதாசிவம் செல்வநாயகம் தமிழீழம்(யாழ் மாவட்டம்) தாய் மடியில் 15.06.1953 மண் மடியில் 23.07.1983
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்ற
திருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்க
வளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர்.
1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச்
சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான்
வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G
உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின்
பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.
நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க
எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்கு தான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான்
அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு
வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து
இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே
எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின்
விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து
நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.
முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும்
வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால்
றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை.
வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால்
தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின்
கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு
இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.
எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து
யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும்
இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10
பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி
பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில்,
கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க
முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம்.
அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை
எமக்கு அறிவிக்கும்.
விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி
தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின்
சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத்
தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது.
கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு
ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட
உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி
சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு
அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான்.
துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை
இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்.
தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து
திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து
தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை
கூப்பிடுகின்றது.
செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி
வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான்.
அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும்
தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.
வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர்
”அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ”” என்று கத்த அப்பையா
அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும்
அலறியது.
“அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப்,
பின்னால் ட்ரக்” என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு
கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத்
தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
ஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால்
தாக்கி அதில் தப்புவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில்
பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான்.
விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர்.
வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான்
எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த
விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று
புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன.
நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர்
நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி
வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது.
எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை.
உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி
வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது
என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை
விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.
மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் பற்றி தேசியத்தலைவர் காணொளியில்.
சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு
நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே
பின்னால் நடப்பவை பற்றி ‘ எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு
விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற
ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு
அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த
அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.
ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே
இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி
வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம்.
மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக்
குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி
எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன்
ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை
வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான்.
விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம்
அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச்
சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ
துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான்.
தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில
வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள்
தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று
நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள்
தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி
மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி
வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும்,
ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை
இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே
கூறலாம்.
ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர்
தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.
தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே
குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து
பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக்
அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக்
அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக்
போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3
வெடிக்கத்தொடங்கியது.
ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான
நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட
சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக
விழுத்தத்தொடங்கியது.
சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.
ஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி
அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை
கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9
இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.
ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச்
சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும்
மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக
அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக்
கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில்
தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக
இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர்
ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது
தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத்
தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும்
கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி
முழங்குகிறது.
இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை
நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு
கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை
மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க
வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி
சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும்
அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத்
துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள்
சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.
அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது
தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை
விட்டிருந்தான்.
விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த
ஒழுங்கையிலிருந்து ‘”பசீர் காக்கா”” றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச்
சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை
மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார்
காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன்
S.M.G உடன் ஓடி வந்தான். ‘சுடு” என்ற அப்பையா அண்ணை உடனே ‘கவனம் எங்கட
பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு” என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன்
பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து
எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட்
என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை
உறுதிப்படுத்தின.
இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு
போரளியையும் ”தம்பியிடம் ஓடு” என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள
வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.
ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது
ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3
ஓயவைத்துவிட்டது.
சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு
அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த
ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.
மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர்
இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ”யாரது”” என்று
முன்னே வந்தனர்.
”அது நான்ராப்பா”” என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம்
முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ”அண்ணை எங்கடை பக்கம்
பிரச்சினையில்லை”” என்றார் ரஞ்சன்.
”இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக
எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்””
என்றவாறு தன் பிரியத்திற்குரிய பG3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.
மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின்
அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான்.
குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.
இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன்
சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை.
‘எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்” எனக்
கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த
மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ”அண்ணா அவன் அனுங்குகிறான்.” மீண்டும்
ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி
எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை
G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.
இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர்
போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு
பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால்
ஓடினோம்.
”கரையால் வாருங்கள்”” என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை
சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத்
தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த
இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து
கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.
இத் தாக்குதல் இரவு நேரடி மோதலால் எம்மையும் இராணுவத்தினரையும்
பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே
ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை
தயார்நிலைக்கு கொண்டு வந்து ”யாரது” என்று வினவ அம்மான் ”அது நான் தம்பி”
என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார்.
பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி
பணிக்க ”அம்மானைக் காணவில்லை”” என்று விக்ரர் கத்தினான். விக்ரரும்
புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ”டேய் அம்மானுக்கு வெடி
விழுந்திட்டுது” என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும்
அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.
வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.
லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.
வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத்
தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும்
சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.
அன்புடன் கிட்டு
இவ்
வீரத்தளபதிக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாளில்
வீரச்சாவை தழுவிக்கொண்ட ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை
தெரிவித்து கொள்கின்றோம்.
தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.