சுபாரஞ்சன் எழுதிய தியாக தீபம்

நா வறண்டு நீ சுருங்கி
ஏற்றிய விடுதலை நெருப்பு
எரிந்துகொண்டே
இருக்கிறது

வல்லாதிக்கங்களின்
மனச்சாட்சிக் கதவு
மூடப்பட்டாலும்
இந்த வான்வெளி எங்கும்
ஒலிக்கிறது
உன் விடுதலை முழக்கம்

முப்பது ஆண்டுகளாக
முணுமுணுத்துக்கொண்டிருக்கும் விடுதலைக் கீதம்
உலக அரங்கிலே
உரத்துப் பாட வேண்டும் திலீபா
உன் கனவு மெய்ப்பட வேண்டும் ......

 ஆக்கம்  சுபாரஞ்சன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக