எழுக தமிழ் வெற்றிகரமாக மட்டுநகரில் தமது தடத்தினை பதித்திருக்கிறது. எம் மக்கள் உணர்வால் வேறுபட்டவர்கள் அல்ல என்பதை இன்று நிரூபித்திருக்கின்றனர்.
இதன் போது பங்களிப்பு செய்த அரசியல் தலைவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் இத் தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அதோது சமூக இணைய தளங்களில் பங்களிப்பும் ஏராளம். அவர்களுக்கும் நன்றிகள். கௌரவ விக்னேஸ்வரன் ஐயா உற்பட கஜேந்திரகுமார், வியாழேந்திரன் போன்றோரையும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
கால நிலையையும் பாராது குழந்தைகள் முதல் வயோதிபர் வரை இந்த உணர்வு மிக்க பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். இதனை பார்க்கும் போது கடந்த காலங்கள் பொங்கு தமிழாக எழுச்சி பெற்றவை நினைவு வருகிறது. தமிழினம் உறங்கவில்லை என்பதை நினைக்க பெருமையே
மட்டு நகரில் மாபெரும் பேரணியாக எழுக தமிழை மாற்றுவோம். அனைவரும் வாரீர்!
எமது உடமைகளுக்கான, எம் சுதந்திரத்திற்கான குரலாக எழுக தமிழ் எம் மண்ணில். அனைவரும் ஒன்றாக ஒரே அணியாக உத்வேகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.


யாழ்ப்பாணத்திலிருந்து எழுகதமிழிற்கான போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் அறியத்தந்துள்ளனர்.
சுயமுனைப்பில் உணர்வாளர்கள் இந்த பயண ஒழுங்கை மேற்கொண்டிருப்பதாகவும்,

இரண்டு அல்லது மூன்று பஸ் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு மட்டக்களப்பு நோக்கி புறப்படும் எனவும், எழுக தமிழ் முடிந்த கையோடு மீண்டும் யாழ் திரும்பும் எனவும் அறியத்தந்துள்ளனர்.

ஒவ்வொருவரும் ஆகக்குறைந்தது தங்களுக்கான பயணச்செலவை அளித்து உதவுமாறு கேட்கப்படுகின்றனர்.
Bring your own food and for others too !!
தொடர்பு இலக்கம் பயணப்பாதை,
கிளிநொச்சி வவுனியாவில் உள்ளவர்கள் ஏறக்கூடிய வசதிகள் பற்றி தெரியவந்தால் , உடனடியாக பதிவேற்றம் செய்யப்ப்டும்
1957 மாசித்திங்கள் 8 ஆம் நாள் தமிழீழம் என்ற தாயகம் தமிழனுக்கு கட்டாயமானது என்றும் அதற்கு அறநெறி முறைகளோ அமைதிவழிகளோ என்றும் உதவாது என்பதை புரிய வைத்த நாள். ஆயுதம் ஒன்றே எமக்கான தன்னாட்சி தனியுரிமை தாயகத்தை எமக்கு பெற்றுத்தரும் என்பதில் இளையவர்கள் உறுதி கொள்ள முதன்மை பெற்றதும் ஆயுதப்போராட்டத்தை கோடிட்டு காட்டியதும் இன்றைய நாள் தான்.
இலங்கையின் 1956இல் ஆட்சியைக் கைப்பற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கையில் எடுத்த ஆயுதம் 'சிங்கள-பௌத்த தேசியம்'. எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க பொறுத்தவரையில் "தனிசிங்களச்சட்டம்" என்று கூறப்படும் தனி சிங்கள மொழிமட்டும் அரசகரும மொழி என்ற புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி பெரிய வெற்றியை அடைந்தார்.1948ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின் இலங்கையின் தேசிய மொழிகளாக சிங்களமும் தமிழும் இருக்கும் என நம்பஇக்கை தரப்பட்டிருந்தது.
1949ஆம் ஆண்டு சுதந்திரதின விழாவில்கூட இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
ஆனால் 1956 தேர்தலையொட்டி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தனது 'சிங்கள-பௌத்த' தேசியவாதக் கொள்கையைப் பலப்படுத்துவதற்காக சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனம் செய்வேன் என சூளுரைத்தார். அதை அவர் ஆட்சிக்கு வந்தவுடனே நிறைவேற்றினார்.
இலங்கை அரசியல் வரலாற்றை மாற்றிப் போட்ட புள்ளியாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 'தனிச் சிங்களச் சட்டம்' அமைந்தது.
பண்டாரநாயக்கவின் புத்துணர்ச்சியுடன் எழுச்சிபெற்ற 'சிங்கள-பௌத்த' தேசியவாதம் ' எமது விடுதலைக்கான நியாயப்பாட்டை எடுத்துக்காட்டியது.
இந்த சட்டமே அன்றைய இளையவர்களை முதன்முதலாக தமிழ்தேசிய விடுதலைக்காக ஆயுதவழி பாதையை தேர்ந்தெடுக்க இனங்காட்டியது. இந்த சட்டம் இயற்றப்பட்ட பொழுது பிரித்தானியாவின் நேரடிக்கண்காணிப்புக்களுடன் உருவாக்கப்பட்டிருந்த யாப்புக்களின் சரத்துக்களை எல்லாம் மீறியே இந்த சட்டத்தை நிறைவேற்றினார் பண்டாரநாயக்க...
அதாவது இந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சோல்பரி யாப்பில் 29(2) சரத்து குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றது. 29(2) சரத்தானது மதச் சுதந்திரத்தைத் தடுக்கும் எந்தவொரு சட்டத்தையும்; ஒரு குறிப்பிட்ட இனத்தை, சமூகத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் குறைபாடுகளுக்கு அல்லது தடைகளுக்கு உட்படுத்தும் எந்தவொரு சட்டத்தையும்; அல்லது குறிப்பிட்ட இனத்தை, சமூகத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஏதேனும் சலுகை அல்லது சாதகத்தன்மை அளிக்கும் எந்தவொரு சட்டத்தையும், எந்தவொரு மதநிறுவனத்தின் யாப்பையும் அதன் இசைவின்றி மாற்றும் எந்தவொரு சட்டத்தையும் நாடாளுமன்றத்தால் உருவாக்க முடியாது என்கிறது. இதை விட முக்கியமாக 29(2) சரத்தை மீறி இவ்வாறு குறிப்பிட்ட சட்டங்கள் இயற்றப்படுமானால் அவை வலுவற்ற சட்டமாகும் என 29(3) சரத்து கூறியது.
ஆனால் இவற்றை எல்லாம் மீறி தனிச்சிங்களச்சட்டம் என்ற புதிய வரைவு ஒன்றை தமிழினத்துக்கு எதிராக அறிமுகப்படுத்தி சிங்கள இனத்துக்கு சாதகமான விளைவுகளை உருவாக்கினார் குமாரதுங்க. இதன்மூலம் தமிழ் இனத்துக்கு பாரிய துரோகத்தை செய்தார்.
இதை எதிர்த்த அன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை செய்தனர். ஆனால் போராட்டத்தை முடக்குவதற்கு அன்றைய அரசு பல முறைகளை கையாண்டது. உண்ணாநிலை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட இடங்கள் வன்முறையாளரால் அடித்து நொருக்கப்பட்டு போராட்டக்காறர்கள் அடித்து வதைக்கப்பட்டனர். அவர்களின் வாய்களில் சிறுநீரை கழித்து சிங்கள ஆட்சியாளர்களின் படு கோர முகத்தை வெளிக்காட்டினர் வன்முறையாளர்கள். அன்று தமிழர் தலைவர்களாக இருந்த ஜீ.ஜீ பொன்னம்பலம், சுந்தரலிங்கம் போன்றவர்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். ஆனாலும் எதுவுமே பலன்றறு போனது
எமது தலமைகளோ இந்தியாவை மட்டும் நம்பி இருந்தார்கள். இந்திய அரசு இலங்கை விவகாரங்களில் தலையிட்டு தமக்கு பெரும் சாதக பதிலை தரும் என்று நம்பினார்கள். ஆனால் 1958 ஆம் ஆண்டு கொழும்பில் வசித்த தமிழர்கள் வன்முறையாளர்களால் அடித்து வதைக்கப்பட்டு இனக்கருவறுப்பு ஆரம்பித்த போது, இனக்கலவரம் என்ற பெயரில் தார்ப்பீப்பாக்களில் தமிழ் குழந்தைகள் உருகிய போது இன்று எப்படி மௌனித்து இருக்கிறதோ அதே பொலவே இந்திய அரசு சத்தமற்று மௌனித்து கிடந்தது.
இந்த காலங்களில் பிறந்து நான்கு வயதாகி இருந்த தமிழீழ தேசியத்தலைவர் இவற்றை எல்லாம் கற்றுக் கொள்ளக்கூடிய வயது வந்த போது மொழிச்சட்டம் அதன் பின்பான இனக்கருவறுப்பு என்பதை எல்லாம் அறிந்து திடமாகினார். இங்கே ஏற்படுத்திய முதல் தாக்கம் அதன் பின்பான காலத்தில் விடுதலைப் போராட்டத்துக்கான பாதையை திறந்து விட தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தம்மை அதி உன்னத இலட்சியத்துக்கான பாதையில் ஈடுபடுத்தி கொண்டார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். தமதுயிரை துச்சமென மதித்து தம் மொழிக்காக ஆயிரம் ஆயிரம் இளையவர்கள் விழி மூடி போனார்கள். தமது உன்னத இலட்சியமாம் தனித்தாயகத்துக்கான போராட்டத்தில் சிங்களத்தை எதிர்த்து நின்ற வேங்கைகள் விழி மூடினார்கள்...
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை விடிகின்ற தமிழாகி விழுதாகி நிற்கும் இந்த மாவீரர்களுக்கெல்லாம் இன்றைய நாளே போராட்ட பாதையை இனங்காட்டிய நாளாகும்..
2005 மாசித்திங்கள் 7 ஆம் நாள் இலங்கை அரசு தான் சண்டைப்பிரியர்கள் என்று உறுதிப்படுத்திய நாள். தமிழீழத்திற்கு பெரும் சோகத்தை தந்து தனக்கும் நடந்த துயரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உள்ளுக்குள் வெற்றி பெற்றதாக நகைத்துக் கொண்ட நாள்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிங்களத்தின் ரணில் அரசுக்கும் இடையில் சர்வதேச நாடுகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட சண்டை நிறுத்தம் 2002 ஆம் வருடம் ஆரம்பித்த போது தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதாவது இராணுவ ஆளுகைக்குள் இருந்த பகுதிகளிலும், விடுதலைப்புலிகளின் அரசியல் போராளிகள் அரசியல் வேலைகளுக்காக சென்று வரலாம் என்ற ஒரு நடைமுறையை சண்டைநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து ஒன்று ஏற்று கொண்டிருந்தது. இதன் பிரகாரம் நோர்வே நாட்டின் தலமையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சண்டை நிறுத்த காலத்தில் போராளிகள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் அரசியல் வேலைகளோடு நின்றனர்.
அதில் ஒருவன் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பொறுப்பாளனாக மக்கள் பணியில் இருந்த போராளி தான் லெப்டினன் கேணல் கௌசல்யன். தமிழீழ அரசிற்குரிய நிர்வாக கட்டமைப்புக்குட்பட்ட அரசியற்துறை சார்ந்த அனைத்து நிர்வாகங்களும் சரியான வகையில் மட்டு அம்பாறை மாவட்டங்களில் நடைமுறையில் செயற்படுத்த வேண்டுமென உறுதியாக நின்றவன் சமாதான காலப்பகுதியில் மக்களுக்கான உச்சமான அரசியல்ப் பணியினை செயற்ப்படுத்த அரசியல்துறைக்கு உட்பட்ட தமிழீழத்தின் அனைத்துக் கட்டமைப்புக்களையும் மட்டக்களப்புக்குள் நகர்த்தி மக்களுக்கான அரசியற் பணியை முன்னெடுத்தார்.
அரசியல்துறை மட்டுமல்லாது புலனாய்வுத்துறை தமிழீழ காவற்துறை, நீதி நிர்வாகத்துறை, நிதித்துறை, படைத்துறை, அனைத்துலக தொடர்பகம் என்று எந்த துறை சார்ந்த அனைத்து பொறுப்பாளர்கள் தளபதிகளுடன் இணைந்து தாயாக விடுதலை வீச்சை விரைவு படுத்துவதில் முக்கிய போராளியாகி இருந்தவர். அதற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.
இந்த காலத்தில் தமிழ், முஸ்லீம் மக்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்களை வேறுபாடுகள் அற்று ஒன்றுபடுத்துவதிலும் வெற்றி காணத்துடித்து செயற்பட்டார். அதை விட எமது அமைப்பின் மீது கறை படிந்த பல துரோகத்தனங்கள் முளை விட்டு வளர்வதும் அதை உடைத்தெறிவதும் வரலாறு. அந்த வரிசையில் தென் தமிழீழத்தில் 2003 ஆம் வருட காலத்தில் நடந்த துரோகத்தனத்துக்கு பின் எமது போராட்டம் மீது சர்வதேச அளவில் ஏற்பட்ட அதிர்ப்த்தியை களைய வேண்டிய பாரிய பொறுப்பும் கௌசல்யனுக்கு வந்திருந்தது.
இதை எல்லாம் உடைத்து பயணித்த அரசியல் போராளிக்கு எதிர்பார்க்காத பெரும் அதிர்ச்சியும் சுமையும் கடல் மடியில் சுனாமி என்ற உருவத்தில் வந்து சேர்ந்தது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் கடலால் வலுவிழந்து போன போது, இந்திய இலங்கை அரசாங்கங்கள் கூட திணறிக்கொண்டிருந்த மீள்கட்டுமான, ஆற்றுகைப்படுத்தல் பணிகளை உலகம் வியக்கும் வகையில் விடுதலைப்புலிகள் செய்து முடித்திருந்தனர். அதில் முக்கிய பங்கு கௌசல்யனுக்கு உண்டு.
இத்தகைய ஆளுமை மிக்க போராளிக்கு தேசியத் தலைவரின் பணியகத்தில் இருந்து அழைப்பு வந்திருந்த போது தனது போராளிகள் மூவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேரு ஆகியோருடன் வன்னி சென்று தலைவரையும் அரசியல்துறை பொறுப்பாளரையும் சந்தித்து விடைபெறுகிறார். வவுனியா இராணுவ தடைமுகாமில் போராளிகளின் பயணிப்பை உறுதிப்படுத்தி கொள்கிறது சிங்கள படை.
தடைமுகாமில் இருந்து திட்டமிட்ட தொடர் கண்காணிப்பு வளையத்துக்குள் இவர்களது வாகனத்தை வைத்திருக்கிறது சிங்கள புலனாய்வு பிரிவு. வெலிகந்தையில் வைத்து இவர்களை நயவஞ்சகமாக கொலை செய்ய வேண்டுமென்று திட்டமிடப்பட்டு சிங்கள புலனாய்வாளர்களும் தேச விரோத கும்பலும் வெலிக்கந்தையில் காத்து கிடக்கின்றனர்.
நிராயுத பணிகளாக வந்த கௌசல்யனின் அணி எதுவும் அறியாதவர்களாய் பயணத்தை தொடர, கோழைத்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொன்றனர் அவர்களை.
மண்ணின் விடுதலைக்காக லெப்.கேணல் கௌசல்யன்,மேஜேர் புகழவன்(சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜேர் செந்தமிழன்(தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2லெப்.விதிமாறன்(சிவபாதம் மதன் செட்டிபாளையம்) ஆகிய வேங்கைகள் அந்த இடத்திலையே வீரச்சவடைய வாகன சாரதி எஸ்.விநாயக மூர்த்தியும் சாவடைகிறார். மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு படுகாயமடைந்து அடுத்த நாள் மருத்துவமனையில் சாவடைகிறார்....
இந்த சம்பவத்தை சர்வதேசமே அதிர்சசியோடு பார்ததது... ஐ.நா செயலராக இருந்த கோபிஅனான் கண்டனத்தினூடாக சிங்களத்தின் மிலேச்சத்தனத்தை வெளியிட்டிருந்தார்...
கவிமகன்


1998.02.02 கிளிநொச்சி நகரை கைப்பற்றி அதனூடாக சிங்களத்தின் சுதந்திர தினக்கொண்டாட்டத்திற்காக மக்களை கண்டி வீதியால் கொண்டுவருவோம் என்று இறுமாப்பு கொண்ட சிங்களத்தை கிளிநொச்சி நகரை அண்மிக்க கூட விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. தமிழீழத்தை கட்டி எழுப்புவதற்காக தமது இன்னுயிர்களை கொடுத்து எங்கள் தேசத்தின் இருப்பை நிலை நிறுத்தினார்கள் மானமாவீரர்கள்.

சிங்களத்தின் அனைத்து திட்டங்களையும் உடைத்தெறியும் வல்லமை மிக்க படைத்தளபதிகள் அனைவரும் தமது அணிகளோடு காத்திருந்தார்கள். கிளிநொச்சி பரந்தன் படைமுகாமை தாக்கி அழிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி சிங்களத்தின் எண்ணத்தில் தீயை வைத்தனர்.
சண்டை எமக்கு சாதகமற்று போனாலும் சிங்களத்துக்கு புலிகள் பலம் இன்னும் குறையவில்லை நாம் இன்றும் பலமானவர்களாகவே இருக்கின்றோம். உன் அதீத பாதுகாப்பு வளையங்களை தாண்டி உன் பிடரியில் கைவைக்க எம்மால் முடியும் என்ற செய்தியை சொல்லி சென்ற சண்டையாக இது அமைந்தது. இச்சண்டையில் 150 போராளிகளுக்கு மேல் களச்சாவு அடைந்தனர்.

இதில் மேஜர் பகலவன் என்ற மாவீரனும் ஒருவன். பெயருக்கேற்ற பண்புள்ளவன் தமிழீழ கலையுணர்வுகளுக்கு வெளிச்சமூட்டும் நல்ல ஒளியாளனாக பகலவன் மிளிர்ந்தான்.

சிறுவயது முதல் தமிழ் தேசியம் மீது பற்று கொண்டவனாகவும் கலைகள் மீது ஈடுபாடு கொண்டவனாகவும், நல்ல அரசியல் பேச்சாளனாகவும் இருந்தான் நாகராசா பாஸ்கரன் என்ற இளைஞன். பள்ளி காலத்தில் தமிழின் கலைகள் அத்தனையையும் வெளிக்காட்டும் ஒரு நற்பண்புள்ள மாணவன். கறுத்த உருவமெனிலும் வெண்மையான உள்ளம் கொண்டவன். வடமராட்சி மண்ணின் கரவெட்டி மண் பெற்றெடுத்த நல்ல புதல்வனாக நாகராசா மணவிணையரின் மகனாக தவழ்ந்தான் பாஸ்கரன். இரு தங்கைகள் இரு தம்பிகளின் அண்ணனாக பிறந்தாலும், தமிழீழ மக்கள் அனைவரினதும் நேசத்துக்குரிய அண்ணனாகவே வளர்ந்தான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு விழுதாக தன்னை மாற்ற வேண்டிய தேவையை பள்ளிக்காலத்தில் உணர்ந்து கொண்டான்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத்தளபதியான சூசை அவர்களின் கீழ் வடமராட்சி பகுதி நடவடிக்கைகள் இருந்த காலம் தொட்டு பள்ளி மாணவனாக கலைத்திறன்களூடாக தனது போராட்ட பணிகளை செய்ய தொடங்கினான். திரைப்படம் தொடக்கம் மேடைப்பேச்சு, கவியாடல் , நாடகங்கள் என்று தனது போராட்ட பணிகளை கலைகளூடாக செய்து வந்தவன் அதோடு மட்டும் இருந்து விடாது தனது இயக்க வாழ்க்கையை கழுத்தில் நஞ்சை கட்டிய போராளியாக தொடங்க ஆசை கொண்டான். சிறப்புத்தளபதி சூசை அவர்களின் நெறிப்படுத்தலில் பகலவன் என்ற பெயரைத்தாங்கி விடுதலை பாரத்தை சுமக்கும் பெரு விருட்சத்தின் விழுதாக பகலவன் மாறிப்போனான்.

சிறிது காலத்திலேயே கலைபன்பாட்டுக்கழகத்தின் வடமராட்சி கோட்ட பொறுப்பாளனாகி எமது கலையுணர்வுகளை வளர்க்கும் பெரும் பணியை செய்து வந்தான் பகலவன். தமிழீழ கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை அண்ண தொடக்கம் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணை முதல் தேசியத்தலைவர் வரை கலையுணர்வுகள் மூலம் கவனத்தை பெற்றவனாக தனது பணியில் இருந்தான் பகலவன். அடிக்கடி தேசியத்தலமை தனிப்பட்ட ரீதியில் சந்திப்புக்கள் மூலம் கலை பண்பாட்டை கட்டி எழுப்ப வேண்டிய அவசியத்தை உணர்த்திய போதெல்லாம் அதற்கு செயல் வடிவம் கொடுத்த பெரு வேங்கை.

சிங்களத்தின் கைகளில் யாழ்ப்பாணம் வீழ்ந்த போது நிர்வாக கட்டமைப்புக்கள் அனைத்தும் வன்னிக்கு நகர்த்திய புலிகளின் அணியில் பகலவனும் நகர்ந்திருந்தான். பரப்புரைகள், ஆற்றுகைப்படுத்தல்கள் என்று வன்னியில் தொடர்ந்த இயக்கப்பணிகள் அனைத்திலும் ஒரு மக்கள் சேவையாளனாக மக்களோடு மக்களாக நிற்கும் தோழனாக நின்றான். அவனை சிறந்த கலையாளனாக இனங்காட்டியது அவன் நடித்த திரைப்படமான "திசைகள்வெளிக்கும்" சமூகவியல் முழு நீள திரைப்படம். இவ்வாறான கலையுணர்வு மிக்க போராளி சண்டைக்கான தருணத்தை எதிர்பார்த்திருந்த போது,

கிளிநொச்சி பரந்தன் இராணுவ முகாம் தகர்ப்பு நடவடிக்கைகளுக்காக அணிகள் ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஆயுத தளபாட மருத்துவ வழங்கல் அணி ஒன்றுக்கான வேலை இவரிடம் கொடுக்கப்படுகிறது. சண்டை அணிகளுக்கு தேவையான ஆயுத வழங்கல் மற்றும் மருத்தவ வழங்கல் போன்றவற்றை ஒழுங்கு படுத்துதலே இவர்களின் பணி.

ஒரு சண்டைக்கு தேவையான வளங்கள் தடைப்படும் போது அந்த சண்டை அணி வென்றதான சரித்திரம் உலக போரியலில் இல்லை. அதே போலவே எமது படையணிகளுக்கு தேவையானவற்றை தேவையான இடங்களுக்கு உடனுக்குடன் அனுப்பி அவர்களுக்கான சகல வளங்களையும் நிறைவுபடுத்த வேண்டிய முக்கிய பணி இவர்களுடையது. ஒரு ஆயுத ரவைப்பெட்டி கிடைக்க வேண்டி இடத்திற்கு போய் சேரவில்லை என்றாலும் அந்த சண்டையின் போக்கே மாறிவிடும் அத்தகைய முக்கிய பணியில் இருக்கும் வழங்கல் அணியினரே எதிரியின் முக்கிய இலக்குகளும் கூட. அத்தகைய முக்கிய பொறுப்புடன் சண்டைக்கு சென்ற யான் பகலவன்.

சண்டை தொடங்கி குறிகிய நேரத்திலையே களத்தில் இருந்து பின் கொண்டுவர வேண்டிய காயமடைந்த போராளிகளை நகர்த்தி கொண்டு மருத்துவ தேவைகளை நிறைவேற்றி கொண்டிருந்த போது, நான் ஏற்கனவே குறிப்பிட்டதை போல சிங்களத்தின் விமான மற்றும் எறிகணை செலுத்திகள் இவர்களது இலக்கை இனங்காணுகின்றன.

ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலாக மருத்துவ உதவிகள் மற்றும் வழங்கல் அணியினர் மீது சிங்களம் பெரும் தாக்குதல் ஒன்றை செய்கிறது. அங்கு வீழ்ந்து வெடித்த சிங்களத்தின் எறிகணைகள் மற்றும் விமானங்களின் குண்டு சிதறல்களை தனது உடலில் தாங்கிய தன் அணியனரை மீட்க முன்னரங்கப்பகுதில் இருந்து வந்த பகலவனும் சண்டை வெற்றிக்காக தம் தோழர்களோடு விழி மூடிப்போனான். தாகம் தமிழீழம் என்று தனது நெஞ்சில் சுமந்த வீர வேங்கை தன் கனவுகளை கிளிநொச்சி மண்ணில் விதைத்து தமிழீழ தேசத்துக்காக விழி மூடிப் போனான்....
நினைவு பகிர்வு கவிமகன்.இ
02.02.2017
1998 ஆம் ஆண்டு இதே நாளில் தமிழீழத்தின் கழுத்துப்பகுதியாக இருக்கும் ஆனையிறவு படை முகாமை நோக்கிய தாக்குதல் ஒன்று நடைபெற்றுருந்தது. வருகின்ற சுதந்திர தினத்தைக்கு மக்களை கிளிநொச்சி ஊடாக கண்டி வீதியில் இருந்து கொண்டுவருவோம் என்று கூறி "சத்ஜெய "படை நடவடிக்கையை எடுத்து வந்த சிங்களத்தின் முதுகெலும்புடைக்க திட்டமிடப்பட்ட சண்டை ஒன்றுக்கான வலுவேற்றும் சண்டையாக இன்றைய நாள் ஆனையிறவுப்படை முகாமுக்குள் பெரும் பூகம்பத்தை விளைவிக்க கரும்புலிகள் அணி ஒன்று உள்நகர்ந்திருந்தது.
லெப்டினன் கேணல் சுபேசன் அல்லது கிள்ளிவளவன் தலமையில் கரும்புலிகளான மேஜர் குமுதன், மேஜர் ஜெயராணி, மேஜர் ஆசா, மேஜர் மங்கை, கப்டன் குமரேஸ், கப்டன் இந்து, கப்டன் நளாயினி, கப்டன் தனா கப்டன் உமையாள், கப்டன் செங்கதிர் ஆகிய வேங்கைகள் தாக்குதலுக்கான கட்டளைக்காக காத்திருந்தனர். கட்டளைப்பீடத்தில் இருந்து கட்டளை வந்த போது எரிமலையாக குமுறிய கரிய புலிகள் ஆனையிறவு தளத்தை துவம்சம் செய்தனர்.
சிங்களப்படையின் முதுகெலும்பை உடைக்க ஆனையிறவு படைத்தளத்தில் ருத்ர தாண்டவம் ஆடனர் கரும்புலிகள். தாம் வெடித்து இனங்காத்த மாவீரங்களாக ஆனார்கள். தமிழீழ தேசத்துக்காக இரத்த சிதறல்களாக காற்றோடு கலந்து விட்டார்கள் எம் கரிய புலிகள். அவர்களின் உயிர் தியாகம் எம் தமிழீழத்தை உயிர்ப்பிக்கும் என்பது திண்ணம்...
சண்டை நடந்து கொண்டிருக்க கொடுக்கப்பட்ட இலக்குகளான ஆட்லறி தளத்தினை முற்றுமுழுதாக தகர்த்தெறிந்த கரும்புலிகள் அடுத்த நகர்வுக்காக காத்திருந்தனர். ஆனால் கரும்புலிகளை தளம் திரும்புமாறு கட்டளை வந்த போது, வீரச்சாவடைந்த தமது தோழர்களை நினைவோடு சுமந்து கொண்டு தளம் திரும்புகின்றனர்.
அணித்தலைவனான சுபேசன் நெஞ்சிலும் காலிலும் பாரிய விழுப்புண் பட்டிருந்ததால் அவனால் நகர முடியாத நிலை ஆனால் அவனை தூக்கி கொண்டு செல்ல முனைகின்றனர் அணியினர். " இல்ல என்னை விட்டிட்டு நீங்க போங்கோ" அவன் கத்துகிறான். இல்ல உங்கள விட்டு போக மாட்டம். அவனை விட்டு செல்ல விரும்பாத அணி அவனிடம் கெஞ்சுகிறது. "நீங்கள் நிறைய சாதிக்க வேண்டியவர்கள் என்னை தூக்கி செல்வதால் தாமதமாகி நீங்களும் காயப்பட வேண்டாம் அண்ணனை கவனமா பாருங்கோ நான் சார்சர் இழுக்கப் போறன். அவன் கட்டளை இடுகிறான். அவனை விட்டு பிரிந்த சில வினாடிகளில் அதிரந்த வெடியோசை ஊடாக சுபேசனின் ஓங்கி ஒலித்த குரலும் ஓய்ந்து போனது. அணி தளம் மீளகிறது... அணியின் இருந்து களத்திடை வெடித்த 11 கரும்புலிமறவர்களின் தியாகத்தை சுமந்தவாறு