அ.பவளம் பகீர். எழுதிய அறவழி நின்ற ஐயா திலீபா....!!

அறவழி நின்ற ஐயா திலீபா....!!
இராசையா பார்த்தீபனாய்
ஊரெழுவில் அவதரித்தீர்களே,
யாழ் இந்துவின் மைந்தனாய்
மருத்துவத்துறை மாணவனாகி
எதுவுமே பின்னர் வேண்டாமென
பல்கலையை பாதியிலே விட்டெறிந்து
விடுதலை பாதையில் இணைந்தீர்களே....!

பார்த்து பார்த்து பொறுமையிழந்து
உண்ணா நோன்பிலே குதித்தாய்
நல்லையின் பின் வீதியிலே
நாமூன்று தினங்கள்
ஐந்து கோரிக்கையோடு
நீராகாரம் எதுவுமின்றி
நாவறண்டே கிடந்தாயே ஐயா.....!

உன்னை இழந்திடக் கூடாது அதற்காய்
நாம் கெஞ்சி கெஞ்சிப் பார்த்தோமே
பாரதம் எங்களை வஞ்சித்து போனதே,
அஹிம்சையுடன் அறப்போரிட்டே
ஆகுதியான எங்கள் ஐயா திலீபா....!
நீங்கள் விட்டுப் போன கோரிக்கைகூட
நிறைவேற்ற முடியாதவர்களாய்
நாம் இன்று ஆரம்ப நிலைக்கே
மீண்டும் வந்து நிற்கின்றோம்.....!

அறவழி நின்ற ஐயா திலீபா
கொஞ்சம் திற விழி திலீபா
மீண்டும் ஒருமுறை சொல்லிவிடு
மக்கள் புரட்சி வெடிக்கட்டுமென.....!!

ஆக்கம்  அ.பவளம் பகீர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக