தலைவர் அடுத்த கட்ட தலைமையைதெரிவுசெய்வதில் தவறிவிட்டார் முன்னாள் போராளி கவலை!!

தமிழர்களின் தலைவராக அனைத்து விடயங்களை தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்த தலைவர் ஓரு விடயத்தில் தவறிவிட்டதாக முன்னாள் போராளி ஒருவர் கவலை வெளியிட்டார்.
இலங்கை தொலைகாட்சி ஒன்றில் பங்குபற்றி தமது வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகளை விளக்கியபோதே இதனை முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்தார்.
பட்டினியால் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டதை அறிந்து பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தை தொடக்கிவைத்தவர். கரும்புலியாகிச் சென்ற காந்தரூபனின் வேண்டுகோளை ஏற்று காந்தரூபன் அறிவுச்சோலையை தொடக்கிவைத்தவர்.
நவம் என்ற மாவீரனின் வேண்டுகோளை ஏற்று அங்கவீனமடைந்த போராளிகளின் வளர்ச்சிக்காக நவம் அறிவுக்கூடத்தை நிறுவியவர். ஆனால் தமிழர்களின் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய தலைமையை தெரிவுசெய்வதில் தவறிவிட்டார் என மனவருத்தத்துடன் தெரிவித்தார்.
ஏழு வருடங்களாக தடுப்பில் உள்ளவர்களை விடுவிப்பதில் கூட அக்கறையெடுக்காமல் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக சம்பந்தனை சந்திப்பதற்காக தடுப்பிலிருந்து விடுதலையானவர்கள் சென்று சந்தித்தபோதும் அவர்களது கவலைகளை கேட்காமல் பத்திரிகை வாசித்துக்கொண்டு அலட்சியம் செய்யப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக