ஈழதேசத்தை சிங்கள தேசமாக மாற்றியும் மாற்றவும் முயல்கிறான்......

யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வு சிங்கள இனவெறியர்களால் ஆரம்பிக்கப்பட்டது.. என பரவலாக பேசப்பட்டு வருகிறது.. மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நிரலில் கண்டி நடனம் இல்லாதபோதும் அதனை உள் நுழைத்துள்ளார்கள்.. இதன் காரணம் என்ன ? என்றும் இல்லாதவாறு கண்டி நடனம்
யாழ் பல்கலைக்கழகத்தில்..
இதற்க்கு அனுமதி வழங்கியவர்கள் யார் ? கண்டி நடனத்தில் பங்குபற்ற வந்தவர்கள் எங்கிருந்து வந்தனர் ? இவர்களை இங்கு அழைத்து வந்தது யார் ? இந்த ஏற்பாடுகளை செய்தது யார் ?
மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நிரல் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது கண்டி நடனம் பற்றிய எந்த அறிவித்தாலும் ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கப்படாமல் திடீரென கண்டிநடனம் அங்கு வந்தது.. அதன் காரணம் என்ன ?
எது எப்படியோ எமது மண்ணில் சிங்களவன் அச்சமன்றி தமிழர் கலாச்சாரம் பண்பாட்டை அழிக்கவும் தமிழர் தேசத்தை சிங்கள தேசமாக மாற்றியும் மாற்றவும் முயல்கிறான்.. யாழ்ப்பாணத்தில் சிங்களவன் தேர் இழுக்கிறாராம்.. எம்மை கொன்று எங்கள் இரத்தத்தில் குளித்தவன், எங்களை எப்படியெல்லாம் நாசம் பண்ணியவன் இப்பொழுது எங்களுடன் சேர்ந்து வாழ்கிறார்களாம்..
இதெல்லாம் எங்களை அடிமைப்படுத்துவதும் அவமானப்படுத்துவதுமான செயல்.. உலகுக்கு அவர்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று காட்டுவதற்கு என்பதை மறந்து விடாதீர்கள்.. சிங்கள அரசு நன்கு திட்டமிட்டு எம்மினத்தை அழிக்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள் தமிழர்களே..
எம் அண்ணன் வருவார் எங்களை மறுபடியும் பாதுகாப்பார்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக