தமிழீழத் தேசியக் கொடி பட்டொளிவீச அமெரிக்காவில் தமிழர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

தமிழீழத் தேசியக் கொடி பட்டொளிவீச அமெரிக்காவில் தமிழர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை மற்றும் சமூக உடல்நல அமைச்சின் முன்னெடுப்பில் இது இடம் பெற்றுள்ளது.
நியு யோர்க்கில் உள்ள Forest Parkல் இடம்பெற்றிருந்த இப்போட்டிகளில் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களும் மக்களோடு மக்களாக பங்கெடுத்து வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்குமான விளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்ததோடு, தமிழீழத் தாயகத்தினை நினைவிருத்தும் வகையில் தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றிருந்தன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கதத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட வெற்றிக் கேடயங்களும், மடல்களும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக