2016 ஆம் ஆண்டுக்கான மாவீரர் விளையாட்டு போட்டி ஜேர்மனியில்

2016 ஆம் ஆண்டுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டு போட்டி ஜேர்மனியில் ஆரம்பமாகி உள்ளது. இது ஜேர்மனியின் தென் மாநிலங்களுக்கான தமிழாலயங்களுக்கான போட்டியாக அமைந்துள்ளது. இந்த வகையில், தென்மாநில பள்ளிகள் ஒருங்கிணைந்து நிற்க ஜேர்மனின் புருக்‌ஷால் நகரில் ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்வு ஐரோப்பிய நேரத்தின்படி காலை 10 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, ஜேர்மன் தேசியக்கொடி, தமிழீழ தேசியக்கொடி மற்றும் தமிழ் கல்விக்கழக கொடி ஏற்றலுடன் ஆரம்பித்தது. தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு விளையாட்டு சுடர் ஏற்றப்பட்டு இந்த ஆண்டுக்கான விளையாட்டு நிகழ்வு ஆரம்பித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக