ஈழத்துப்பித்தன் எமுதிய உங்களுக்கான ஒளிதீபம்

நெடிய இரவுகளில்
நீள நடந்து
எதிரியின் குகை புகுந்து
கந்தகம் சுமந்து
கலந்து வெடித்து
காற்றினில் கலத்த
கரிய புலிவீர்ர்காள்
நிலமிடை நீவீர்
நீடு வாழ்வீர்
புலிமற வீரர்
புகழ்தனை சொல்லி
மாண்ட வீரர்
புதைந்த குழிகள்
மறுபடி கிளறி அழித்த பகையால்
தேசக் காற்றினில்
கலந்து கிடக்கும்
உங்கள் நினைவுகளையும்
உணர்வுகளையும்
இனி வரும் காலத்திலும்
அழிக்க முடியாது
அரற்றிக் கிடக்கிறான்
காற்றில் கலந்து எம்
எல்லைகளை காக்கும் சாமிகளே!
தேசம் மீழும் நாளில்
உங்களுக்கான ஒளிதீபம்
கீழ்த்திசை சுழன்றெழும்
அதுவரை காத்திரும்.


ஆக்கம்   ஈழத்துப்பித்தன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக