‪ஈழத்துப்பித்தன்‬ எமுதிய கறுப்பு யூலை நினைவுகள்

கடந்து போக முடியவில்லை
கறுப்பு யூலை நினைவுகளை
நிமிர்ந்து நிமிர்ந்து நாம்
நிலத்தில் எழுந்த போதும்
அழிந்து போன தடத்தின் சுவடு
ஆழப்பதிந்த கிடங்காய் நெஞ்சில்
சிரித்து சிரித்து மகிழ்ந்து வாழ
சிந்தை தெளிந்தவர் இவர் என
மற்றவர் எம்மை மதிப்பிட்டாலும்
அழிக்க முடியா வடு ஆழப்பதிந்து
அரக்குப் போல மெல்ல மனதை
அரித்து அரித்து தின்ன
அகத்துள் அழுது அழுது தவிக்கிறோம்...

ஆக்கம்  ஈழத்துப்பித்தன்‬

0 கருத்துகள்:

கருத்துரையிடுக