பவித்ரா நந்தகுமார் எழுய மழையே! மழையே!

விடுதலை வேண்டி வீழ்ந்தவர்
உணர்வை- பாடிட வேண்டும்
வா மழையே!
விதைக்குள் வீரம்
வெளிக்கிடும் நேரம்
தழுவிட வேண்டும் வா
மழையே!
ஈழ மண்ணில் வீசுகின்ற
காற்றும் கூட காவியம்
ஈகம் செய்த மாவீரம்
எங்கள் ஜீவிதம்
மெல்ல சாரல் பூவை தூவிடு
சாதனைகள் பாடிடு
சந்ததியை வாழ வைக்கும்
கல்லறையை தழுவிடு

களம் பல ஆடி தாய்
நிலம் காத்த
விழி தொட வேண்டும்
வா மழையே!
காவிய பூக்கள் கால்
தடம் தேடி
கரைந்திட வேண்டும்
வா மழையே!
துயிலும் இல்லம்
ஈழ மண்ணில் புனிதமான
கோயிலே
தூங்குகின்ற மாவீரர்
எங்கள் தெய்வமே
நல்ல காலம் சேரும்
பொழிந்திடு
கார்த்திகையில்
மொழிர்ந்திடு
வாழ்வை சரித்த பகைவரை
அடைமழையால்
அழித்திடு.


வீர உறவு மண்ணைப் பாரம்மா
தமிழீழம் சுமந்த
கனவை பாரம்மா
எங்கள் தேச விழியில்
தினமும் கண்ணீர்
மழை தானே
எங்கள் வீர உயிர்கள்
சிந்துவது ரெத்த
மழை தானே
எங்கள் வாசல்
முழுவதும் அன்பு மழை தானே
எங்கள் ஈக உணர்வு
பொழிவது
அணல் மழை தானே!



ஆக்கம் பவித்ரா நந்தகுமார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக