வன்னியூர் செந்தூரன் எழுதிய காடு– நாடு– வீடு– சூடு– மீண்டும் ?

 தந்திரமறியாத நரிகளான
தமிழ் அரசியல்வாதிகளின்
தரமற்ற பிரவேசம் தான்
இனத்திற்கு கொள்ளி நெருப்பு



அண்ணனின் தூரநோக்கையும்
அடியோடு அழித்த உத்தமர்கள்
பணியாரம் தின்னும் ஆசையில்
பல்லையே விலை கொடுத்தவர்கள்

அடிக்கடி உறுமும் ஊடகவிரும்பிகள்
அகரமே தெரியாத அரசியல் ஞானிகள்
நாயின் குதத்தில் தேனிந்தால்
யாருக்கு என்ன பயன் என்பது இவர்களுக்கோ..¡

மக்களை ஏமாற்றிப்பழகிய மறவர்கள்
கொள்கையே இல்லாத குறவர்கள்
அனுதாபத்தையும் தமிழன் அடையவிடாத
அஞ்சாதபரதேசிகள் அரைகுறைக்கிழடுகள்

முள்ளிவாய்க்காலில் தமிழன் வீழ்கையில்–இந்த
முடிநரைத்தவன் சாப்பிடாமல் கிடந்தானா– இல்லை
வெள்ளைத்துணி விரித்து தாண்டிக்குளத்தில்
சாவையெதிர்த்து கடுந்தவமிருந்தானா..?

போராட்டத்தையே கருவறுத்த யானைகளோடு
பேரம்பசிப்பதவி வாங்கி போடியார் என்ன கிழிச்சார்?
போர்க்குற்றத்தளத்தையும் கூறாக்க உதவிவிட்டார்
நம்மவர் வேள்வியிலே கொழும்பில் நக்கித்திரிகிறார்

வழக்கறிஞர் மேதையொன்று ஆர்வக்கோளாறு
விளக்குவைத்த இடமெல்லாம் பல்லைக்காட்டும்
வித்துவான் தானென்று வில்லங்கம் பேசும்
புலத்தில் கோவலப்பட்டும் புத்திவரவில்லை இன்னும்

தேவரான தேவரெல்லாம் தேத்தண்ணிக்கு அலைய
தேவாங்கு தேன்போத்தல் கேட்டதாம் என்பதுபோல
மைத்திரி வந்தால் தான் மகளுக்கு கொண்டாட்டம்
மைனர் ஒருத்தரின் தமிழ்த்தேசியப்பிடிவாதம் யாழில்

எல்லா உள்ளங்களையும் குறைகூற வரவில்லை
நல்லபயிர்களும் நாலைந்து இடையிலுண்டு
பீடைகள் களையப்பட்டால் வீச்சாகும் பயிர்கள்
இனங்காண வேண்டியது எம்மவரின் விரல் ரேகைகள்

ஆக்கம்  கவிஞர் 

வன்னியூர் செந்தூரன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக