பவித்ரா நந்தகுமார் தமிழ் மண் காத்து

நெருப்பினில் கால் வைத்து
செருக்கோடு நடையிட்ட
ஈழ மங்கையே
உன் திடம் கொண்ட
மாந்தர் பூமியில்
இல்லையம்மா
எதிரியவன் உயிர்
குடித்து
தமிழ் மண் காத்து
வரிப்புலியாய்
உறுமிடும் போது
கிழக்கே வெளிக்கிறது
சூரியன் அல்லாமல்

தலைவனின் உறுதி
ஏற்று
விடுதலை பாதை
கடந்தவர்களே
காவியம் பாடுகிறோம்
முடமாக்கப்பட்ட
மௌனிகளாய்


பவித்ரா நந்தகுமார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக