பிரான்சில் இடம்பெற்ற மூதூர் படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு !!


சிறீலங்கா படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 10 வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று 04.08.2016 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டு படுகொலைசெய்யப்பட்டவர்களின் திருஉருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
மூதூரில் மனிதநேயப் பணியாளர்கள் படுகொலைசெய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்தும் இன்னும் நீதிகிடைக்கவில்லை என பலரும் தமது ஆதங்கங்களை அங்கு வெளிப்படுத்தியிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக