சுதன்ராஐ் எழுதிய கேட்பாரற்றுப் போனோம் !

- பேசிப் பேசியே
பேசாப் பொருளானோம் !
பேசிய பேச்சில் - நாம்
வெற்றுச் சொல்லானோம் !

- ஏவல் கூட்டச்
செயலியானோம் - எடுப்பார்
கைப் பிள்ளையானோம் !

- உணர்ச்சிக் கட்டை
நாவில் ஏந்தி
புரட்டி எடுத்தோம் !

- உண்மை சொன்னவர்
கழுத்தில் எல்லாம்
துரோகத்துண்டு போட்டோம் !

- அவனை எதிர்த்து
இவனை எதிர்த்து
தனித் தீவு ஆனோம் !

- அவர் வருவார்
இவர் வருவார்
என்று சொல்லி
கேட்பாரற்றுப் போனோம் !
 
 
ஆக்கம்   சுதன்ராஐ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக