வடக்கின் " எழுக தமிழா " பொங்குதமிழ் போராட்டத்துக்கு அனைவரும் அணிதிரள்வோம் !!


எதிர்வரும் 14 ஆம் திகதி வடக்கினை ஒன்றுதிரட்டி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணி மற்றும் ஒன்று கூடலுக்கு " எழுக தமிழா " என பயிர் சூட்டப்பட்டுள்ளது. கண்டணப்பேரணி மற்றும் பொங்குதமிழ் ஒன்று கூடலினை இணைக்கும் பெயராக " எழுக தமிழா " என பெயர் சூடப்பட்டுள்ளதாக ஏற்ப்பாடுக்குழு தெரிவித்துள்ளன.
தமிழர்களை ஒரு கோசத்தின் கீழ் ஒரு கொள்கையின் கீழ் முழுமையாக அணிதிரட்டும் செயலுக்கு பெயர் பொங்குதமிழ், தமிழர்களை பீடித்த மொத்த அடக்குமுறைகளையும் உடைத்தெறியும் பொதுக்களத்தை குறிக்கும் குறியீடு, ஊர் கூடி, ஆடிப்பாடி, விடுதலைக்கூத்தாடி, நம்மை நாமே ஆழ்வதையும், அனைத்துவித தடைகளிருந்தும் எம்மை விடுவித்து கொள்ளுதலையும் பிரகடனம் செய்து கொள்ளும் மந்திர உச்சாடனம் பொங்குதமிழ்..
தாயகத்தில் முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வை நடாத்துவதற்கு பெரும் பங்கு வகித்த செ.கஜேந்திரன் அவர்கள் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனும் மாபெரும் நிகழ்வின் முக்கியத்துவத்தை இச் செவ்வியில் விளக்குகின்றார்தாயகத்தில் முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வை நடாத்துவதற்கு பெரும் பங்கு வகித்த செ.கஜேந்திரன் அவர்கள் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனும் மாபெரும் நிகழ்வின் முக்கியத்துவத்தை இச் செவ்வியில் விளக்குகின்றார்
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் பொங்குதமிழ் 2001 இல் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது. அங்கு மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், ஆகும்.. நிகழ்வை நடாத்துவதற்கு பெரும் பங்கு வகித்தார் செ.கஜேந்திரன் அவர்கள்..
எனவே பொங்குதமிழ் என்பது ஆன்மதுச்ச்சொல். நூற்றாண்டு கால அடிமைத்தனத்தை உடைத்தெறியும் தமிழ் சமூகத்தின் கூட்டுணர்வுச்சொலென அடையாளப்படுத்தப்படுள்ள நிலையில் கண்டன பேரணி மற்றும் ஒன்று கூடலை " எழுக தமிழா " என பெயரிட ஏற்பாட்டுக்குழு முடிவு செய்துள்ளது..
* சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கக்கூடிய இத்தகைய நடவடிக்கைகளை உடனைடியாக தடுத்து நிறுத்துமாறும்.
*தமிழ் மக்கள் முழுமையாக மீள்குடியேறக்கூடிய வகையில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்குமாறும்?
* தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினரை வெளியேறுமாறும்,
* தமிழின அழிப்பிற்கான பொறுப்புக்கூறலுக்காக ஒரு முழு அளவிலான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை பொறிமுறையை வலியுறுத்தியும்,
* காணாமல் போக செய்யப்படடோர் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
*அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்குமாறும் அத்துடன் பயங்கரவாததடைசட்டத்தை நீக்கக்கோரியும்,
இந்த மாபெரும் ஒன்றுகூடல் மற்றும் பொங்குதமிழ் இடம்பெறவுள்ளது.. இதற்க்கு அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரண்டு குரல் எழுப்பி எமினத்தின் உரிமைக்குரலை இந்த உலகிற்கு உரக்க சொல்லுவோம்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக