ஈழ மண்ணின்
வாசனை அறியும் முன்
கருவிலே இறந்த
குழந்தைகள் எத்தனை
வாசனை அறியும் முன்
கருவிலே இறந்த
குழந்தைகள் எத்தனை
பூவாக தாய் மண்ணில்
பிறந்தோம்
காயாகும் முன்
உதிர்ந்த உயிர்கள் எத்தனை
விழிகளில் புதைந்த
கனவுகள் எத்தனை
விடிகாலை அறியாது
உதிர்ந்த பூக்களும் எத்தனை
ஈழம் சுமந்த வலிகள்
எம் இதயம் மறக்குமா?
இருப்பிடம் இழந்து
எளிதியாய் அலைந்தோம்
அதை நெஞ்சம் மறக்குமா?
விலங்கிட்டு சிறையிட்டான்
தமிழர் விதியையே
மாற்ற துடித்தான் சிங்களவன்
இதை தமிழினம் மறப்பதா ?
உயிர்களை இழந்து
உடமைகள் தொலைத்து
வாழ்விடம் தேடி அலைந்து
கண்களில் கண்ணீர்
நதியென வடிந்தது
இதை மறக்குமா? எம் தேசம்
எத்தனை கொடுமைகள்
எம் மண்ணில் நடந்தது
ஏனோ உலகம்
விழிகள் மூடி கிடந்தது
அத்தனை சோகமும்
எம் நெஞ்சம் மறக்குமா ?
ஆக்கம் சிவா TE
பிறந்தோம்
காயாகும் முன்
உதிர்ந்த உயிர்கள் எத்தனை
விழிகளில் புதைந்த
கனவுகள் எத்தனை
விடிகாலை அறியாது
உதிர்ந்த பூக்களும் எத்தனை
ஈழம் சுமந்த வலிகள்
எம் இதயம் மறக்குமா?
இருப்பிடம் இழந்து
எளிதியாய் அலைந்தோம்
அதை நெஞ்சம் மறக்குமா?
விலங்கிட்டு சிறையிட்டான்
தமிழர் விதியையே
மாற்ற துடித்தான் சிங்களவன்
இதை தமிழினம் மறப்பதா ?
உயிர்களை இழந்து
உடமைகள் தொலைத்து
வாழ்விடம் தேடி அலைந்து
கண்களில் கண்ணீர்
நதியென வடிந்தது
இதை மறக்குமா? எம் தேசம்
எத்தனை கொடுமைகள்
எம் மண்ணில் நடந்தது
ஏனோ உலகம்
விழிகள் மூடி கிடந்தது
அத்தனை சோகமும்
எம் நெஞ்சம் மறக்குமா ?
ஆக்கம் சிவா TE
0 கருத்துகள்:
கருத்துரையிடுக