இசைக்கவிஞன் எஸ்.தேவராசா எழுதிய புலர்வின் பொளுதின் மலரும் தமிழ்ழீழம்

போரிலே சாதனைசெய்ய
புகழாரம் தந்தோரே
புண்ணியதேசத்தை
புத்தர் பேர்சொல்வோர்
புதைத்து நின்றபோது

அன்னிய ஆதிக்கத்தின் அரவணைப்பில்
அன்டயநாட்டின் அனுசரணையில்
வெந்து கருக வெடி குண்டுகொண்டு
வீரரை விடுதலை
விரும்பிகளை
வெற்றி வாகை என்ற பெயரின்
தமிழ் இனத்தின் உயிர்களை
துட்சமென நினைத்து
துரோகத்தனத்துடன்
முள்ளி வாய்காலில்
மூடி ஒடுக்கிவைத்து
கொள்ளிவைத்த 
கொடியோரே......

நாம்மடிவது ஒருமுறை
மானம் இளக்கான்
தமிழ்ழீழத்தமிழன் என்பதை
வீறுகொண்டு தலைவன் படை
காத்துநிற்க விடிவை இருளாக்கிய
வீரமில்லாக்கோளைகளே-நீங்கள்
நேர்முகம் காட்டாது
நீதிவழி வாழாது
கோழையாய் குறுக்குவழிவந்து
குள்ள நரிவேசம்போட்டு எம்மை
எம்மித்தை முள்ளியில் முற்றுப்புள்ளியாய்
எண்ணி நிற்கும் உமக்கு ----

முடிந்ததென்று நினைக்கும்  அதே வன்னிமண்
வரையும் புது யுகவரலாறு எம்மினத்தால்
அப்போது பொளுதும் புலரும் எம்மினத்துக்காய்
மலரு தமிழ்ழீழம்  புலரின் பொளுதின் பூபாளமாய்
சுதந்திரக்காற்றை எம்மினம் சுவாசிக்க சுதந்திரக்காற்றை
எமது உயிரால் உதிரத்தால்
எழுதுவோம் புதுச்சபதம்
விடிவின் வீச்சோடு
எம்மீழக் கொடியின் உயர்வோடு

ஒலிக்கும் அன்று தேசியகீதம் எமக்காய்
எம்மக்கள் சுதந்திரத்துக்காய்
உலகம் வியக்க உதயமாகும் புலர்பொளுதில் பூபாளகீதம்

ஆக்கம் இசைக்கவிஞன்எஸ்.தேவராசா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக