யாழ், வவுனியாவில் 410 பேரின் உடல்களில் குண்டுச் சிதறல்கள்! - நாடாளுமன்றில் சிவசக்தி ஆனந்தன் !


பாராளுமன்றத்தில் நேற்று விலங்குத்தீவன (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தத் தகவல்களை முன்வைத்தார்.

 
யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்கு அந்தந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் பின்னடிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த ஜூலை மாதம் எட்டாம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமரிடத்திலான நேரடி கேள்வி நேரத்தின்போது வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் குண்டு மற்றும் ஷெல் வீச்சுக்களால் பாதிக்கப்பட்டு அவற்றின் துகள்களுடன் ஆபத்தான நிலையில் பாடசாலை மாணவர்கள் இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்கள் காணப்படுகின்றார்கள். அவர்களுக்கு சத்திரசிகிச்சை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை உடன் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்திருந்தேன்.

அச்சமயத்தில் விபரங்களை வழங்குமாறு பிரதமர் கூறியிருந்ததோடு மீள்குடியேற்ற அமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகியோருடன் கலந்தாலோசித்து உள்நாட்டில் காணப்படும் அவசர வைத்தியசாலைகளில் சிகிச்சையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் கூறியிருந்தார். அத்தோடு தேவை ஏற்படின் வெளிநாட்டு மருத்துவ சிகிச்சைகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனுவடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார். பிரதமரின் இந்த பதிலுக்கு அமைய வடக்கில் உள்ள 5 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கும் விபரங்களை வழங்குமாறு கடிதம்மூலம் கோரிக்கை விடுத்திருந்தேன்.

இக்கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டு 65 நாட்களாகிவிட்டன. வெறுமனே இரண்டு மாவட்ட அரசாங்க அதிபர்கள் தகவல்களை வங்கியுள்ளனர்.அதன்டிப்படையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 410 பேர் இவ்வாறு குண்டுகளுடன் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். 132 பேர் பாடசாலை மாணவர்கள். இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அவசியம். கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அரசாங்க அதிபர்கள் இந்த தகவல்களை வழங்குவதற்கு பின்னடிக்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கு சேவையாற்ற நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் இவ்வாறு பின்னடிக்கின்றனர். 65 நாட்களாகியும் அவர்கள் கடிதம் கிடைத்தது என்றுகூட பதிலளிக்காமை கவலையளிக்கிறது என்றார்.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் 132 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 410 பேர் தமது உடல்களில் ஷெல் மற்றும் குண்டுகளின் சிதறல்களுடன் வாழ்ந்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக