இசைக்கவிஞன் எழுதிய தலைவன் விதைத்த வீர..விதைகள்!

 தலைவன் விதைத்த வீர..விதைகள்
பச்சை வயலென
விதையிட்டு நாற்றிட்டு
விளைந்த தமிழீழ
நினைவை சுமந்து -
எங்கள்
ஆச்சியும் அப்புவும்
அவர்தம் பேரரும்
காத்து நின்றதமிழீழம்


அடக்கிட நினைத்திட்ட
சிங்களர்தன்னையே
பூச்சயம் ஆக்கிய  ஒரு காலம்
வீழ்ச்சியே எமக்கென்று
வீறுகள் பேசுவோர்
பேசிட்டுபோகட்டும்பாவம்

விடுதலை தீயதை
தடைபோடயாரிங்கு
விடைகூற யாரிங்கே வாரும்
முற்பது ஆண்டுகள் வித்திட்ட
மாவீரர் தியாகத்தை ஒருமுறை பாரும்

விடிவு ஒன்று தோன்றும்வரை
முடிவு ஏதும் இல்லை
வீணர்களி வார்தையிலே
தெளிவு ஏதுமில்லை 
எங்கள்
தலைவரின் கொள்கை தவறி நாமுமே
வாழ்வதாக இனியுமே இல்லை..இல்லை



தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம்

இசைக்கவிஞன்  எஸ்.தேவராசா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக