இலங்கையில் தமிழர் தாயகத்தில் படையெடுக்கும் புத்தர் சிலைகள் இன அழிப்பின் கூறுகளே.

இலங்கையில் தமிழர் தாயகத்தில் படையெடுக்கும் புத்தர் சிலைகள் இன அழிப்பின் கூறுகளே.
புத்தருக்கோ புத்த மதத்துக்கோ தமிழர்கள் நாங்கள் எதிரிகள் அல்லர்.
இங்கு சிக்கல் புத்தர் அல்ல. புத்தரின் பெயரால் சத்தமின்றி அபகரிக்கப்படும் தமிழர் நிலங்களும் சத்தமின்றி திணிக்கப்படும் பௌத்த சிங்கள பேரினவாதமும், சத்தமின்றி அழிக்கப்படும் தமிழர் கலை, கலாச்சார, பண்பாட்டு, வாழ்வியல் உரிமைகளும், தமிழ் மக்களின் இயல்பு வாழ்வும், அடிப்படை உரிமைகளும் ஆகும்.
இந்த புத்த சிலைகளை தமிழர் நிலங்களில் "நல்லாட்சி" அரசில் கட்டி எழுப்பி கொண்டு இருப்பவர்கள் வேறு யாருமல்ல. பௌத்த வெறிகொண்ட இலங்கை இராணுவத்தினர். எங்கேனும் ஒரு இராணுவம் கோவில் கட்டும் பணியாற்றுமா? இது தான் தேசத்தை காக்கும் இராணுவ வீரர்களின் பணியா?
மக்களை காக்க வேண்டிய இராணுவம் தமிழ் மக்களை மிரட்டி தமிழர் நிலங்களை அபகரித்து சிங்கள பௌத்த விகாரைகளை கட்டி, சிங்கள குடியேற்றங்களை ஊக்குவித்து, மக்கள் நிலங்களில் இராணுவ தளங்களை கட்டி கொண்டு இருக்கின்றது.
இதை எங்கள் தமிழர் தலைவர்களும் தட்டி கேட்பதில்லை. தமிழர் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த மைத்திரி அரசும் கேட்பதில்லை. சிரித்தபடி கொல்லும் நயவஞ்சனை தலைவர்கள் எங்கள் தமிழினத்தை இருந்த சுவடு தெரியாமல் அழித்து வருகின்றார்கள்.
இந்த அநீதிகளை தட்டிக் கேட்கும் தமிழர்களை மதப் பீரங்கிகளாக எதிர்க்க இப்போ முக நூலிலும் சிலர் ஏவப்படுகின்றார்கள் என்பது வேதனையே.
எம் விழிகளை குற்ற கருவியாக்கி எமது விரல்களை அனுப்புகிறார்கள்.
புத்த மதம் சில நூறு ஆண்டு வரலாறு கொண்டது. தமிழர் வரலாறு பல்லாயிரம் வரலாறு கொண்டது.
இலங்கை தீவு தமிழர்க்கானது என்பதையும் பண்டை தமிழர்கள் மதங்கள் சாதிகள் பிரிவினைகள் இல்லா அறிவியல் சமூகமாக நாகரீகத்தின் உச்ச வடிவினைக்காக அங்கே இருந்தார்கள் என்பதையும் முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
தயவு செய்து மத பிரச்சாரத்திற்காக சிங்கள பௌத்த அரசின் அநீதியை நிலை நாட்ட தமிழர் வரலாற்றை சிதைக்காதீர்கள். பொய்களை புனையாதீர்கள்.
உங்கள் சிக்கல் மத திணிப்பாக இருந்தால் தமிழர் அதற்கு பலியாக முடியாது.
தமிழினத்தின் அடையாளம் மதம் அல்ல. மொழி. உயர் பண்பாடு. அறிவியல்...தமிழரின் பெருமைகளை படித்து விட்டு தமிழினத்தின் வரலாற்றை எழுதுங்கள் உறவுகளே!
நாம் எந்த இனத்திற்கும் எதிரிகள் அல்லர். ஆனால் எவரும் எம்மை அழிக்க பார்த்து கொண்டு இருக்கும் இழிவான சுரணை இல்லா இனமும் அல்ல என்பதில் விழித்துக் கொள்ளுங்கள் என் தமிழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக