சிவா TE எழுதிய தமிழீழ ஈழ கனவோடு

விடுதலை வாழ்விற்காய்
விழி மூடிய உயிர்கள்
வித்துடல் ஆனது
எம் தேச புயல்கள்

தமிழீழ கனவினை
நெஞ்சினில் சுமந்தவர்
தடைகள் யாவையும்
உடைத்தெறிந்தவர்கள்

உடனிருந்த உறவுகள்
கண்ணீரில் நனைய
களமதில் உயிரினை
விடுதைக்காய்
விலையாக கொடுத்தார்கள்

மரணத்தின் மடியினில்
ஈழ தாயின் அரவணைப்பில்
ஈழ கனவோடு இன்றுவரை
உறங்குகின்றார்கள்
விதை குழியினுள் விடுதலை கனவோடு
விழிகளில் கண்ணீரோடு

  ஆக்கம் சிவா TE

0 கருத்துகள்:

கருத்துரையிடுக