வடமராட்சி கிழக்கு துயிலுமில்லத்தில் முன்னாள் போராளிகளால் சிரமதானம்(படங்கள்)

வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்துள்ள 
மாவீரர் துயிலுமில்ல பகுதி இன்று முன்னாள் போராளிகள் கட்சியின் அனுசரணையுடன் அப்பகுதி மக்களின் துணையுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக அங்கிருந்து தமிழ்க் கிங்டொத்திற்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாவீரர்துயிலும் இல்ல பகுதியில் ஒன்றுகூடிய அப்பகுதி மக்களுடன் இணைந்து முன்னாள் போராளிகளும் இணைந்து பற்றைக்களை அகற்றி மாவீரர்களுடைய கல்லறைகள் இருந்த இடங்களை அடையாளப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





கிளிநொச்சி மாட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் நேற்றைய தினம் முதல் சிரமதானப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்யும் பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக