ச-றஞ்சன் எழுதிய திசை நோக்கி .....!!!!!

விடுதலை வேட்கைக்காய் வீறுகொண்டு
உழைத்தாய்... நீ
தமிழீழ தாகத்தினை நெஞ்சிலே
ஏந்தினாய்...நீ
எங்களின் மனங்களில் என்றும்
அழியாமல் வாழ்கிறாய் ...நீ
தாய் மண்ணிற்காய் புலத்தில்
வீழ்ந்த மறவன் ...நீ
வீழ்ந்தாலும் மறையாது வாழ் பவன் ...நீ
உன் ஆற்றாலும் ஆளுமையும்
உன்னை வித்தியாசப் படுத்தியது
அதனால்த்தானே எல்லோரையும்
உன்னை நேசிக்க வைத்த
வித்தியாசமானவன்... நீ
தோட்டாக்கள் துளைத்து உன்
உயிர் மட்டும் பிரியலாம்
பெரும் கணைகொண்டு தகர்த்தாலும்
உன் வீரம் அழியாது.
நீ வீழ்த்தப் பட்டு நன்கு ஆண்டுகள்
ஆனாலும்
உன் புன்சிரிப்பும் உன் செருமலும்
எம் கண்முன்னே வந்து
நிழலாடுகிறது
கனல் மீது நீ நடந்ததை பார்த்துதான்
எம் உயிரிலே உரமேற வீரம் கலந்தது.!
நீ விட்ட இறுதி மூச்சுள்ள காற்று
பட்ட எங்கள் தேகம் சிலிர்க்க... நீ
வீழ்ந்த திசைநோக்கி நடக்கின்றோம்.
விடுதலை வேண்டி .....!!!!
ஆக்கம்ச-றஞ்சன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக