யாழில் தடைகளையும் மீறி சிவாஜிலிங்கம் தலைமையில் திலீபனின் நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது !!


யாழ். நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபியில் தமிழீழ மாவீரர் நாள் நினைவுகூரல் நிகழ்வு நடைப்பெற்றது.
இந்நிகழ்வானது, சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று ( 27 ) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ஐங்கரநேசன், ஆனந்தி சசிதரன் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மாவீரர்களை அடையாளப்படுத்தும் பதாகைகள் வைக்கப்பட்டு, மெழுகுவர்த்தி மற்றும் தீபம் ஏற்றபட்டு மலர்தூவி நினைவுகூரல் நடத்தப்பட்டது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக