மட்டுநகர் கமல்தாஸ் எழுதிய கல்லறை புகுந்தீர்கள்

வெஞ்சமர் ஏவிய வேங்கைகளே !
நெஞ்சமதில் நிறுவிய தோழர்களே !
வீரனாய் செங்கலமாடி
விடை கொடுத்தீர்கள்
செந்நீர் தந்து
கல்லறை புகுந்தீர்கள்

மரணிக்கும் முன்பே
புதைகுழி தோன்றிப்போவோம்
தோளிலே சுமந்து வந்து
தங்களை விதையாய் விதைப்போம்
குருதியில் விடை கலந்து
உறுதி தேடல் தொடர்வோம்

ஓடி மறைந்தீரே உம்மை
தேடி வந்து தொழுகின்றோம்
பாடித்திரிந்த எம் நிலம் பகைவன்
மாடி வீடுகள்
ஆடித்திரிகிறான் அந்நியன்
அகதியாய் அலைகிறது எம் இனம்

பெற்றவள் அழுகை உங்கள்
செவிகள் ஏறும்
தலைவனின் கண்களில்
கண்ணீர் உதிரமாய் கசியும்
விண்மீன்கள் மண்ணிறங்கி
தேஜஸாய் ஒளிரும்

 ஆக்கம் மட்டுநகர் கமல்தாஸ் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக