'இலண்டன் திருக்குமார்' மாவீரர் குடும்பமொன்றிற்கு உதவி நல்கினார்

மாவீரர் மாதத்தில் 'இலண்டன் திருக்குமார்' மாவீரர் குடும்பமொன்றிற்கு முப்பத்து ஆறாயிரம் உதவி நல்கினார்
என்னதான் ஒருபுறம் தாயகம் நிமிர்ந்து வந்தாலும், இன்னொரு புறத்தில் அநேக குடும்பங்கள் யுத்தத்தின் பாதிப்பிலிருந்து நிமிர்வற்று வாழ்கிறார்கள். அதிலும் தங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அர்ப்பணிப்பு செய்த மாவீரர் குடும்பங்களில் அநேகர் பொருளாதார நிலையில் உயர்வற்று தம்வாழ்வு கழிக்கின்றனர். வன்னியில் வறுமை நிலையில் இருந்த மாவீரர் குடும்பம் ஒன்றிற்கான அவசர தேவையொன்றிற்காக இலண்டன்வாழ் புலம்பெயர் உறவு செல்வரட்ணம் திருக்குமார் அவர்கள் சில சகோதரிகளின் ஒத்துழைப்புடன் முப்பத்து ஆறாயிரம் ரூபாயை உடனடியாகவே அனுப்பி வைத்து, குறித்த குடும்பத்தின் அந்த அவசர நிலைமைக்கு உதவியளித்துள்ளார். இப்படியான பணிகள் இவரை இன்னுமாய் உயர்த்துமே.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக