கவிஞர் ரி.தயாநிதி எழுதிய முட்கம்பி..!

முட்கம்பி
வேலிக்குள்ளே
முடங்கினோம்
சில காலம்.!

மூச்சிழந்து
பேச்சிழந்து
முடிவுகள் ஏதுமின்றி
ஏதிலிகளானோம்...!

சத்தமில்லாத
இன அழிப்புக்குள்
அடிக்கடி
பலிகளானோம்...!

பாதுகாப்பு
வலயமின்றி
குவலயத்தில்
குற்றுயிரானோம்..!

கண்டம் விட்டு
கண்டம் தாண்டி
தடையமிழந்தோம்
துண்டங்களானோம்..!

நட்புக்குள்
உறவுக்குள்
நமக்குள் நாமே
துப்பாக்கி வேட்டும்
துயர் பகிர்வுமானோம்..

கேட்டிட அங்கு
யாருமில்லை
பட்டப் பகலில்
பள்ளி மாணவரை
சுட்டுத் தள்ளும்
காவல் நாய்கள்..!

ஏவல் பேய்களின்
ஆட்சியில் நீதிக்கு
தராசில்லை
நாதியில்லாத்
தலைவர்களோடு
சாவுக்கு தேதியிட்டு
நாவுக்கு நங்கூரம்.
இட்ட படி.....நம்மவர்.....

ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக