சிவா TE எழுதிய தலைவனின் கனவை நெஞ்சினில் தாங்கி

தாயின் மடியில்
தவழ்ந்த குழந்தை
ஈழம் என்றே எழுந்தது
புன்னகை பூத்த பூ முகம்
பேச்சாற்றலில் மிகுந்த
மாமலையே
போராற்றல் கொண்ட
புலியின் குணமே
தலைவனின் கனவை
நெஞ்சினில் தாங்கி
நடந்த நெடுமலையே
பேச்சு வார்த்தை
மேசையில் நீ அமர
விழி பிதுங்க முழித்தது
எதிரி படையே
உன் மக்கள் வாழ
உலகெங்கும் நீ திரிந்தாய்
ஒற்றை புன்னகையால்
உலகத்து தலமைகளை
நீ அசைத்தாய்
எம் மக்கள் துயர் தீர
ஓங்கி ஒலித்தது
உன் குரல் உலக நாடுகளின்
பேச்சுவார்த்தை மேசைகளில்
கூவிய குயிலொன்று
குரலோசை எங்கே
இனவாத அரசின் குண்டுக்கு
இரையானதால் விழி மூடி
வித்துடலாய் போனதுவே 

ஆக்கம்  சிவா TE

0 கருத்துகள்:

கருத்துரையிடுக