இறுதி யுத்தத்தின் பின் இன்னமும முள்ளிவாய்க்கால் மக்கள்
மீள்குடியேறாமல்தமது வாழ்விடங்களைத் தொலைத்து வேறு இடங்களில் வாழும் நிலை
தொடர்கின்றது.
2008ம் ஆண்டு இராணுவத்தினர் பெருமெடுப்பில் முல்லைத்தீவைக் கைப்பற்றினர். அப்போது கிளிநொச்சி மாவட்டம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தை தாண்டி ஒரு அடியும் நகர முடியாதவாறுவிடுதலைப் புலிகளின் கடற்புலிகள் மற்றும் தரைப்புலிகளும் பலமாக காவலரண், அரண் அமைத்திருந்தார்கள்.
அச்சூழலில் முள்ளிவாய்க்கால் மக்கள் தமது பாதுகாப்பைகருத்தில் கொண்டு தற்காலிகமாக இடம்பெயர்ந்து வலஞர்மடம், புதுமாத்தளன் உள்ளிட்டபகுதிகளில் குடியமர்ந்தார்கள்.
ஆனந்தபுரம் அதிஉச்ச சமரின் பின் குறித்த மக்கள் தமது சொந்த இடங்களில்மீள்குடியமர்ந்தார்கள்.
ஒரு பெரும் சமர்க்களம் நிறைந்த சூழலில் பல ஆயிரக்காணக்கான பொதுமக்களை தமதுபூர்வீக வாழ்விடங்களில் குடியமர தமது இருப்பிடங்களை பகிர்ந்தளித்தார்கள்.
அதற்குப்பின் முள்ளிவாய்க்கால் மக்கள் தாம் பிறந்து தவழ்ந்த மண்ணிலே கொடூரமாககொல்லப்பட்டார்கள். அவர்களுடன் ஏனைய அப்பாவி பொதுமக்களும் அடங்குவார்கள்.
இது இவ்வாறிருக்க 2009ம் ஆண்டு மே 16,17,18.ல் முள்ளிவாய்க்காலை
இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முன்பே
அவர்கள்இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை
ஏற்பட்டது.
இன்று இறுதி யுத்தம் முடிந்து ஏழு வருடங்களை கடந்தும் குறித்த மக்கள் மீள்குடியேற முடியாமல் கடற்படையினர் அவர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்துள்ளனர். அவர்கள் அவற்றை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான சூழலில் அவர்களின் பூர்வீக நிலங்களின் தற்போதைய நிலை என்ன? அதற்குள்கடறபடையினரின் பயன்பாடு இருக்கின்றாதா? என்னும் பலகேள்விகளுக்கு ஊடகத்தின்பார்வை அங்கே திரும்புகின்றது.
அவர்களின் வாழ்விடங்களின் அடையாளமாக தற்பொழுது கிணறுகள் மட்டும்தான் அங்கேகாணப்படுகின்றன.
தானும் படுக்க மாட்டார் தள்ளியும் படுக்க மாட்டார் என்னும் பழமொழிக்குஏற்றாற்போல் அப்பிரதேசத்தை படையினர் தமது தேவைக்கு பயன்படுத்தவும் இல்லை.பொதுமக்களிடமும் கையளிக்கவில்லை.
சரி இனி அந்தப் பக்கத்தில் இருக்கும் கிணற்றுக்குள் இறங்கிப் பார்ப்போம் என்றுஇறங்கினால் கிணற்றுக்குள் தமிழ் மக்களின் பூர்விக சொத்துக்கள்புதைந்து கிடக்கின்றன.
அவர்களின் பாட்டன், முப்பாட்டன் வழியில் தொடர்ந்த தளபாட சொத்துக்கள் தண்ணீரில்எழுதிய கதை போல தண்ணீருக்குள் புதைந்துள்ளது.
குறித்த செயலால் நியாயமானது அல்ல என்று இராணுவ உயர் அதிகாரி ஒருவர் அவ்வூர்மக்களுக்கு கருத்து தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
2008ம் ஆண்டு இராணுவத்தினர் பெருமெடுப்பில் முல்லைத்தீவைக் கைப்பற்றினர். அப்போது கிளிநொச்சி மாவட்டம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தை தாண்டி ஒரு அடியும் நகர முடியாதவாறுவிடுதலைப் புலிகளின் கடற்புலிகள் மற்றும் தரைப்புலிகளும் பலமாக காவலரண், அரண் அமைத்திருந்தார்கள்.
அச்சூழலில் முள்ளிவாய்க்கால் மக்கள் தமது பாதுகாப்பைகருத்தில் கொண்டு தற்காலிகமாக இடம்பெயர்ந்து வலஞர்மடம், புதுமாத்தளன் உள்ளிட்டபகுதிகளில் குடியமர்ந்தார்கள்.
ஆனந்தபுரம் அதிஉச்ச சமரின் பின் குறித்த மக்கள் தமது சொந்த இடங்களில்மீள்குடியமர்ந்தார்கள்.
ஒரு பெரும் சமர்க்களம் நிறைந்த சூழலில் பல ஆயிரக்காணக்கான பொதுமக்களை தமதுபூர்வீக வாழ்விடங்களில் குடியமர தமது இருப்பிடங்களை பகிர்ந்தளித்தார்கள்.
அதற்குப்பின் முள்ளிவாய்க்கால் மக்கள் தாம் பிறந்து தவழ்ந்த மண்ணிலே கொடூரமாககொல்லப்பட்டார்கள். அவர்களுடன் ஏனைய அப்பாவி பொதுமக்களும் அடங்குவார்கள்.
இன்று இறுதி யுத்தம் முடிந்து ஏழு வருடங்களை கடந்தும் குறித்த மக்கள் மீள்குடியேற முடியாமல் கடற்படையினர் அவர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்துள்ளனர். அவர்கள் அவற்றை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான சூழலில் அவர்களின் பூர்வீக நிலங்களின் தற்போதைய நிலை என்ன? அதற்குள்கடறபடையினரின் பயன்பாடு இருக்கின்றாதா? என்னும் பலகேள்விகளுக்கு ஊடகத்தின்பார்வை அங்கே திரும்புகின்றது.
அவர்களின் வாழ்விடங்களின் அடையாளமாக தற்பொழுது கிணறுகள் மட்டும்தான் அங்கேகாணப்படுகின்றன.
தானும் படுக்க மாட்டார் தள்ளியும் படுக்க மாட்டார் என்னும் பழமொழிக்குஏற்றாற்போல் அப்பிரதேசத்தை படையினர் தமது தேவைக்கு பயன்படுத்தவும் இல்லை.பொதுமக்களிடமும் கையளிக்கவில்லை.
சரி இனி அந்தப் பக்கத்தில் இருக்கும் கிணற்றுக்குள் இறங்கிப் பார்ப்போம் என்றுஇறங்கினால் கிணற்றுக்குள் தமிழ் மக்களின் பூர்விக சொத்துக்கள்புதைந்து கிடக்கின்றன.
அவர்களின் பாட்டன், முப்பாட்டன் வழியில் தொடர்ந்த தளபாட சொத்துக்கள் தண்ணீரில்எழுதிய கதை போல தண்ணீருக்குள் புதைந்துள்ளது.
குறித்த செயலால் நியாயமானது அல்ல என்று இராணுவ உயர் அதிகாரி ஒருவர் அவ்வூர்மக்களுக்கு கருத்து தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக