கவிஞர் ரி.தயாநிதி எழுதிய இன்னல் களைய

இனத்தின்
இன்னல் களைய
இளமை தொலைத்து
இரக்கம் சுரக்க
களம் இறங்கிய
கோதைகள்...

அல்லும் பகலும்
அனுவரதமும்
மண்ணும் மக்களும்
என மாய்ந்தவர்.
முள்ளி வாய்க்கால்
வரை மூச்சு பிடித்து
முயன்றவர்....

காட்டிக் கொடுப்பும்
சர்வத்தின் நய
வஞ்சகமும்
இவர்களை இரை
கொண்டது....
எல்லைக் காவல்
கட்டுடைந்தது..!

இன்று பழைய
குருடி கதவைத்
திறந்த கதையாகி
சிங்களம் கொடூர
கம்பளம் விரிக்குது
இத்தனைக்கும்
இருப்பவர்கள்
இருந்திருந்தால்......?


 ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக