தமிழீழ தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் சிறுவர் இல்லம்

ஒக்டோபர் 23,1991 - யுத்த சூழ் நிலையில் பெற்றோர்களை இழந்த பிள்ளகளின் பராமரிப்புக்காக தமிழீழ தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அப்போது தமிழீழ தேசியத் தலைவரால் அனுப்பபட்ட வாழ்த்துச் செய்தியில்
" வரலாற்று பெருமைமிக்க சுதந்திர போராட்ட சூழலில் இந்த செஞ்சோலை வளாகத்தில் நாம் இன்று இளம் விதைகளை பயிரிடுகின்றோம்.
இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விருட்சங்களாய்
மாறி ஒரு காலம் தமிழீழத்தின் சிந்தனைசோலையாகச் சிறப்புற வேண்டும் என்பதே எனது ஆவல்.
இந்த புரட்சிகரமான பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட எனது நல்லாசிகள் " என்றார்.!!!
(Rasan Sri)
"தாயில்லா குழந்தைகளுக்கு எல்லாம் தாயாக இருந்த தாயுமானவன் மடியில் எங்கள் தாயில்லா குழந்தைகள் தாயில்லா கவலை இன்றி கொஞ்சி மகிழ்ந்து குலவி மகிழ்ந்த அந்த அழகிய பொற்காலம் கனவாகி கலைந்ததுவோ.. - --- எங்கள் மண்ணில் அநாதைகள் என எவருமே இல்லாதிருந்த காலம் அன்று!!!
இன்று...??????
தன் கல்விக்கும் பசிக்கும் சாராயம் விற்கும் குழந்தைகள், பசிக்காக பிச்சை எடுக்கும் சிறுவர்கள்..... எத்தனை கோடி துன்பம் கண்டோம் எங்கள் தாயான தலைவன் இல்லா இந்த காலங்களில்.
1991 அக்டோபர் 23ம் நாள் தொடங்கப்பட்ட இவ்வில்லத்தில் 2005 வாக்கில் 242 பெண் பிள்ளைகள் பராமரிப்பில் இருந்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக