கவிஞர் ரி.தயாநிதி எழுதிய எமக்கென்றோர் கொடி பறக்கும்.


விழிகள் மடல் மூடிட
உதடுகள் திறந்திட
உள் நா அசைந்திட
மூக்குக்கும் நுகர்ந்திட
முடியாத நிலையெனில்
கோமா எனலாமா!

பார்த்த இடங்கள்
பாழடைந்து போயின.
பார்த்த மனிதர்கள்
காணாமல் போயினர்.
அடுத்த தலை முறையினர்
அகரம் மறந்து போயினர்.
சிங்காரத் தமிழ் சிதைந்திட
நற்றமிழ். வீசிய தென்றல்
நாணிக் குறுகிட
பிற மொழிக் கலப்பு
பிறப்பெடுத்து உலைக்குது.!

கந்தகம் கலந்த நஞ்சு
தேசக் காற்றில் கலந்து
குஞ்சுகளின் சுவாசத்தில்
உறைந்ததினால் விளை
நிலத்தில் விஞ்சியது சாவு..!
போர் முடிந்ததாய் கங்கணம்
பட்டி தொட்டி எங்கனும்
இன்னமும் காவலரண்.!

பாது காப்பு வலையங்கள்
நவீன கொலைக் களங்கள்.
எஞ்சிய தமிழருக்கு
அதுவே பலிக் களம்..
இந்திய சீன பாக்கியுடன்
ரூசியா ஆயுத வினியோகம்.
பெரும் போர் நடந்தது
தாக்குப் பிடித்தது எங்கள்
படை.!காட்டிக் கொடுப்பினால்
கை விட்டுப் போனது விடியல்.

நாட்டியம் போடுது
நாட்டில் நரிப்படை.
ஐநாவும்! அகிலமும்
இயங்க மறுக்கினம்
இம்சை அரசனை கழு
ஏற்றிட எவர் மறுப்பினும்
ஐந்தாம் கட்டம் ஆரம்பம்
என ஆய்வுகள் அச்சுறுத்து..!

அழிவினை நிறுத்தி அவரவர்
உரிமையைப் பகிர்! பகை விலகும்.
எமக்கென்றோர் கொடி பறக்கும்.
அதுவே எங்கள் மறவர் கொடி
தினமும் போற்றும் புலிக் கொடி..!
 
ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக