எழுவோம் எழுர்ச்சிகொள்வோம் புலரும் புதுஈழம்

ஒரே இலட்சியத்தில், ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக, எமக்கு முன் தடைக்கல்லாக உருவாகியிருக்கும் எல்லாத்தடைகளையும் உடைத்தெறிந்து நெஞ்சுறுதி கொண்ட வேங்கைகளாக மூச்சோடும் வீச்சோடும் விடுதலையை வென்றெடுக்கும் வரை ஒரு போதும்ஓயோம் என்ற ஓர்மத்துடன் ஜெனிவா முன்றலில் அணியமாவோம்.
தாயக விடுதலைக்காக தமது உயிரை ஈகம்செய்த மான மறவர்களின் கனவுகளை நெஞ்சில்சுமந்து புறப்பட்டு வாருங்கள் உறவுகளே. குனிந்து போகவும், வளைந்து விடவும், தலை சாய்ந்து விடவும் நாம் நாணல்கள் அல்ல, சூறைக்காற்றையே சுற்றவிட்டுதலைநிமிர்ந்து நிற்கும் நெடும் பனைகள் நாமென்று உலகின் முன் உரத்துச்சொல்லஉறுதியுடன் வாருங்கள் ஜெனீவா முன்றலுக்கு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக