பவித்ரா நந்தகுமார் எழுய வரித் தொப்பி

வரித் தொப்பி
செம்படை வீரர் தரித்த
வரியும்
தமிழன் ஏற்றிய
புலியின் மகுடமும்
மங்கா புகழ் பாடும்
தரணியில்
தமிழன் உள்ள வரை
சல்லடை போட்டு
நீ குண்டுகளால் துளைத்த
போதும்
சங்கடம் இன்றி
ஆயுதங்கள் தரித்திடுவர்
வரிப்புலிகள்
உறுமிடும் சிறுத்தை
போல்
வரியுடை கண்டால்
பகையும் கிலி கொள்ளும்
வெகு தூரத்திலும்
கழுத்தில் நஞ்சணிந்து
வீர தலைக்கவசம்
அணிந்து
விரைந்திடும்
புலி வேங்கைகளின்
காலடியில் நீ
மண்ணாய் இருக்க
தகுதியற்றவன்
கோழைகள் போல
பல உலக கோழைகள்
சேர்ந்து அழித்த
மமதையில்
நீயிரு
உன்னையறியாமல்
உன் கதை முடிக்க
பதுங்கி இருக்கிறது
புலிப்படை
ஈழம் விரியும்
உன் தேசம் அடிமை
சாசனம் ஆகும்
சிங்கள தேசம்
அடையாளம் அற்றே
போகும்
இயற்கை உனை அழிக்கும்
பகை முடிப்போம்
விரைவில்
ஆக்கம் பவித்ரா நந்தகுமார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக