கவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய பிரசவங்கள்..!.

தமிழ் இனத்தில்
தளைத்த காரணம்
ஒன்று தான்
இவனுக்கான
முள்வேலி..

எழுச்சி! புரட்சி
கிளர்ச்சி! யுத்தம்
புலி மாமாக்கள்
கிளாலிக் கடல்
நந்திக்கடல்
பேச்சு வாக்கில்
கேட்ட வார்த்தைகள்...!

மரண ஒலி
அக்கம் பக்கம்
பிணக் குவியல்
கந்தக வாசம்
இவை இவனை
புடம் போடுகின்றது..!

தடம் தேடுகின்றான்
தயாராகின்றான்
எட்டும் தூரத்தில்
எதுவுமே இல்லை
காலம் இவனை
மாற்றுகின்றது.
மரண பயம்
மறைகின்றது.
புயங்களில் வீரம்
முறுக்கேறுகின்றது.

முள்ளிவாய்க்கால்
பிரசவங்கள்
முடிவுக்கு
முடிவு கட்டும்....!


ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி


0 கருத்துகள்:

கருத்துரையிடுக