பவித்ரா நந்தகுமார் எழுதிய அக்கினி குஞ்சுகள்

இலட்சியம் எம் பாதை
பகையே வழி விடு
கரும்படை நாம்
கருத்தரித்துள்ளோம்
உனை அழிக்க
அக்கினியில் நடை போட்டு
வெந்தனல் உடல்
வடித்து
காவியத்தில் முகமறியா
பெயர் எழுதி
அக்கினி சிறகாய்
தலைவனின் குழந்தைகள்
வந்துள்ளோம்
பகையே தூர ஒடி விடு
இரத்தம் உறைய
உடல் கனக்க
மரணத்தை எழுதி
வைத்தே வந்துள்ளோம்
பயம் எமக்கல்ல
உமக்கடா கொடு இனமே
செங்கடலும் எமதடா
அழகிய ஈழத்தீவும் எமதடா
வந்தோட்டி நீயடா
நிலையான இனம் எமதடா
பாசறையும்
பகர்கிறது உறுதி மொழி
மாவீரனின் கனவும்
மலர்கிறது எமது
களத்தில்
போலியாய் சத்தமிடும்
பீரங்கிகள் நமல்ல
உறுமி விரட்டி விடும்
புலியின் வடிவமே நாங்கள்
விரித்து விட்டோம்
அக்கினி சிறகுகளை
மடிந்து போ
பகையே நீ

ஆக்கம் பவித்ரா நந்தகுமார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக