வியாழன், ஜூன் 23, 2016 - ஈழத் தமிழர்களின் இறைமையை பாதுகாப்பதற்கு, சமஷ்ட்டி தேவை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள அடிப்படைவாதிகள் பார்க்கும் கோணத்திலேயே அரசாங்கமும் பார்க்கக்கூடாது.
தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு கிழக்கை இணைத்து, சமஷ்ட்டி அடிப்படையில் தீர்வினை முன்வைப்பதே ஒரே வழி என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள அடிப்படைவாதிகள் பார்க்கும் கோணத்திலேயே அரசாங்கமும் பார்க்கக்கூடாது.
தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு கிழக்கை இணைத்து, சமஷ்ட்டி அடிப்படையில் தீர்வினை முன்வைப்பதே ஒரே வழி என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக