கவிஞர் வன்னியூர் செந்தூரன் எழுதிய செங்கொடி சீறும்

மயானங்கள் ஆர்ப்பரிக்கின்றன
தியாகங்கள் திருடப்படுவதால்
எலும்புக்கூடுகளும் இரும்பேந்தலாம்
வலுக்பெற்றகோரம் அரங்கேறலாம்

அல்பிரட் துரையப்பா மட்டுமல்ல
கதிர்காமர் வரை முளைத்துவிட்டனர்
களையெடுப்பு மீண்டும் வருமென
பலியெடுப்பு பத்திரங்கள் செல்கிறதாம்

ஐம்பூதங்களும் ஆத்திரத்தில்
அழிக்கலாம் புத்தசாசனத்தை
மகாவம்சமும் மண்ணோடுசேர
மலைபோல வாய்ப்புள்ளதாக ஐதீகம்

சோழக்கொடி மீண்டும் சிவந்தாடுமென
செண்பகங்கள் சிலிர்த்துச்சிரிக்குமென
அம்பகாமத்தில் விமானங்கள் இறங்குமென
அம்பாந்தோட்டை கள்வனுக்கு நடுக்கமாம்

எது எப்படியோ அது நிகழும் ஒருநாள்
சக்கரச்சுழற்சியில் வீழ்வின் பின் எழுகைதானே
ஆண்டகொடி மீளாமல் அழியாது ஈழபூமி
அகிலத்தின் சுழற்சியே அர்த்தப்படும் இதற்கு
– வன்னியூர் செந்தூரன்–
ஆக்கம்  கவிஞர் 

வன்னியூர் செந்தூரன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக