உண்மையின் தரிசனமாக வடிவம் கொள்ளும்.

சிங்களவன் கடந்த 30 வருடங்கள் எங்கள் தமிழ் மக்களை கொன்று குவித்தும் இன்னும்
அவன் கொடூரம் அமைதியான முறையில் தனது வெறியை நடத்தியும், நடித்து கொண்டும் இருக்கின்றான்.தமிழீழ விடுதலை புலிகள் இல்லை என்ற ஒரு ஆணவமும், இனி ஸ்ரீலங்காவில் சிங்களவன் மட்டுமே
ஆள முடியும் என்ற ஆர்பரிப்பும் அவனிடம் இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது ஸ்ரீலங்காவில்
வாழும் எஞ்சிய தமிழரும் சிங்களவனுக்கு வால்பிடிக்கும் தமிழரும், உயிருக்கு பயந்து வேறு வழியில்லை என்ற நிலையில்
நடைப்பிண வாழ்க்கை வாழும் தமிழரும் அங்கு உள்ளனர். இதில் ஒரு பகுதி தமிழரை அவன் தனது விவேகத்தால்
அவர்களுக்கு பணம் கொடுத்து ''இசை' என்ற ஒரு ஆயுதம் அவனுக்கு ஒரு பெரும் புள்ளியாக உள்ளது.
இதை வைத்து இப்போது ஆரம்பித்து விட்டான் தமிழர்களின் -தமிழீழம்- என்ற தீயை அழிப்பதற்கு!புலம்பெயர் நாடுகளில் ஆரம்பித்து 4 வருடங்கள் மேலே ஆகிவிட்ட்து. குறிப்பாக வெளிநாட்டில் 2-3 கலைஞர்களை வைத்து ஆரம்பித்த அவன் இன்று 10கும் மேற்ப்பட்ட தமிழரை உருவாக்கி விட்டான்.
அண்மைக் காலங்கள் நீங்கள் லண்டன்,
ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் கழியாட்டங்கள் கிழமைக்கு ஒன்று என்று பிரமாண்ட முறையில் வந்து கொண்டே இருக்கின்றது.
ஒரு சில நகைசுவை நடிகர்கள், பாடகர்கள் என்று இந்த பிரபல்யம் தேடும் தமிழர்கள் விலைக்கு போய்க்கொண்டே இருக்கின்றனர்.
ஐரோப்பாவில் '' I am a srilankan ' என்று கூறும் தமிழரை அவன் உருவாக்கியதும் அவனுக்கு பெருமை தேடிக் கொண்டே போகிறது.
இங்கே பிறந்த பிள்ளைகளில் பலருக்கு தமிழீழம் என்றால் என்ன என்று கூட தெரியாத வாழ்க்கையை இந்த புலம்பெயர் மக்கள் உருவாக்கியதும்
எமக்கு ஒரு சாபக்கேடு என்றே கூற வேண்டும். சிங்களவன் போன்ற தீய சக்திகள் எங்கள் மொழி, கலை ,பண்பாடு யாவிலும் கைவைத்து
எம்மை அழிப்பதே அவன் திட்டமாகும். லண்டன் மாநகரில் இப்போது புதிதாக வடிவம் கொள்கிறது 'கழியாட்ட விடுதிகள். இங்கே போகும் பெண்கள் ஆடைகள்
கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அவர்களது கட்டாய விதிமுறையாகும்.
ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள விரும்புகின்றேன் . இவர்களை நாம் வெகு விரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்.
தலைவரின் வழியில் ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் இங்கே தேசிய வழியில் பயணித்து கொண்டு உள்ளனர்.
எமக்காய் பகையோடு போராடி எம்மை நினைத்து மண்மடியில் விழுந்த மாவீரர்களின் கனவுகளை ஒரு காலமும் நாம் புதைக்க மாட்டோம்.
தலைவர் எங்களுக்காக விட்டுச்சென்ற பணிகளை தொடரவே இது போன்ற கேள்விகளை உங்கள் முன் வைக்கின்றோம்.
‘’ஆதங்கம்’’ என்ற புதிய வடிவம் தாங்கும் இந்த நிகழ்ச்சி புலம்பெயர் நாட்டில் இருக்கும்
உண்மையின் தரிசனமாக வடிவம் கொள்ளும்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக