இசைக்கவிஞனின் எஸ். தேவராசா எழதிய விழித்தெழுதமிழா........

அடிமேல் அடிபட்டும்
அடிமையாய் வா‌ழ்வோ‌மோ....?
ஈழத்தமிழா....
கொடிய
அரக்கன்கொள்கைமாறுமோ....?.சொல்நேசத்தமிழா.....

அடித்திட சிங்களம்
அடங்கிட எம்மினம்
விழித்தலை தந்தது
தலைவனின் 
தரிசனம்
 அதை நீ மறந்தாயோ...சொல்...?
நாம்  அடி கொடுத்திட கொடுத்திட
தன் நிலைவிட்டு ஓடியே
சிங்களம் சென்றதை மறந்தா
யோ..?
அங்கு எம்மவர் செத்துத்தான் மாய்வேன்
என்று பயந்தாரோ சொல்....?


முள்ளியில் கொள்ளியை வைத்ததாய்
எண்ணி நீ
தாய் அவள் நினைவதை
மறந்தாயோ..--?
அண்ணன் சொல்லியே நின்ற
தாரக மந்திரம் தன்னை நீ என்றுமே மறந்தாயோ...?
வீசிடும்காற்றில் சுதந்திரம் இல்லை
 வீணர்கள் வார்த்தை நிரந்திரம் இல்லை
சாவதுமேலே
சத்தியம்,கால்களை செய்த--வீரர் இலட்சியம் மறந்திட்டல்
நீ..தமிழ் இனமில்லை
ஈழ...சத்தியத்தாயின் பிள்ளையு
மில்லை...


கொட்டிய குருதியில்
கால்களைபதிக்கையில்- அங்கே
கொதித்திடவில்லையா உன் குருதி
சத்திய வேள்வியில் சாய்திட்டோர்
எண்ணமே
 தாெட்டிடவில்லையா உன் நினைவில்-?
முள்ளியில் கொள்ளியில்
மூடிந்ததா எம்கொள்கை..?
மூடனே நீ எண்ணிப்பார்
அண்ணன் சொல்லையே நீ
மறப்பாயோ..?
ஆதிக்க வெறியரின் செயல் மறந்தாயோ  ?
இலட்சியம் மறந்திட்டல்
நீ..தமிழ் இனமில்லை
ஈழ...சத்தியத்தாயின் பிள்ளையு
மில்லை...

 
 ஆக்கம்  இசைக்கவிஞனின் எஸ். தேவராசா  



0 கருத்துகள்:

கருத்துரையிடுக