கவிஞர் எழுத்தாளர் தயாநிதிய தீக்கிரை....!

அறிவு
வயல் எரிந்தது
ஆனாலும்
தமிழன் அறுவடை
குன்றவில்லை.

எப்படை கொண்டும்
அழிக்க முடியாத 
கொடை தமிழறிவு
சென்ற இடமெல்லாம்
வென்று நிமிரும்
சிறார்கள் படை..!

திரும்பும் இடம்
எங்கினும் சாதனைத்
திடல்.! விட்டதைப்
பிடிக்கும் பாய்ச்சல்
கல்வியும் செல்வமும்
கை வசம். வீரம்
மட்டும் கட்டுக்குள்.
தூரம் அதிகமில்லை.!

கூலிப்படை கொண்டு
அறிவுப் பட்டறையை
பற்றவைத்தான்
காடையரைக் கொண்டு
சொத்தழித்தான்.
உலகப் படை கொண்டு
வீரத்தில் கைவைத்தான்..!

அழிந்ததாய் அழித்ததாய்
நினக்கும் எவையும்
அழியவில்லை..இதை
அறிவிழந்தவன்
அறியும் நாள் தூரமில்லை
தரப்படுத்தல் தடை தாண்டி
உலகுக்கே உரமிடும்
எங்கள் அறிவு ஜீவிகள்
உருவாகும் தளங்களில்
இருந்து உரைப்போம்
காலம் நம் கையில்....
வாழும் வரை போராடு
வையம் நம் வசம்..!


ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி



0 கருத்துகள்:

கருத்துரையிடுக