சேமமடுவூர் சிவகேசவன் எழுதிய சர்வதேசம் எம்மை ஏமாற்றியது


சமவுரிமை வேண்டுமென 
சமர் புரிந்த தமிழ் இனமே !
சர்வதேசம் உதவுமென்று 
ஏமார்ந்து போனோமே!

குண்டு மழை உடல் துளைக்க 
குருதியில் நாம் குளித்தோம் 
வைக்கோல் குவியல்கள் போல் 
வீதியெங்கும் பிண மலைகள்

வெள்ளைக்  கொடியேந்தியோரும் 
கொடூரமாய் கொல்லப்பட்டார் 
தன்மான மறத்தியரும் 
உடல் கிழித்து கசக்கப்பட்டார்

சர்வதேசம் உயிர் காக்க வருமென்று 
நாம் நம்பி தவித்து நின்றோம் 
அண்டை நாடு இந்தியாவின் 
வருகைக்காய் தவமிருந்தோம் 

தமிழர் இனம் அழியும் வரை 
யாரும் இங்கு வரவில்லை 
நாம் அழிந்த பின்பு  இங்கு 
அறிக்கைகள் பல விட்டார்

அச்சிட்ட அறிக்கைகளை திருத்துவதில்
 ஐ நா சபை என்றுமே முதல் இடம் தான்!
நீதித் தேவதையின் கண்களும் குருடாகி விட்டது 
சர்வதேசமும் தமிழர் முதுகில் குத்தியதால்.


எமது தேச உணர்வுடன் ஆக்கம்
 சேமமடுவூர் சிவகேசவன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக