சுதர்சன் எழுதிய நானும் பயங்கரவாதி ஆக்கப்படலாம்

அவலம் கொண்ட
மண்ணில்
இனம் திண்ற மண்ணில்
உரிமை உடமை பற்றி
பேசினால் நானும் 
பயங்கரவாதி 
ஆக்கப்படலாம்


உணர்வின்றி 
ஜடமான பாழடைந்த 
மண்ணில்
விடுதலை வேண்டி 
இனத்தை பற்றி 
பேசினால் 
என்பெயரும் பொறிக்கப்படும்
துரோகிகள் வரிசையில்
உயிரோடு புதைத்து 
விட்டு
நாளை கூறுவர் 
இனந்தெரியாத 
சடலம் என்று

குருதி வடிந்தோட
பிணங்களில் நடந்தோம்
விடுதலை வேண்டி 
ஆயுதம் தரித்தோம்
வெறுமைகளை 
துரத்திட
"ஈழம்" வளர்த்தோம்
அடையாளம் அற்ற
எமை 
முகமூடி உலகிற்கு 
அடையாளப்படுத்தினோம்

தூங்கிய இளம் 
சமூகத்தை 
தட்டி எழுப்பினோம்
மாவீர தியாகம்
கண்டோம்
மறவர்களை தெய்வம்
ஆக்கினோம்
வறண்ட தேசத்தை
வசந்தம் ஆக்கினோம்
படிந்த இரத்த 
கறைகளை
துடைத்தோம்
இவை தவறென 
காட்டிய புரட்டு
உலகே 
உமக்கு நாம் 
பயங்கரவாதியே

சகோதர இனம் 
என கைகுலுக்கிய எமை
முதுகிலே
குத்திவிட்டு
வெற்றி எனும் 
பதாதை கட்டி
குருதி குடித்து விட்டு
வாழும் நீங்கள் 
பயங்கரவாத அரசல்ல
நாம் பயங்கவாதியே
இதனால் நாளை 
எனக்கும் குத்தப்படும் 
முத்திரை 
"பயங்கரவாதி"

ஆக்கம் சுதர்சன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக